Monday, July 30, 2012

கடுகு



கருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ அந்த அளவிற்கு எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது.

5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விடகருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.

சத்தான கடுகு
கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகம் செரிந்துள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது.

மைக்ரேன் தலைவலி
கடுகானது மைக்ரேன் தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. அதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தடீஸ், குறைந்த ரத்த அழுத்தம் போன்ற வைகளை குணமாக்குகிறது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

ஜீரணக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுகு சிறந்த மருந் தாகும். ஜீரணத்தை தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.

உணவு உண்பதற்கு முன்பு கருப்பு கடுகினை 20 நிமிடம் ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து குடித்து வர ஜீரணசக்தி கிடைக்கும். அஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.

சைனஸ் கோளறு நீங்கும்
ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.

விஷ முறிவு மருந்து
சிலர் தெரிந்தோ தெரியாமலோ விஷம் சாப்பிட நேரிட்டால் அவர் களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் விஷமானது வெளி யேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

சிறுநீர் கோளாறுகள்
கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம். கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்

கருப்பை கட்டி
கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமை யலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும். கருப்பைக் கட்டியைச் சுருக்குவதில் கடுகு எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறையும் கடுகு மற்றும் சீரகம் போன்றவற்றைத் தாளிக்க நீங்கள் கடுகெண்ணெயைப் பயன்படுத்தவும். வயிற்றின் மீது வெளிப்பூச்சாகவும் கடுகெண்ணெயை வெதுவெதுப்பாகப் பூசி, காலையில் வெந்நீரில் குளித்துவர, வலி நீங்கும். கடுகானது பெண்களின் மெனோபாஸ் கால சிக்கலை நீக்குகிறது.
நல்ல உறக்கத்தை தருகிறது.

மருதாணி

மருதாணி பற்றிய தகவல் !!!!


இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல்வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம்.மருதா‌ணி இலையை கைக‌ளி‌ல் வை‌ப்பதா‌ல் ப‌ல்வேறு பய‌ன்களை பெ‌ண்க‌ள் பெறு‌கிறா‌ர்க‌ள்.

இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.

மருதாணியின் பயன்கள்

மருதா‌ணி இலையை அரை‌த்து கைககளு‌க்கு வை‌த்து வர, உட‌ல்வெ‌ப்ப‌ம் த‌ணியு‌ம்.

சிலரு‌க்கு மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ல் ச‌ளி ‌பிடி‌த்து ‌விடு‌ம்.இத‌ற்கு மருதா‌ணி இலைகளை அரை‌‌க்கு‌ம் போது கூடவே 7அ‌ல்லது 8 நொ‌ச்‌சி இலைகளை சே‌ர்‌த்து அரை‌த்து வை‌த்து‌க்கொ‌ள்ளலா‌ம்.

மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம்வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த பய‌ன்க‌ள் எ‌ல்லா‌ம் த‌ற்போது கடைக‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் மருதா‌ணி கோ‌ன்க‌ளி‌ல் ‌கிடை‌க்கவா‌ய்‌ப்பே இ‌ல்லை எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொள்ள வேண்டும்

சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம்.இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது.

மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்துஅரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌ம்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.

தோல் நோய்


தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.

புண்கள்


ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர


இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மை


தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி


உ‌ள்ள‌ங்கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌ல் மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது வச‌ம்பு, ம‌ஞ்ச‌ள் க‌ற்பூர‌ம் சே‌ர்‌த்து அரை‌‌த்து, ஆ‌ணிஉ‌ள்ள இட‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து க‌ட்டி வர ஒரு வார‌த்‌தி‌ல்குணமாகு‌ம்.

படைகள்


கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இளநரையை போக்கும் மருதாணி

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.

பேரிச்சம் பழம்




பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது. 

பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு. 

தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும். 

உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும். 

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. மேலும் பி1 வைட்டமின் 26 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. 

இரும்புச் சத்து 30 மில்லி கிராமும், சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும் உள்ளது.

பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்க முடியும். 

மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வையும் பேரிச்சம் பழம் உட்கொள்வதால் போக்க முடியும். 

இள‌ம் பெ‌ண்க‌ள் பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு இர‌த்த சோகை உ‌ள்ளது. இதனா‌ல் குழ‌ந்தை‌ப் பேறு காலக‌ட்ட‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌கிறது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க பே‌ரி‌ச்ச‌ம் பழ‌த்தை உ‌ட்கொ‌ள்ளு‌ங்க‌ள் இர‌த்த சோகையை‌ப் போ‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். 

வளரு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு பே‌ரி‌ச்ச‌ம் பழ‌ம் கொடு‌த்து வ‌ந்தா‌ல் அது அவ‌ர்க‌ளி‌ன் ஆரோ‌க்‌கியமான வள‌ர்‌ச்‌சியை உறு‌தி செ‌ய்யு‌ம் எ‌ன்ப‌தி‌ல் ஐய‌மி‌ல்லை. 

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது

Saturday, July 28, 2012

மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!



ரு நண்பர்கள்…
பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன்.
அறை வாங்கியன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.
விரல்களால் இப்படி எழுதினான்:
“இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!”
மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள்.
வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள்.
நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள்.
கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. ஆஹா.. புதைகுழியில் சிக்கிக் கொண்டான் அவன்.
நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன்.
உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீதமர்ந்தான். ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி எழுத ஆரம்பித்தான்.
“இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்”
இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்..
“நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏனிப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா?”
நண்பனின் பதில்…
“யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்!”

இளநீர்





*மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.

*இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.

*இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

*ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

*இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

*இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

*இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

*இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

இந்தாப்பா உன் சந்தோஷம்!



ர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல.
சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்!
சரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, பொண்ணு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான். ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல…
சீ போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.
உடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.
அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, “குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…,” சொல்லி கும்பிட்டான்.
எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.
அதில் கண்ணை தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும்… துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.
அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான். கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!
துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!
அந்த கோடீஸ்வரனைப் பாத்தார். “என்ன கண்ணா பயந்துட்டியா…  இந்தா  உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…” என்று திருப்பிக் கொடுத்தார்.
சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.
இப்போது அந்த துறவி கேட்டார்…
“என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!” என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்!
எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!

வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?



ரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.
எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.
என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?
கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.
உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்…வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”
“ஆ.. நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”
நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.
தலை…!
வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.
அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!
துணைத் தளபதி வந்தான். ‘நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.
“ஆமாம்… உண்மைதான்” என்படி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.
நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!

மௌன பூகம்பம் - -வைரமுத்து


























அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்


பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.


நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"நீயும் என்னைக்
காதலித்தாயா?"


-வைரமுத்து

பூமி வெப்பமடைதல்



" மனிதனுக்காக படைக்கப்பட்ட உலகம் முடிவால் அவனாலேயே அழிக்கப்படும்"-பைபிள்
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைக்கப்பட்டவை இவை. ஆம், நிச்சயம் உலகம் உறுதியாக அழிவை நோக்கி போகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வெயிலின் உக்கிரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருவதை கணக்கீடுகள் காட்டுகின்றன. இப்படி உயரும்  வெப்பத்தை தாங்கும் சக்தி மனிதன், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு இல்லை. எனவே பூமிக்கு ஏற்பட போகும்  அழிவு  எந்த உத்தியாலும் தடுக்க முடியாததாக இருக்க போகிறது. உயர போகும் வெப்பம் மனித குலத்தை கருக்கி அழிக்க நேரிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

இந்த பேராபத்தை தடுக்க கோரி மதுரையில் வரும் ஜுலை 22,23,24 திகதிகளில் புவி வெப்பமயமாக்கலுக்கு எதிரான தமிழக மாநாடு நடைபெறவுள்ளது. சமூக ஆர்வலர்களால் நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அறிவியல் அறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக சேவகர்கள் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டை முன் முயற்சி எடுத்து நடத்துபவர் திரு.ஒய்.டேவிட் என்ற சமூக ஆர்வலர். உலகம் முழுவதிலும் நடைபெற்ற பல சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் கலந்து கொண்டவர் இவர். மனித குலத்திற்கு ஏற்பட போகும் பேரழிவை தடுக்க இணைந்து செயல்படுவோம் என்ற அறைகூவலுடன் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த மாநாடு ஏன் என்பது பற்றி அவரிடம் கேட்டோம்.

" நாம் எல்லோரும் இன்று ஒரு அசாதாரண காலகட்டத்தில் வாழ்கிறோம். இந்தோனேஷீயா, இந்தியா, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி உள்பட உலகின் பலபகுதிகளும் இயற்கையின் சீற்றங்களால் அழிவை ஆங்காங்கே சந்திக்கின்றன. இந்த நிகழ்வுகள் நம்மை அச்சுறுத்துவதுடன் நமது வாழ்வையே கேள்விக்குறியாக்குகிறது.

பனிப்பகுதிகள் உருகி வருகின்றன

ஆர்டிக், அண்டார்டிகா, கீரின்லாந்து போன்ற பனிப்பிரதேசங்களில் உள்ள பனிப்பகுதிகள் உருகி அப்பகுதிகள் உலகின் ஏனையப் பகுதிகளைப் போன்று தரைப்பகுதியாக்கும் போக்கு வேகமாக அதிகரித்துக் கொண்டே
வருகிறது. இமயமலையிள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால், வற்றாத நதிகள் வறண்டு போகும் நிலையும், அதனால் ஏற்படும் தாக்கங்களும் நம்மை அச்சுறுத்துவதாக உள்ளது. உலகின் பிற பகுதிகளிலுள்ள மலைத்தொடர்களிலும் இதே போக்குகளே நடந்துகொண்டிருக்கின்றன. கடல் மட்டங்கள் உயர்ந்து கொண்டேவருகின்றபடியால் கடற்கரையை அடுத்த தாழ்வான பகுதிகளிலுள்ள கிராமங்கள், நகரங்களில் உள்ள மக்கள் இடம் பெயர வேண்டியகட்டாயகாலச்சூழல்கள்வேகமாகஉருவாகிக்கொண்டேயிருக்கின்றன. பலதீவுகள் கடலுக்குள் மூழ்கிவிடும் நிலையில் உள்ளன.

தமிழகத்திலுள்ள சென்னை மாநகரின் பெரும் பகுதியும், நமது கிழக்கு கடற்கரையில் பெரும்பாலான பகுதிகளிலும் இந்நிலையே ஏற்படும். காடுகளில் பெரும் தீ ஏற்கனவே அநேக நாடுகளில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. உலகின் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க
இப்போக்கு அதிகமாகிக் கொண்டேயிருக்கும். பருவகால மாற்றங்களினாலும், நீர் பற்றாக்குறையினாலும், வெப்ப அதிகரிப்பினாலும் விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும். நெல், கோதுமை உற்பத்திகள் பெருமளவில் குறைந்து கொண்டே வரும். இதனால் உணவுக்கு வருங்காலத்தில் எவ்வித உத்திரவாதமும் இருக்க வாய்ப்பில்லை.

பலபிரதேசங்களில் சிறுதானியங்கள் கூடப்பயிரிடமுடியாத நிலைமை உருவாகிக் கொண்டே வருகிறது.நீண்டகோடைகாலம் ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டேவரும் வெப்பம், தொடர்ந்து வறட்சி, பெரும்
வெள்ளப்பெருக்கு, புயல், சுனாமி, பூமியதிர்ச்சிகள் போன்றவைகள் உலகின் பல பகுதிகளில் சாதாரண நிகழ்வுகளைப் போன்று அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன.

மக்கள் பெருமளவில் இடம் பெயர்தல், உயிரிழப்புக்கள், வாழ்வாதாரங்களை இழந்து தவித்தல் போன்றவைகள் உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. பல்லுயிர்ப்பெருக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டேயிருக்கின்றன. பல்வேறு வகைப்பட்ட வெப்ப சம்மந்தமான நோய்கள் அதிகரித்து வருகின்றன.

அழிவை கொண்டு வரும் 20 செல்சியஸ் வெப்பம் 

இன்று புவியின் சராசாரி  வெப்பம் தொழில் புரட்சி ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்ததை விட தற்போது 0.740 செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது என ஐபிசிசி(Intergovernmental Panel on Climate Change-IPCC) கூறியுள்ளது. இந்தக் குழுவில் 2000க்கும் அதிகமான விஞ்ஞானிகள் உள்ளனர். பூமியின் வெப்பத்தில் 0.740 செல்சியஸ் கூடியிருப்பதன் காரணமாகத்தான் மேலே சொல்லப்பட்ட வரலாற்றில் இதுவரை நிகழாத அசாதாரணமான அழிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. IPCC - யின் 4 வது அறிக்கையின் படி, பூமியின் வெப்பம் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. 20 செல்சியஸ் ஆக உயருமென்றால் நாம் பேரழிவை சந்திப்போம்.

அத்தகைய பேரழிவினால் பூமியின் நிலையே தாறுமாறாகப் போகும். பூமி தன்னை சரிப்படுத்திக் கொள்ளும் ஆற்றலை பலநிலைகளில் இழந்து விடும். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் எவ்வித பயனும் அளிக்காது. எனவே 20 செல்சியஸ்க்குள் பூமியின் வெப்பநிலையை வைத்துக் கொள்ள வேண்டும் என இத்தாலியில் 2008- ல் கூடிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. உலகநாடுகள் இந்தமுடிவை ஏற்றுள்ளன. இந்தியாவும் 20 செல்சியஸ் வெப்பநிலையை உச்சகட்ட பாதுகாப்பு அளவீடாக வைக்கவேண்டும் என்பதை ஏற்றுள்ளது.

இன்று உலகில் செய்யப்படும் செயல்பாடுகளின் போக்கைப் பார்த்தால் நாம் மிக விரைவில் இந்த 20 செல்சியஸை தாண்டி விடுவோம் என்றே தோன்றுகிறது. இன்னும் பத்து, பதினைந்து வருடங்களுக்குள் இன்று அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நாம் பேரழிவை சந்திப்போம்.

பூமி வெப்பமடைதல்

இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களும், அழிவுகளும் பூமிவெப்பமடைந்தினால் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும்  மனிதர்களுடைய வேகமான செயல்பாடுகளால் பசுமைக்குடில் வாயுக்களின் அளவும், செறிவும் பூமியின் வளிமண்டலத்தில் கூடியுள்ளன. இதுவே பூமி வெப்பமடைதலுக்கு அடிப்படை காரணமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78 விழுக்காடும், பிராணவாயு 21 விழுக்காடும் உள்ளன. மீதமுள்ள1 விழுக்காட்டில்பசுமைக்குடில் வாயுக்களான கரி யமிலவாயு, மீத்தேன்,  நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவைகள் முக்கியமான
வாயுக்களாகும். இவைகளில் கரியமிலவாயுவே அதிகமாக காணப்படுகிறது. இதோடு குளிர்சாதனக்கருவிகளிலிருந்து வெளிவரும் குளோரோ·புளூரோகார்பன், விமானங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஏரோசால் போன்ற வாயுக்களும் பசுமைக்குடில் வாயுக்களில் அடங்கும். 1

1824-ல் பசுமைக்குடில் வாயுக்களின் செறிவு வளிமண்டலத்தில்
அதிகரிப்பதால் பூமி வெப்பமடையும் என்பதை ஜோசப் என்பவர் எடுத்துரைத்தார். 1828-ம் ஆண்டில் கரியமிலவாயுவின் செறிவு 228ppm (particles per million) ஆக இருந்தது. 2004-ல் 383ppm ஆக கூடியுள்ளது.350ppmக்கு மேல் கூடுவதே பேரழிவை உருவாக்கும். ஏற்கனவே அந்த அளவையும் தாண்டி விட்டது. எனவே உடனடியாக 350ppmக்குள் செறிவைக் குறைக்க வேண்டும் என NASA விஞ்ஞானி ஜேம்ஸ் ஹான்சன் குறிப்பிட்டுள்ளார்.

பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள்

பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் இரண்டு என தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவை புதைபடிவ எரிபொருட்களை
அதிகம் பயன்படுத்தல், காடுகளை பெருமளவில் அழிப்பது. இவைகளில் புதைபடிவ எரிபொருட்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. நிலக்கரி , பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவைகளை மையப்படுத்தியே சென்ற இரு நூற்றாண்டுகளாக மேற்கத்திய பாணியிலான நாகரிகம் வடிவமெடுத்துள்ளது.

உலகில் மின்சக்தி பெருமளவில் நிலக்கரியையே பயன்படுத்தும் அனல்மின் நிலையங்களிலிருந்து தான் எடுக்கப்படுகின்றன. இன்று உலகமெங்கும் போக்குவரத்து பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களையே
சார்ந்துள்ளது. ஆலைகள் பெரும்பாலும் புதைபடிவ எரிபொருட்களையே சார்ந்துள்ளது. எனவே பசுமைகுடில் வாயுக்களை உமிழும் எரிபொருட்களைச் சார்ந்த வாழ்வியல் முறை இன்று நம்மை பேரழிவின் விளிம்பில் கொண்டு நிறுத்தியுள்ளது.

விவசாயம் மற்றும் தொழில்களுக்காக காடுகள் உலகமெங்கும் பெருமளவில் அழிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. வெட்டப்பட்ட மரங்களிலிருந்து உமிழப்பட்ட கரியமிலவாயு மற்றும் விவசாய முறைகளால் உருவான மீத்தேன் வாயுவும, பசுமைக்குடில் வாயுக்களின் செறிவு வளி மண்டலத்தில் அதிகரிப்பதற்கான காரணங்களாக அமைகிறது. மேலும் காடுகளின் அளவு குறையும் போது, கரியமிலவாயுவை கிரகிக்கும் நிலையும் குறைகிறது.
வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்களின் செறிவு அதிகமாக இருப்பதால், சூரிய ஒளி பூமியில் பட்டு, மறுபடியும் மேலே செல்வதற்கு வாய்ப்பில்லாமல், வளிமண்டலத்தில் சென்று மறுபடியும் பூமிக்கே திரும்புகிறபடியால், பூமியிலேயே வெப்பம் தேங்கி பூமியை வெப்பமடையச் செய்கிறது.

பூமி வெப்பமடைதல்:பொருளாதாரப் போக்குகளின் விளைவே!

பூமி வெப்பமடைந்து, நாம் அழிவையும், பேரழிவையும் நோக்கி பயணம் செய்கிறோமென்றால் அதற்கு வெறும் பசுமைக்குடில் வாயுக்கள் மாத்திரம் காரணமல்ல. இன்றைய பொருளாதார போக்குகளும், அவற்றை மையமாகக் கொண்டு எழும்பிய நாகரிகமும் தான் காரணமாகும். பசுமைக்குடில் வாயுக்களை அளவோடு வெளியிடும் விதத்தில், புதைபடிவ
எரிசக்திகளை பயன்படுத்தியிருந்தால்,காடுகளை அளவோடு வெட்டியிருந்தால் இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது.

பேராசையை மையமாகக் கொண்டு, லாபநோக்கத்திற்காக மட்டும் செயல்படும், சந்தையை மையப்படுத்திய, பன்னாட்டுகம்பெனிகளால் திறமையாக உலகம் முழுவதிலும் திணிக்கப்பட்டு வரும் நாசகரமான பொருளாதாரம்தான் நம்மை பேரழிவுக்கு நேராக இழுத்து செல்லுகின்றன. இப்பொருளாதாரத்தில் வன்முறையான வளர்ச்சிப்பாதையே
வடிவமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியின் அளவீடாக தேசிய மொத்த உற்பத்தி (Gross Domestic Product) உள்ளது.

நாடுகளின்  சுயநலம்

எனவே ஒவ்வொரு நாடும் தங்களுடைய GDP யை கூட்டுவதிலேயே கவனம் செலுத்துகின்றன. GDP கூடுவதை நாட்டின் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த அளவீட்டில் கேட்கப்படவேண்டிய முக்கிய கேள்விகள்
கேட்கப்படுவதில்லை. இவ்வளர்ச்சியின் அளவீட்டைக் கூட்டுவதில் எத்தகையப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன?
அவைகள் யாரால் எப்படி செய்யப்பட்டன?
எந்தப்பிரிவு நுகர்வோருக்காக உற்பத்தி செய்யப்பட்டன?
அவைகள் ஏற்படுத்திய ஏற்ற தாழ்வுகள் என்ன?
இந்த உற்பத்திக்கு யாருடைய வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டன? அவற்றின் மதிப்பீடு என்ன?
இயற்கையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
வருங்காலத்தில் தொடர்ந்து ஏற்படுத்தும் தாக்கங்கள் எதுவாயிருக்கும்? அவைகளின் மதிப்பீடுகள் என்ன?
என்ற கேள்விகள் எழுப்பப்படுவதேயில்லை. இப்படிப்பட்ட
கேள்விகளை எழுப்பாததின் விளைவே இன்றைய வன்முறையான வளர்ச்சிப்பாதை. அதுவே நம்மை அழிவுக்கும் பேரழிவுக்கும் நேராக இட்டுச் செல்கிறது.
இன்று உலகமயமாக்கல் என்ற கோட்பாடுகளின் கீழ் உலகமெங்குமுள்ள இயற்கை வளங்களும், மக்களின் வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு, மக்கள் வறியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். வறுமையின் பிடியில் சிக்கியவர்களின்
எண்ணிக்கை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவு கூடிக்கொண்டே வருகின்றன. நாடுகளுக்கிடையிலும், நாடுகளுக்குள் மக்களுக்கிடையிலும் ஏற்றத்தாழ்வுகள் கூடிக்கொண்டே வருகின்றன. மக்களின் பாரம்பரிய அறிவும்,செயல்பாடுகளும் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளன. நமது சுற்றுச்சூழல் சிதைக்கப்பட்டு நாம் வாழ முடியாத சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டே வருகின்றன. ஆயுதங்கள் கம்பெனிகளின் வர்த்தகப்பொருளாக வடிவமெடுத்து, உலகத்தின் பல பாகங்களில் அமைதிக்கே கேடு விளைவிக்கிறது.

மக்களுக்காக செயல்பட வேண்டிய ஜனநாயகப்போக்குகளும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை புரியும் அமைப்புகளாக மாற்றப்பட்டு, ஜனநாயகம் நாளுக்கு நாள் வளமையடைவதற்கு பதில் இன்று வலுவிழந்து சிதைக்கப்பட்டுள்ளது. எனவே, சென்ற ஐநூறு வருடங்களில் உலகில் செயல்பட்ட, பொருளாதாரபோக்குகளும் அவைகளில் உச்சகட்டமாக உருவான உலகமயமாதல் போக்குகளும் நம்மை இன்று பேரழிவின் விளிம்பில் கொண்டுவந்துள்ளன.

இந்தியாவில் பூமி வெப்பமடைவதால் ஏற்படும் தாக்கங்கள்

இந்தியாவில் இந்தியாவில் இதன் விளைவு மிகபயங்கரமானதாக இருக்கும்.  இந்திய அரசு 2006ல் கொண்டுவந்துள்ள காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் (National Action Plan on Climate Change) மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் (National Action Plan on Climate Change)
எட்டு அம்சங்களைக் கொண்டுள்ளது.
1. தேசிய சூரிய ஒளி இயக்கம்
2. தேசிய விரிவுபடுத்தப்பட்ட சிக்கன இயக்கம்
3. நிலைத்த குடியிருப்புகளுக்கான தேசிய இயக்கம்
4. தேசிய தண்ணீர் இயக்கம்
5. இமாலய சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம்
6. பசுமை இந்தியா இயக்கம்
7. நிலைத்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம்
8. தட்பவெப்பநிலை மாற்றம் பற்றிய அறிவுசார் உத்திகளுக்கான தேசிய இயக்கம்
இத்திட்டங்களை தீட்டும்போதும், செயல்படுத்தும் போதும் மக்களின் பங்கேற்பு ஏதும் இல்லை. பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களை பாதுகாக்கும் விதத்திலும், சர்வதேச அரங்குகளுக்கு இந்தியா காலநிலை மாற்றப் பிரச்சனையில் தீவிரமாக செயல்படுகிறது என்பதைக் காட்டுவதற்கும் மட்டுமே இத்திட்டங்கள் துணைசெய்யுமேயன்றி பூமி வெப்பமடைதலைக் குறைக்க எவ்வகையிலும் துணைசெய்யாது.

நாம் செய்யவேண்டியது...

பூமி அழிவிலிருந்து பேரழிவை நோக்கி செல்லுகிறது என்பது நம் ஒவ்வொருவர், நம் எதிர்கால சந்ததியினர், பூமியில் நம்மோடு வாழ்கின்ற ஏனைய உயிரினங்கள் ஆகியவற்றோடு நேரடியாக சம்பந்தப்பட்டவைகள் ஆகும். எனவே நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பது என்பது முடியாத காரியம். ஒவ்வொருவருக்கும் பூமியை பேரழிவிலிருந்து பாதுகாக்க கடமையிருக்கிறது. தனிப்பட்ட, குடும்ப வாழ்வில் எவையெல்லாம் செய்ய முடியுமோ அவைகளைச் செய்யவேண்டும்.

* வாழ்வை இயற்கைக்கு இசைவுள்ளதாக அமைத்துக் கொள்ளவேண்டும்.
* கிராமங்களில் கூட்டாக இயற்கை வளங்களை பாதுகாக்கவும், பேணவும், முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
* மாநில, தேசிய அளவில், இன்றைய போக்குகளுக்கு, மாற்றுப்போக்குகளை உருவாக்கும் விதத்தில், நாம் பலமான அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். 

தமிழகம்

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இன்று பன்னாட்டு கம்பெனிகளும், உலகவங்கி, ஆசியவங்கி போன்ற அமைப்புகளும் பலமாக வேரூன்றி வளர்ச்சி என்ற போர்வையில் நமது வள ஆதாரங்களையும், வாழ்வாதாரங்களையும் சந்தைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். பசுமைக்குடில் வாயுக்களை நாளுக்குநாள் கூடுதலாக வெளியிடும் செயல்பாடுகள் தான் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தின் விவசாயம் அடியோடு விழுந்து விட்டது. கிராமத்தொழில்கள் நசுங்கிவிட்டன.

நிலம்,நீர், காடுகள் போன்ற வாழ்வாதாரங்கள் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகின்றன. எனவே தமிழகத்தின் பொருளாதாரப் போக்குகளும், அவற்றைத் தாங்கிப் பிடிக்கின்ற அரசியல் போக்குகளும் மக்களுக்கும் இயற்கைக்கும் எதிராக செயல்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

எனவே, மக்களிடையே புதிய சிந்தனை போக்குகளை உருவாக்கவும், வளர்க்கவும், புதிய சக்திகள் தமிழகத்தில் உருவாகவும், இன்றுள்ள பன்னாட்டு கம்பெனிகளை மையப்படுத்திய வளர்ச்சிப்போக்குக்கு மாற்றாக மக்களைமையப்படுத்திய, இயற்கையோடு இசைவான, அறநெறியுள்ள பொருளாதார போக்குகள் உருவாகவும், தொடர்ந்த செயல்பாடுகள் அவசியம். சமூக ஆர்வலர்கள் இப்போக்குகளை உருவாக்க தனிக்கவனம் செலுத்தவேண்டும்

இந்நிலையில் தான் பூமி வெப்பமடைதல், நமது பேரழிவை மையப்படுத்திய மாபெரும் மாநாடு தேவைப்படுகிறது. மக்கள் புவி வெப்பமடைதலை தெளிவாக புரிந்து கொள்ளவும், தமிழகத்தில் வளர்ச்சி, முன்னேற்றம்,மேம்பாடு ஆகியவைப் பற்றி புதிய சிந்தனைப் போக்குகள் உருவாகவும், அரசு தன் போக்குகளை மாற்ற வலிமையான அழுத்தங்களை உருவாக்கவும், ஏனைய மாநிலங்களிலும் உலகின் பிற பாகங்களிலும் இதே எழுச்சிகள் உருவாக துணை செய்யவும், மக்களை மையப்படுத்திய பசுமை உற்பத்திகளை ஊக்கப்படுத்தவும், உந்துதல் கொடுக்கவும் மாபெரும் மாநாடு அவசியம்.
இம்மாநாட்டை சிறப்பான முறையில் அமைக்க முழுக்கவனத்தையும் செலுத்தவேண்டும்" என்கிறார் திரு .டேவிட்.
பேரழிவைத் தடுப்போம்!! புவியைக் காப்போம்!!!