Monday, July 29, 2013

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு


ஒமேகா என்றால் என்ன?
ஒமேகா – 3 ஐப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும் முன், கொழுப்புச் சத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானவை ஐந்து வகை ஊட்டச்சத்துகள் – கார்போஹைடிரேட் (மாவுச்சத்து), புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருள்கள்.
முதல் மூன்று வகைகள் அதிக அளவில் தேவை. மீதி இரண்டு வகைகள் மிகச் சிறிய அளவுகளில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும். இந்த 5 வகை ஊட்டச்சத்துக்கள் கொழுப்புச் சத்துக்கள் கொழுப்பு அமிலங்களால் ஆனவை. செலவழிக்கப்படாத கொழுப்பு ‘ட்ரைகிளைசிரைஸ்’ ரூபத்தில் உடலின் அடிபோஸ்  திசுக்களில் சேமித்து வைக்கப்படுகிறது. அடிபோஸ் திசுக்கள், தோலுக்கு அடியில், பிட்டத்தில் மற்றும் சிறுநீரகத்தை சுற்றி கொழுப்பாக, இருப்பவை. தேவையானப் போது கொழுப்புச் சக்தி எடுத்துக் கொள்ளும் கொழுப்புக் களஞ்சியமாக உதவுகின்றன.

ஒரு கிராம் கொழுப்புச் சத்து உடலுக்கு 9 கிராம் கலோரியை தருகிறது. இது கிட்டத்தட்ட, மாவுச்சத்து மற்றும் புரதம் அளிக்கும் கலோரி சக்தியை விட இருமடங்கு அதிகம். ஒரு கிராம் புரதம் (அ) மாவுச்சத்து தருவது 4 கலோரிகள் தான்.

நாம் உண்ணும் கொழுப்புகளில் எண்ணை, நெய், வெண்ணை முதலியன கண்ணுக்கு தெரிந்த கொழுப்புகள். கண்ணுக்கு தெரியாமல் உடலில் சேரும் கொழுப்புகள், தானியங்கள், பயறுகள், வேர்க்கடலை, தேங்காய், இறைச்சி, வித்துக்கள் முதலியன. கொழுப்புகள் அடிப்படை தேவையான கொழுப்பு அமிலங்களை தருகின்றன. இவற்றை நம் உடல் உணவிலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்புகள் கீழ்க்கண்ட வகைகளாக சொல்லப்படுகின்றன
  1. செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள்
  2. செறிவுறாத கொழுப்பு அமிலங்கள்
இரண்டாம் வகையில் இரு பிரிவுகள் உள்ளன.
  • ஒற்றை செறிவற்ற கொழுப்பு அமிலம்
  • பல செறிவற்ற கொழுப்பு அமிலம்
கொழுப்பு வகைகளில் நமது நண்பன் செறிவுறாத கொழுப்புகள். நமது எதிரி செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள்.

கொழுப்புச் சத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் நீண்ட நாட்களாகவே உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிக கொழுப்பு உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து, ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கி இதயத்தை தாக்கும் என்பது தற்போது நன்றாக நிரூபிக்கப்பட்ட விஷயம். “விலங்கு” கொழுப்புகள், தாவிர கொழுப்புகளை விட ஆபத்தானது. ஆனால் மீன்களிலிருந்து கிடைக்கும் எண்ணை கொழுப்பு வித்தியாசமானது.

ஆர்டிக் குளிர் பிரதேசங்களில் வசிக்கும் எஸ்கிமோக்கள் கொழுப்பு செறிந்த சீல் போன்றவற்றை அதிக அளவில் உண்டாலும், அவர்களுக்கு இதய பாதிப்புகள் ஏற்படுவது மிகக் குறைவு. அவர்களின் ரத்த ஒட்டம் கொழுப்பினால் பாதிக்கப்படுவதில்லை. அதே போல ஜப்பானில் மீனையே முக்கிய உணவாக உண்டு வாழும் மீனவர்களுக்கும் இதய நோய் வருவது அபூர்வம். இந்த விஷயங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகளின் கருத்து. இதற்கு கடலுணவுகளில் காணப்படும் ஒமேகா – 3 என்ற எண்ணையே, கொழுப்பு அமிலமே காரணம். இது ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தவிர்த்து, ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. பல வழிகளில் இதயத்தை பாதுகாக்கிறது. குறிப்பாக உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதை தடுக்கிறது.

செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள்
லாரிக் அமிலம், மிரிஸ்டிக் அமிலம், பால்மிடிக் அமிலம், ஸ்டியாரிக் அமிலம் முதலியன செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள். இவை பால், கிரீம், வெண்ணை, நெய், ஐஸ்கிரீம், சாக்லேட், வனஸ்பதி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, தேங்காய் எண்ணை, முதலியவற்றுள் உள்ளன. செறிவுற்ற கொழுப்பு அமில உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல. மாறாக ஆபத்தானவை.

செறிவாகாத கொழுப்பு அமிலங்கள்
  • ஒற்றை செறிவுறாத அமிலம்
  • பால்மிடோலிக் அமிலம்
  • ஒலிக் அமிலம் 
முதலியன இந்த பிரிவை சேர்ந்தவை. தவிர எண்ணைகளில் குறிப்பாக ஆலிவ் எண்ணை, மற்றும் பருப்புகள், அவகோடா பழம் இவற்றில் இந்த வகை கொழுப்புகள் உள்ளன.

பல செறிவற்ற கொழுப்பு அமிலங்கள் இந்த வகையில் தான் நம் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒமேகா எண்ணைகளான 
  • ஒமேகா – 3
  • ஒமேகா – 6
  • ஒமேகா – 9 
கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன.

ஒமேகா – 3 அமிலங்கள்
சணல் விதை எண்ணை, வால்நட் இவற்றிலிருந்து கிடைக்கும்.

ஒமேகா – 3 அமிலங்களில் பயன்
  • நரம்புகளை வலிமைப்படுத்துகிறது. கண், மூளை, செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது. பக்கவாதம் வருவதை தடுக்கிறது.
  • ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் காக்கிறது. இதனால் இதய நோய்கள், மாரடைப்பு தவிர்க்கப்படுகின்றன.
  • மூளை செயல்பாடு, நினைவாற்றல், புத்திசாலித்தனம் இவற்றை வளர்க்கும்.
  • மனச்சோர்வு, இதர மனநோய்களின் சிகிச்சைக்கு பயன்படுகிறது.

ஒமேகா 3 உள்ள உணவுகள்


ஆளி விதைகள் ஆளி விதை எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. அது மிக அதிக n−3 உள்ளடக்கம் கொண்டதாகும்

ஒமேகா – 3 செறிந்த உணவுகளில் முதன்மையானவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், மாக்கரல் வகை மீன்களில் அதிக அளவு ஒமேகா – 3 உள்ளது. இந்த வகை மீன்களை (வறுக்காமல்) உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது.  வாரம் ஒரு முறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது.

ஒமேகா – 3 பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ், சோயா பீன்ஸ், பசுமையான இலைகளுள்ள காய்கறிகளிலும் உள்ளது.  குறிப்பாக சணல் விதை எண்ணை, வாதாம் கொட்டைகள், பசலைக்கீரை, பரங்கி விதைகள், சோயா பீன்ஸ், கோதுமை வித்து, கடுகு கீரை, இவைகளில் ஒமேகா – 3 செறிந்துள்ளது.

தினமும் 2 மேஜைக்கரண்டி பொடித்த சணல் விதைகளை சூப் (அ) பருப்புகளுடன் கலந்து சாப்பிடுவது நல்லது. வாரம் 2 (அ) 3 முறை மீன்கள் உட்கொள்வது தேவையான ஒமேகா – 3 அமிலத்தை தரும்.

ஒமேகா – 6
சருமப் பாதுகாப்பு, முடி வளர்ச்சி, சீரான ரத்த ஒட்டம் இவற்றுக்கு உதவும் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் முதலியன – தானியங்கள், முட்டை, கோழி, இறைச்சி, சோள எண்ணை, சூர்ய காந்தி, பருத்தி விதை, சோயா பீன் எண்ணைகளிலும் ஒமேகா – 6 அதிகம் காணப்படுகிறது.

ஒமேகா – 9
இந்த வகையை சேர்ந்தவை. ஒமேகா – 9 அமிலங்களை நம் உடலே தயாரித்துக் கொள்ளும்.
உடல் ஆரோக்கியத்தை பேண, ஒமேகா – 3 மற்றும் ஒமேகா – 6 கொழுப்பு அமிங்களை கொண்ட எண்ணை மற்றும் இதர உணவுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். ஒமேகா – 3 கொழுப்பு அமிலமும் ஒமேகா – 6 கொழுப்பு அமிலமும் உணவில், 1 : 1 (அ) 1 : 4 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

Thursday, July 25, 2013

வலிப்பு


வலிப்பு என்பது ஒரு நரம்பு தொடர்பான நோயாகும், அது நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. வலிப்பு சீஸர் டிஸ் ஆர்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் பொதுவாக ஒருவருக்கு எந்தவித மருத்துவ காரணமும் இல்லாமல் இரண்டு முறை ஏற்படும்பொழுது கண்டறியப்படுகிறது.
வலிப்பால் ஏற்படும் பிடிப்பு, மூளையில் ஏற்பட்ட காயம் அல்லது குடும்பப் போக்கு காரணமாக, ஆனால் பெரும்பாலும் இதற்கான காரணம் எதுவும் தெரியாது. ‘‘வலிப்பு’’ என்ற வார்த்தை ஒருவரின் பிடிப்புக்கு காரணம் என்ன, அது என்ன வகையானது, அல்லது எந்த அளவு தீவிரமானது என்பதைக் காட்டாது.
யாருக்கு வலிப்பு வருகிறது?
வலிப்பு யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். 0.5%லிருந்து 2% வரையான மக்களுக்கு அவர்களது ஆயுள் காலத்தில் வலிப்பு ஏற்படலாம். இந்தியாவில் 1 கோடிப் பேருக்கு வலிப்பு உள்ளது. இதற்கு பொருள் 1000 பேரில் ஒருவருக்கு என்பதாகும்.
வலிப்பு என்ன செய்கிறது?
மூளையில் மின்னோட்டத்தை ஆரம்பிக்கும் காரணிகளுக்கும் அதனை கட்டுப்படுத்தும் காரணிகளுக்கும் இடையே ஒரு சிறப்பான சமநிலை உள்ளது, மேலும் மின்னோட்ட செயல்பாட்டின் பரவலை வரையறுக்கும் அமைப்புகளும் உள்ளன. வலிப்பின்போது, இந்த வரையறைகள் செயலிழந்து அசாதாரணமான மின்வெளியேற்றம் ஏற்படலாம். ஒருவருக்கு இரண்டுமுறை இந்த பிடிப்பு ஏற்படும்போது அது வலிப்பு என்று அழைக்கப்படுகிறது.
வலிப்பு ஏற்பட பல வெளிப்படையான காரணங்கள் உள்ளன. அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
* காய்ச்சல்
* பிறவிக் குறைபாடுகள் (டெலிவரியில் கஷ்டம்)
* மூளைக் குறைபாடுகள்/ மூளைக்கட்டி
* நோய்த் தொற்று (மெனின்ஜிட்டிஸ்)
* தலையில் காயம் (விழுதல்/விபத்து)
* வேகமாக மின்னும் லைட்கள்/ கலர்கள் (டிவியில்)
* சுடுநீரில் தலைக்கு குளிப்பது
* மருந்துகளின் விளைவுகள்
* அளவுக்கதிகமாக மது அருந்துதல்
* தூக்கமின்மை
* பட்டினி
* உணர்வுக்கோளாறு
* மாதவிலக்கு காலம்
நம்பிக்கையும் உண்மையும்
நம்பிக்கை: வலிப்பு சாதாரணமானது அல்ல.
உண்மை: இநதியாவில் வலிப்பு 1000ல் 10 பேருக்கு உள்ளது.
நம்பிக்கை: வலிப்பு ஒரு தொற்றுநோய்.
உண்மை: வலிப்பு நோயை ஒருவர் மற்றொருவரைத் தொடுவதாலோ, காற்றிலோ, உணவிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது மற்ற வழிகளிலோ பரவாது.
நம்பிக்கை: வலிப்பு நோய் ஏற்படுபவரை கீழே அமுக்கிப் பிடிக்க வேணடும்.
உண்மை: வலிப்பு நோய் வந்தவரை கட்டுப்படுத்தக்கூடாது. அதனால் காயம் ஏற்படலாம். கடினமான அல்லது கூர்மையான பொருட்களை வழியிலிருந்து அகற்றிவிட வேண்டும், அவரது தலைக்குக் கீழே மென்மையான பொருளை வைக்க வேண்டும்.
நம்பிக்கை: வலிப்பு நோயால் அவதிப்படுபவர் வலிப்பு நோயோடு பிறந்திருக்க வேண்டும்.
உண்மை: பெரும்பாலும் வலிப்பு நோய் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்டாலும், யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்நோய் வரலாம்.
நம்பிக்கை: வலிப்பு நோய் என்பது அறிவுக்குறைவின் அடையாளம்.
உண்மை: வலிப்பு என்பது ஒரு உடலில் ஏற்படும் நோய், மனநோயோ அல்லது ஊனமோ கிடையாது. அறிவில் சிறந்த பல புகழ்பெற்ற பிரமுகர்களுக்கு வலிப்பு நோய் வந்திருப்பதை உதாரணமாக கூறலாம்.
நம்பிக்கை: இந்த நோயாளிகள் மீது கடவுள் இருக்கிறார். அவர்களை வழிபடவேண்டும்.
உண்மை: வலிப்பு ஏற்படும்போது அவர்கள் கட்டுப்படுத்த முடியாத முறையில் நடந்துகொள்கின்றனர். ஆனால் இது தெய்வீக சக்தியின் வெளிப்பாடு இல்லை. அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், அவர்களை மற்றவர்களைப் போலவே நடத்தவேண்டும்.
நம்பிக்கை: வலிப்பு நோய் உள்ளவர்கள் குடும்பத்தில் இருப்பது குடும்பத்திற்கு களங்கம், எனவே இந்த உண்மையை மறைத்துவிடவேண்டும்.
உண்மை: துரதிஷ்டவசமாக, வலிப்பு நோய் உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் மீதான களங்கம் இன்னும் நிலவுவது தொடர்கிறது. கல்வி அறிவின் மூலமாக இந்த களங்கத்தைப் போக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சையின்போது மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கைகள்:
செய்ய வேண்டியவை:
உங்களது வலிப்பு பற்றிய முழுவிவரங்கள் உங்களது டாக்டருக்குத் தெரிவிக்கவும்.
நீங்கள் பிறந்தபோது ஏற்பட்ட காயம், தலையில் ஏற்பட்ட காயம், நரம்புமண்டலத்தில் ஏற்பட்ட தொற்றுநோய், வலிப்பு நோய் பற்றிய உங்களது குடும்பத்தின் மருத்துவ வரலாறு பற்றிய விவரங்களை வழங்கவும்.
வலிப்பு நோய் உள்ள ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வகையான வலிப்புகள் ஏற்படலாம்.
வலிப்பு நோயை சிறப்பாகக் கட்டுப்படுத்த அதனை முன்னதாகக் கண்டறிதல் மற்றும் அதற்கான மருத்துவ ஆலோசனை ஆகியவை மிக முக்கியமானவை ஆகும். உங்களது மருத்துவர் அறிவுறுத்துவது போல தினமும் மருந்தை எடுத்துக்கொள்ளவும்.
வீட்டில் மருந்தை இருப்பு வைக்கவும், மேலும் மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துகளின் பெயர்கள் மற்றும் அளவை எடுத்துக்கொள்ள பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களது நோய் நன்றாக கட்டுப்படுத்தப்பட்டால் அதே கம்பெனியின் மருந்தை எடுத்து வரவும். அதே மருந்தை மற்ற கம்பெனிகளும் தயாரித்து மார்க்கெட்டில் விற்பனைக்கு விட்டிருக்கலாம்.
உங்களுக்கு வலிப்பு ஏற்படும் கால இடைவெளி மற்றும் மற்ற கருத்துக்களைப் பற்றி ஒரு டயரியில் எழுதவும்.
உங்களது டயரியுடன் மற்றும் நீங்கள் கேள்வி எதுவும் கேட்க விரும்பினால் தினமும் உங்களது மருத்துவரை சந்தியுங்கள்.
குறைந்தது 3 ஆண்டு கால இடைவெளியாவது வலிப்பு ஏற்படாமல் இருக்க மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களது மருத்துவரின் ஆலோசனையுடன் நீங்கள் டி.வி. பார்க்கலாம், விளையாட்டுப் போட்டிகளில் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடலாம்.
செய்யக்கூடாதவை:
உங்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் அல்லது மருந்தை சகிக்க முடியாத தன்மை ஆகியவை குறித்து உங்களது மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
ஒரு நரம்பு மண்டல அவசர நிலையாக வலிப்பை திடீரென அதிகரிக்கலாம் என்பதால் உடனடியாக மருந்தை நிறுத்த வேண்டாம்.
நீங்கள் உங்கள் விருப்பப்படி மருந்து கம்பெனியை மாற்ற வேண்டாம்.
உங்களது டாக்டரின் ஒப்புதல் இன்றி உங்கள் மருந்து அளவை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ மற்றும் அடிக்கடி எடுத்துக்கொள்ளுவதோ கூடாது.
நீங்கள் வேறு நோய்வாய்ப்பட்டாலோ, கர்ப்பமாக இருந்தாலோ அல்லது இதர காரணங்களுக்காக மருந்தை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ வேண்டாம். கட்டுப்படுத்த முடியாத வலிப்பிற்கான காரணங்கள்தான் இவை.
பிரகாசமான வெளிச்சம் அல்லது அதிக சத்தத்தைத் தவிர்க்கவும்.
சமூகப் பிரச்னை:
வேலைவாய்ப்பு
செய்யவேண்டியவை
வலிப்பு ஏற்பட்டால் உங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலான வேலையைத் தேர்ந்தெடுங்கள்.
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் உங்களது கல்வி மற்றும் திறமையை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.
தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
செய்யக்கூடாதவை:
கீழ்க்கண்டவை தொடர்பான வேலைகளை செய்ய வேண்டாம்:
டிரைவர் அல்லது விமானத்தின் பைலட்.
நீச்சல் அடித்தல்.
ஏறுதல் அல்லது உயரத்தில் பணிபுரிதல் கனரக இயந்திரங்கள் அல்லது எலக்ட்ரிக் கருவிகளுடன் வேலை செய்தல்.
திருமணம் மற்றும் குழந்தை
செய்யவேண்டியவை:
திருமண வாழ்க்கையை திறம்பட நடத்த முடியும் என்றால் மட்டுமே திருமணம் செய்யுங்கள்.
கர்ப்பமாகுதலை திட்டமிடுங்கள். கர்ப்பமாகுதலுக்கு முன்னதாக எடுக்க வேண்டிய மருந்துகள் பற்றி உங்களது மருத்துவருடன் ஆலோசனை செய்யுங்கள்.
பாலூட்டுவதைப் பற்றி உங்களது மருத்துவருடன் ஆலோசனை செய்துவிட்டு வழக்கம்போல் பால் கொடுக்கலாம்.
செய்யக்கூடாதவை:
திருமணம் உங்களது வலிப்பு நோயை குணப்படுத்தும் என்ற கருத்தோடு திருமணம் செய்யாதீர்கள்.
உங்களது வாழ்க்கைத் துணைவர் மற்றும் அவரது உறவினர்களிடம் உங்களது நோயைப் பற்றி கூறாமல் மறைக்காதீர்கள்.
உங்களது கர்ப்ப காலம் முழுவதும் வழக்கமாக மருந்து எடுக்க வேண்டும்.
வலிப்பு நோயோடு வாழுதல்:
ஒவ்வொருவரும் தங்களது வலிப்பு நோய் பற்றி அதன் வகை மற்றும் எவ்வளவு கால இடைவெளியில் ஏற்படுகிறது மற்றும் வலிப்பு வருவதைப் பற்றி கூறக்கூடிய தன்மை பற்றி வித்தியாசமாகக் கூறுகின்றனர். பெரும்பாலான கேஸ்களில் மருந்துவலிப்பு தோன்றுவதை நிறுத்த முடியும் அல்லது குறைந்த பட்சம் ஆச்சரியப்படத்தக்க வகையில் அதனைக் குறைக்கும். உங்களது வாழ்க்கை முறையில் மாற்றம் செய்ய விரும்பும் வாய்ப்புகளை பல காரணிகள் பாதிக்கும்.
கல்வி:
குழந்தைகள் நான்கு வயதிலிருந்து கல்வி கற்கும் உரிமை கொண்டவர்கள். பெரும்பாலான வலிப்புள்ள குழந்தைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கின்றனர். ஏனெனில், வலிப்பு என்பது தனிநபரது நிலையாகும். அது ஒருவரது கல்வி மற்றும் கற்கும் திறமையை பாதிப்பதில் ஆளுக்கு ஆள் வேறுபடலாம்.
தேர்வு நிலையில் மதிப்பிடும்போது வலிப்பு நோய் இருப்பது ஒருவரது திறமையை மதிப்பிடுவதை பாதிக்காது. இருந்தபோதிலும், மனக்கவலை ஏற்படும்போது அல்லது ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வலிப்பு ஏற்படலாம் என்று கருதுபவர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். அதுபோன்ற நேரங்களில் தேர்வு குறித்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஆலோசிப்பது உதவியாக இருக்கும்.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு
பரபரப்பாக பணிபுரியும்போது அவர்களுக்கு வலிப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. சில வேலைகள் மற்ற வேலைகளை விட ஆபத்து மிகுந்ததாக உள்ளன. உங்களது விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகள் குறித்து சுதந்திரமாக ஆராய்ந்து பாருங்கள். தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளால் பெரும்பாலான ஆபத்துக்களை குறைத்துவிடலாம்.
எனக்கு வலிப்பு வரும்போது நான் என்ன செய்ய வேண்டும்?
வலிப்பை நிறுத்த முயற்சிக்க வேண்டாம்.
வலிப்பு ஏற்படும்போது வாயில் எதையும் திணிக்க வேண்டாம்.
போதுமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
வாந்தி எடுப்பதை விழுங்கிவிடாமல் இருக்க நீங்கள் இருக்கும் பக்கத்தை மாற்றிக்கொள்ளவும்.
முடிந்தவரை விரைவில் மருத்துவரைப் பார்க்கவும்.
முன்னேற்றம்:
வலிப்பு கோளாறு (வலிப்பு) என்பது தொடர்ச்சியான, பொதுவாக வாழ்க்கை காலம் முழுவதும் நீடிக்கக் கூடிய ஒன்றாகும். சில கேஸ்களில், மருந்தின் தேவை குறையலாம் அல்லது போகப் போக நிறுத்திவிடலாம். வலிப்பு ஏற்படாத 3 4 ஆண்டு கால இடைவெளி மருந்து வலிப்பை குறைக்கிறதா அல்லது நிறுத்திவிடுகிறதா என்பதற்கான சாத்தியக்கூறுகளைக் காட்டும். பொதுவான பிரச்னைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளக்கூடிய ஆதரவுக் குழுக்களில் சேருவது இந்த நோயின் கவலையைக் குறைக்க உதவும். எல்லா குழுக்களும் ஒரே வேலையை செய்வதில்லை. இது போன்ற குழுக்கள் கூட அதில் சேர்ந்துள்ள உறுப்பினர்களைப் பொருத்து வித்தியாசமான முடிவுகளைப் பெறலாம். ஆனால், எல்லா குழுக்களிலும் உறுப்பினர்கள் பின்வருவனவற்றை உணர்ந்துள்ளனர்: ஊக்குவித்தல், ஏற்றுக்கொள்ளுதல், ஆறுதல் மற்றும் அதிகாரம் பெறுதல்.
அதிகாரமளித்தல் ‘அறிவே சக்தி’
ஒரு ஆதரவுக் குழுவில், உங்களது வலிப்பை கட்டுப்படுத்த, வலிப்புக்கான குறைந்த விலையுள்ள மருந்துகளை வாங்குவது, வேலைவாய்ப்பைப் பெறுவது, ஏறக்குறைய எல்லாவற்றையும், உங்களது குழு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதில் உள்ள மற்ற உறுப்பினர்களைப் பொறுத்து நீங்கள் அறிவைப் பெறலாம். நீங்கள் உங்களது வலிப்பு பற்றி கொஞ்சம் அதிகமாக அறிந்து கொண்டாலும் நீங்கள் அதைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்கூற உதவும்.
ஒப்புக்கொள்ளுதல்: நீங்கள் சரியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு நரம்பியல் கோளாறு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். அது சாதாரணமானது. நீங்கள் மட்டும் தனியாக இந்த நிலையில் இல்லை. நிறையப் பேர் உங்களைப் போன்ற நிலையில் உள்ளனர். அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். வலிப்பு நோய் உள்ளவர்களை சந்திப்பது மற்றும் நீங்கள் அவர்களோடு (பெரும்பாலும் அவர்களில், குறைந்தபட்சம்) இருப்பது, நீங்களும் மற்றவர்கள் சேர்ந்து பழக விரும்பும் மனிதராக இருக்கிறீர் என்பதை உங்களுக்கு கற்றுத் தருகிறது. மற்ற விஷயங்களை அறிந்துள்ள மற்றும் வேலைகளைச் செய்யக்கூடிய ஒருவர் அறிந்துகொள்ள ஒரு நல்ல மனிதர் என்பது போல நீங்கள் நீங்களாகவே இருப்பது மிக அதிகமான நேரமாகும்.
ஆறுதல்கொள்ளுதல்: நீங்கள் தனியாக இல்லை.
உங்களுக்கு ஆதரவளிக்கவும் உதவி செய்யவும் மற்றும் கவனித்துக்கொள்ளவும் உங்களைச் சுற்றியும் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களது உதவியைப் பெறுங்கள். உங்கள் குடும்பத்தினரைத் தவிர இண்டியன் எபிலிப்ஸி அசோசியேஷனைச் சேர்ந்த பல குழுக்கள் உள்ளன. அவர்களுடன் நீங்களும் சேர்ந்துகொள்ளலாம். இந்த வழிகாட்டியில் மையங்களின் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
ஊக்கமளித்தல்: நீங்களும் கூட வெற்றி பெறலாம்.
நல்ல குடும்பம் மற்றும் நல்ல வேலை, நல்ல கல்வி போன்றவற்றில் சிறந்து விளங்கும் வலிப்பு நோயுள்ளவர்கள் பற்றிய கதைகளைப் படியுங்கள். அது போன்றவர்களை நேரில் சந்திப்பதும் நல்லது. வலிப்பு நோயால் பாதிப்படையாமல் தங்களது வாழ்க்கையை மாற்றி வரும் நபர்களையும் சந்திக்கலாம். அவர்கள் தங்களது வெற்றி குறித்து கூறும்போது நீங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துங்கள், மற்றும் உங்களது வெற்றியைப் பாராட்ட அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். வலிப்பு காரணமாக துன்பப்பட்ட வீரர்கள், ஆட்சியாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வெற்றிக்கதைகள் ஏராளமாக உள்ளன. அந்தப் பட்டியலில் சீஸர் (ரோமானிய அரசியல் வல்லுநர்), ஜான்டி ரோட்ஸ் (கிரிக்கெட் விளையாட்டு வீரர்) மற்றும் பலர் இதில் இடம் பெறுகின்றனர். இதிலிருந்து வலிப்பு ஒருவருடைய புத்திசாலித்தனத்தையோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையையோ பாதிக்காது என்பது உறுதியாக நிரூபணமாகிறது.
- See more at: http://spottamil.com/paroxysm-studies-in-tamil#sthash.SYBJaH7r.dpuf

மூட்டுவலியும் (Arthritis) முடக்காத்தானும் (Balloon Vine)


மூட்டுவலியும் (Arthritis) முடக்காத்தானும் (Balloon Vine) !!நம்மில் பலரும் மூட்டுவலியினால் 

(ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது.

அப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அவ்வாறு செல்லும்போது இரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிறிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்தச் சிறு சிறு கற்கள் சுமார் சினோரியல் மெம்கிரேம் (நமது மூட்டுகள் நம் எண்ணத்திற்கு ஏற்ப அசைவதற்கு உதவும் ஒரு தசை) என்னும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.

சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின்(rheumatoid arthritis) ஆரம்ப நிலை.
இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டியிலிருந்து இந்தியாவின் சில மூலிகைகளை காப்பாற்றியும், அதில் உள்ள மருத்துவக் குணங்களையும், எந்த மூலக்கூறு ஒவ்வொரு மூலிகையிலும் எந்தெந்த வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதைப் பற்றியும் கூட்டு முயற்சியில் செயல்பட்டார்கள்.

அப்போது முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.
இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்

குடல் புண் 2

நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது.

இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண்
குடல் புண் எதனால் ஏற்படுகிறது?
பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும்நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.
புகைப்பிடித்தல்புகையிலையைச் சுவைத்தல்மது அருந்துதல் குடல் புண்ணுக்கு வழி வகுக்கின்றன.
சாலிசிலேட் மருந்துகள்ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள்காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள்வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் காரணமாகவும் குடல் புண் வருகிறது.
கலப்பட உணவுஅசுத்த குடிநீர்மோசமான சுற்று சூழலாலும் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல் புண் ஏற்படுகிறது.
அதிக காரம் அல்லது எண்ணையில் பொரித்த உணவு உண்பதால் வரலாம். கவலை மன அழுத்தம் காரனமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரந்து புண் ஏற்படலாம்.
குடல் புண் எத்தனை வகைகள்?
குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
வயிற்றில் வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் (Gastric ulcer), சிறு குடலில் ஏற்படும் குடல் புண் (Duodenal ulcer)
பொதுவாக இரண்டையும் சேர்த்து பெப்டிக் அல்சர் (Peptic ulcer) என்பார்கள்.
குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?
வயிற்றின் மேல் பகுதியில் எப்போதும் வலியிருக்கும். சாப்பிட்ட பின் இந்த வலி குறைந்தால் அது டியோடினல் அல்சர். மாறாக வலி அதிகரித்தால் அது கேஸ்ட்ரிக் அல்சர்.
வாந்திகுமட்டல்வாயுக்கோளாறுஉடல் எடை குறைதல் சாப்பிடும் விருப்பமின்மைகாரணமின்றி பற்களைக் கடித்தல்துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலிமார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற உணர்வும் இருந்தால் குடல் புண்ணுக்கான அறிகுறி.
இந்தப் அசெளகரியங்கள்சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப் படுத்தும் மருந்துகளை உட்கொள்வதன் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.
சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ் வலி காலை உணவுக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் அமில நீர் வாந்தியாவதும் உண்டு.
குடல் புண் வலியோடு மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்,வலி அதிகம் இல்லாவிட்டாலும் உடல் நலக்கேடுஅமைதியற்ற நிலை,பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.
ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.
சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பின்பு இவ்வலி மறைந்துசில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.
சிலருக்கு இவ்வலிகுறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றிபல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின்அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வு குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.
தேவைப்படும் டெஸ்ட் என்ன?
குடல் புண் இருப்பதாக தோன்றினால் வாய் வழியாக் குழாய் செலுத்தி செய்யப்படும் எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம் திசு மாதிரி எடுத்து (பயாப்ஸி) சோதனை செய்து அது எந்த மாதியான புண் என உறுதிப் படுத்திக்கொண்டு அதற்கேற்ற சிகிச்சை செய்வது நல்லது.
குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?
அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.







புகை பிடித்தல்புகையிலையைச் சுவைத்தல்மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும்தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும்.
இவை தவிரதற்காலத்தில் புரோபான்தளின்சிமிடிடின்ராணிடிடின்,பாமாடிடின்சுரால்பேட்முதலியவும் பயன்படுகிறதுசிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப் படிதான் சாப்பிட வேண்டும்.
மருத்துவம் செய்யாவிட்டால்?
குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல்ரத்தக் கசிவும் ஏற்படும். இதனால் , கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார்ஆஸ்ப்ரின் போன்ற வலி நிவாரணி சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ மிகவும் அபாயகரமானதாகும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால்இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இதனால் இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டுவயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்துவயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது.
இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
நாள் பட்ட அல்சர் புற்று நோயாக மாறுமா?
சாதாரணமாக டியோடினல் அல்சர் அல்லது காஸ்ட்ரிக் அல்சர் புற்று நோயாக மாறுவதில்லை ஆனால் எச் பைலோரி கிருமிகள் நீண்ட நாட்கள் வயிற்றில் தங்கி இருந்து அழற்சி ஏற்பட்டு முற்றிய நிலையில் (Chronic Gastiritis) 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து புற்று நோயாக மாறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம். ஜாக்கிரதை
செய்யக்கூடாதவை
* புகைபிடிக்கக் கூடாது.
* மதுகாபி பானங்களை குடிக்கக் கூடாது
* வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.
* அதிகமாகச் சாப்பிடக்கூடாது.
* பட்டினி கிடக்ககூடாது.
* காரம்எண்ணையில் பொரித்த உணவுகள் உண்பதை குறைக்க வேண்டும்
* பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
* சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.
* சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோவளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
* இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.
* மனநிலையை தடுமாற விடக் கூடாது.
* அவசரப்படக் கூடாது.
* கவலைப்படக் கூடாது.
* மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
* சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் படுக்ககூடாது
செய்ய வேண்டியவை
* குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்
* அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.
* தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
* மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
* இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.
* இறுக்கமாக உடை அணியக் கூடாது.
* மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.
* யோகாசனம்தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.
* மன இறுக்கத்தை விடுத்து மனமகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.
* அலுவலக வேலைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும்.
* சுகாதாரத்தை பேண வேண்டும்.
சாப்பிட வேண்டியவை
* பொரித்த அல்லது தாளித்த உணவு வகைகள்ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. எனினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம்.
* சத்தான சரிவிகித உணவு.
* குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.
* காபிமதுகாற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
* டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.
வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
* மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
* பச்சையானநன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
* பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
* பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.

அல்சர் – வயிற்றில் புண்


அல்சர் – வயிற்றில் புண்

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் “அல்சர்” ஒரு அன்றாட பிரச்சனையாக மாறிவிட்டது. ஜீரணமண்டலத்தில், அல்சர் எனும் புண்களை, அவை எந்த இடத்தில் உண்டாகின்றன என்பதை பொறுத்து, வாய்ப்புண், உணவுக்குழாய் புண், வயிற்றுப்புண், சிறுகுடலின் முன்பகுதி புண்  என்று பிரிக்கலாம்.
வாயிலும், உணவுக்குழாய்களிலும் ஏற்படும் அல்சருக்கு முக்கியகாரணம் வயிற்றிலிருந்து உணவுக்குழாயுக்கும், வாய்க்கும், அமிலம் ஏறிவிடுவது தான் இரப்பை (வயிறு) க்கும், உணவுக்குழாயுக்கும், நடுவே ஒரு ஒரு வழி வால்வு உள்ளது. இது வயிற்றிலிருந்து எதுவும் மேலேறா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. பலருக்கு இந்த வால்வு சரியாக செயல்படாது. இதனால் ஜீரணச்சாறு மேலேறிவிடுகிறது. இதைத்தான் ‘எதுக்கலிக்கிறது’ என்கிறோம். வாயில் பித்த நீர் கரிப்பது போன்ற புளிப்புணர்ச்சி தோன்றும். ஒரு வழி வால்வு தளர்ந்து போனால் இந்த மேலேறும் அமிலப்பிரச்சனை. வால்வு கெட்டியாகி விட்டால் மூடிக் கொண்டே இருக்கும். இதைதிறப்பது கடினமாகிவிட்டால், உணவுக் குழாயிலிருந்த உணவு, வயிற்றுக்குள் செல்லாது. உணவுக்குழாயின் சுவர்கள் வயிறு, குடல் போன்றவற்றின் சுவர்கள் போல, அமிலத்தை தாங்கும் சக்தியுடையவை அல்ல. எனவே அவை சிவந்து, கன்றிப்போய் புண்ணாகி விடுகின்றன. குறிப்பாக உணவுக் குழாயின் கீழ்பாகத்தில் இவ்வாறான பாதிப்பை அதிகம் ஏற்படும். அமிலம் இன்னும் மேலேறி வாய்ப்புண்களை உண்டாக்கி, குரல் வளையத்தையும் தாக்கலாம். குரல் இழப்பு, மாறுதல் ஏற்படலாம். ஏன், அமிலம் மூச்சுக்குழாயை கூட தாக்கி, நுரையீரலில் தொற்று நோயை உண்டாக்கலாம்.
உணவுக் குழாய் இந்த அமிலத்தாக்குதலை சமாளிக்க, வயிற்றின் சுவர்களின் திசுக்கள் போலவே, தனது செல்களை மாற்றிக்கொள்ள முயலும். இதை ‘மெட்டப்பிளாசியா’  என்பார்கள். இந்த திசுக்களை மாற்றும் முயற்சி, புற்றுநோயாக, அடினோ கார்சினோமா மாறுகிறது.
இதைத்தவிர்க்க:-
இப்போது வயிறு, குடல்களில் ஏற்படும் அல்சரைப்பற்றி தெரிந்து கொள்வோம் பொதுவாக, வயிற்றில், குடலில் ஏற்படும் புண்களை பெப்டிக் அல்சர்  என்பார்கள்.
மருத்துவமொழியில் பெப்டிக் அல்சர் என்றால், வயிறு, சிறுகுடல் சுவர்களின் ‘ம்யூகோஸா’ படலத்தை, ஜீரண சாற்றில் உள்ள அமிலம், பெப்சின் சிதைத்து அழிப்பது. பெப்டிக் அல்சர்கள் வயிற்றில் (இரப்பையில்) உண்டானால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும், சிறுகுடலின் முன் பகுதியில் ஏற்பட்டால் “டியோடினல்  என்றும் குறிப்பிடப்படும் பெப்டிக் அல்சர் என்ற வார்த்தை வயிற்றில் ஏற்படும் புண்களை குறிப்பதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
காரணங்கள்
1. குடலில் மேற்பரப்பின் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு  நாள்பட்ட, எரிச்சல் உண்டாக்கும் அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு, அங்கங்கே சிதைந்து விடும். அதிக அமில சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகளாலும் புண்கள் தோன்றும். வயிற்று “லைனிங்கில்” ஓட்டை ஏற்பட்டு புண்கள் உருவாகும்.
2. முக்கிய காரணம் ‘ஹர்ரி’  – அவசரம், டென்ஷன், பதற்றம், ‘வொர்ரி’  – கவலை, பொறாமை, ‘கர்ரி’. காரசாரமான உணவு, மசாலா அதிக அமிலத்தை சுரக்க வைத்து, புண்களை உண்டாக்கும்.
3. வயிற்று அல்சர்களை தோற்றுவிக்கும் இன்னொரு முக்கிய காரணம்  ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற ஒரு வகை பாக்டீரியா. இவற்றை கண்டறிந்த மார்ஷல் மற்றும் வாரன் என்ற டாக்டர்களுக்கு 2005 ல் “நோபல்” பரிசு வழங்கப்பட்டது. இந்த பாக்டீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர், உணவுப்பொருட்களால் பரவுகிறது. வயிற்றமிலத்தை நீர்க்கவைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்கி, றாளடைவில் இந்த கேஸ்ட்ரைடீஸ், அல்சராக மாற இந்த எச். பைலோரி கிருமிகள் உதவுகின்றன.
4. அதிக அளவு மது அருந்துதல், புகைபிடித்தல்
5. தவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகழுவாமல் உணவு உண்பது, நகத்தை கடிப்பது.
6. அதிக டீ, காப்பி குடிப்பது.
7. ஆஸ்பிரின் போன்ற மருந்துகள்
8. ஸ்ட்ரெஸ், டென்ஷன் மனபரபரப்பு அடிக்கடி உணர்ச்சி வசப்படுதல்.
அறிகுறிகள்
இரப்பை (வயிறு) அல்சர் 
1. வயிற்றெரிச்சல், (நெஞ்செரிச்சல்), வயிறு மந்தம், வாயுக்கோளாறு,
2. அஜீரணம், வயிறுஉப்புசம்
3. வயிற்றில் மேல்புறத்தில் வலி அல்லது சங்கடம். சாப்பிட்டால் வலி உண்டாகும்
4. வாந்தி ஏப்பம், குமட்டல்,
5. மேல்வயிற்று வலி அல்சரின் முக்கிய அறிகுறி, இது இல்லாமலும் அல்சர் உருவாகலாம்.
டியோடினல் அல்சர்
1. நெஞ்செரிச்சல், வாயுக்கோளாறு
2. வலி வயிறு காலியானால் ஏற்படும். சாப்பிட்டவுடன் வலி குறையும்
3. அஜீரணம்
4. வாந்தி அநேகமாய் இருக்காது.
5. மேல்வயிற்று வலி அல்சரின் முக்கிய அறிகுறி, இது இல்லாமலும் அல்சர் உருவாகலாம்.
இரப்பை அல்சர் இருபாலருக்கும் ஏற்படும். டியோடினல் அல்சர்
ஆண்களை அதிகம் தாக்கும். டியோடினல் (சிறுகுடலின் முன்பாகம்) அல்சர், வயிற்று அல்சரை விட, அதிகமாக காணப்படுகிறது.
அல்சர்களால் ஏற்படக்கூடிய சிக்கல்கள்
1. அல்சர்களை தொடர்ந்த சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்தலாம். சில சமயங்களில் அல்சர்கள் வயிறு / சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று அடுத்த அவயங்களை (கணையம், கல்லீரல்) பாதிக்கும். இதனால் தீவிரமான வலி ஏற்படும்.
2. அல்சர்கள் வலியில்லாவிட்டாலும், உதிரப்போக்கை உண்டாக்கும். இரத்த வாந்தி அல்லது கருநிறமலம் ஏற்படும்
3. அல்சரை சுற்றியுள்ள திசுக்கள் வீங்கி, வயிறு – சிறுகுடல் பாதையை அடைக்கும். சாப்பிட்டவுடன், வயிறு மிகவும் கனமாகவும், உப்புசமும் இருந்தால் இந்த மாதிரி அடைப்புக்கு அறிகுறிகள்
சிகிச்சை
1. குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும்.
2. உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும்.
3. இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.
4. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும்.
5. வில்வ இலைகள் / பழங்கள் – இவற்றை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.
6. 250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும்.
7. பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது.
8. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.
9. மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது.
10. திரிபாலா சூரணம் (ஒரு தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.
11. கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
12. உங்களுக்கு அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா கலந்த காரசாரமான உணவு இவற்றை தவிர்க்கவும்.
13. உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.
14. ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.
15. கீழ்க்கண்டவற்றை தவிர்க்கவும் மிளகு, உளுந்து, கொள்ளு, ஆல்கஹால், கத்திரிக்காய், புளிப்பான பண்டங்கள், எண்ணை, காரம் செறிந்த உணவுகள்.

ஆயுர்வேத மருந்துகள்
சுகுமார க்ருதம், மஹா சங்கவடீ, நாரிகேள லவணம், சூல குடாரம் அவிபட்டிக்காரசூரணம்
பலமான, வலுவான வயிறு – குடல் சுவர்களை அமிலம் எப்படி பாதிக்கும்?
வயிற்றின் சுவர் கவசம் போன்ற புறத்தோலால் மூடப்பட்டுள்ளது. டியோடினம் (சிறுகுடலின் முதல் பகுதி) காரத்தன்மை உள்ள சளி சுரப்புகளால் பாதுகாக்கப்படுகிறது. டியோடினத்தில் அமைந்துள்ள பிரன்னர்  சுரப்பிகள் இந்த சளிப்பொருளை சுரக்கின்றன. இருந்தும் இந்த கவசங்கள் சிதைக்கப்பட்டு புண்கள் உண்டாகும் காரணங்களை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. ஆல்கஹால், தெரிந்த ஒரு வயிற்று ம்யூகோஸாவை சிதைக்கும் பானம். கருமிளகும் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மிளகாய் தூள், லவங்கம் ஜாதிக்காய், கடுகு இவை வயிற்றை “சிவக்கவைக்கும்” பல சரக்குகள் என்று தெரியவந்துள்ளது. சாலிசைலேட்ஸ் மற்றும் இதர மருந்துகளும் வயிறு – குடல் சுவர்களை பாதிக்கின்றன. வயிற்று அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கும் பொருள், காஃபி, டீயில் உள்ள காஃபின் (சிணீயீயீமீவீஸீமீ) ஆகும். இந்த காஃபின் இல்லாத காப்பியும் அமிலப்பெருக்கை தூண்டும். பூண்டு, முள்ளங்கி கடுகு இவைகளை தனித்தனியாக, அதிக அளவில் பயன்படுத்தினால் தான் அதிக அமிலம் சுரக்கிறது. கோலா கலந்த குளிர்பானங்களும் அதிக அமிலத்தை சுரக்க வைக்கும்.
அல்சர், வயிற்றில் புண், ஜீரணமண்டலம், அல்சர், புண்களை, வாய்ப்புண், உணவுக்குழாய் புண், வயிற்றுப்புண், சிறுகுடலின், இரப்பைக்கும், உணவுக் குழாய்க்கும், குரல் இழப்பு, நுரையீரலில், மெட்டப்பிளாசியா, புற்றுநோயாக, அடினோ கார்சினோமா, வயிறு, பெப்டிக் அல்சர், ம்யூகோஸா, கேஸ்ட்ரிக் அல்சர், டியோடினல், அவசரம், டென்ஷன், பதற்றம், கவலை, பொறாமை, டாக்டர்கள், கேஸ்ட்ரைடீஸ், எச். பைலோரி, மது அருந்துதல், புகைபிடித்தல், ஸ்ட்ரெஸ், டென்ஷன், மனபரபரப்பு, வயிறு மந்தம், வாயுக்கோளாறு, அஜீரணம், கணையம், கல்லீரல், உதிரப்போக்கை, டியோடினம்,
அல்சர் – வயிற்றில் புண் இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் “அல்சர்” ஒரு அன்றாட பிரச்சனையாக மாறிவிட்டது. ஜீரணமண்டலத்தில், அல்சர் எனும் புண்களை, அவை எந்த இடத்தில் உண்டாகின்றன என்பதை பொறுத்து, வாய்ப்புண், உணவுக்குழாய் புண், வயிற்றுப்புண், சிறுகுடலின் முன்பகுதி புண்  என்று பிரிக்கலாம். வாயிலும், உணவுக்குழாய்களிலும் ஏற்படும் அல்சருக்கு முக்கியகாரணம் வயிற்றிலிருந்து உணவுக்குழாயுக்கும், வாய்க்கும், அமிலம் ஏறிவிடுவது தான் இரப்பை (வயிறு) க்கும், உணவுக்குழாயுக்கும், நடுவே ஒரு ஒரு வழி வால்வு உள்ளது. இது வயிற்றிலிருந்து எதுவும் மேலேறா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. பலருக்கு இந்த வால்வு சரியாக செயல்படாது. இதனால் ஜீரணச்சாறு மேலேறிவிடுகிறது. இதைத்தான் ‘எதுக்கலிக்கிறது’ என்கிறோம். வாயில் பித்த நீர் கரிப்பது போன்ற புளிப்புணர்ச்சி தோன்றும். ஒரு வழி வால்வு தளர்ந்து போனால் இந்த மேலேறும் அமிலப்பிரச்சனை. வால்வு கெட்டியாகி விட்டால் மூடிக் கொண்டே இருக்கும். இதைதிறப்பது கடினமாகிவிட்டால், உணவுக் குழாயிலிருந்த உணவு, வயிற்றுக்குள் செல்லாது. உணவுக்குழாயின் சுவர்கள் வயிறு, குடல் போன்றவற்றின் சுவர்கள் போல, அமிலத்தை தாங்கும் சக்தியுடையவை அல்ல. எனவே அவை சிவந்து, கன்றிப்போய் புண்ணாகி விடுகின்றன. குறிப்பாக உணவுக் குழாயின் கீழ்பாகத்தில் இவ்வாறான பாதிப்பை அதிகம் ஏற்படும். அமிலம் இன்னும் மேலேறி வாய்ப்புண்களை உண்டாக்கி, குரல் வளையத்தையும் தாக்கலாம். குரல் இழப்பு, மாறுதல் ஏற்படலாம். ஏன், அமிலம் மூச்சுக்குழாயை கூட தாக்கி, நுரையீரலில் தொற்று நோயை உண்டாக்கலாம். உணவுக் குழாய் இந்த அமிலத்தாக்குதலை சமாளிக்க, வயிற்றின் சுவர்களின் திசுக்கள் போலவே, தனது செல்களை மாற்றிக்கொள்ள முயலும். இதை ‘மெட்டப்பிளாசியா’  என்பார்கள். இந்த திசுக்களை மாற்றும் முயற்சி, புற்றுநோயாக, அடினோ கார்சினோமா  மாறுகிறது.இதைத்தவிர்க்க:-  இப்போது வயிறு, குடல்களில் ஏற்படும் அல்சரைப்பற்றி தெரிந்து கொள்வோம் பொதுவாக, வயிற்றில், குடலில் ஏற்படும் புண்களை பெப்டிக் அல்சர் (றிமீஜீtவீநீ ஹிறீநீமீக்ஷீ) என்பார்கள். மருத்துவமொழியில் பெப்டிக் அல்சர் என்றால், வயிறு, சிறுகுடல் சுவர்களின் ‘ம்யூகோஸா’ படலத்தை, ஜீரண சாற்றில் உள்ள அமிலம், பெப்சின் சிதைத்து அழிப்பது. பெப்டிக் அல்சர்கள் வயிற்றில் (இரப்பையில்) உண்டானால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும், சிறுகுடலின் முன் பகுதியில் ஏற்பட்டால் “டியோடினல்  என்றும் குறிப்பிடப்படும் பெப்டிக் அல்சர் என்ற வார்த்தை வயிற்றில் ஏற்படும் புண்களை குறிப்பதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

காரணங்கள்
1. குடலில் மேற்பரப்பின் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு நாள்பட்ட, எரிச்சல் உண்டாக்கும் அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு, அங்கங்கே சிதைந்து விடும். அதிக அமில சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகளாலும் புண்கள் தோன்றும். வயிற்று “லைனிங்கில்” ஓட்டை ஏற்பட்டு புண்கள் உருவாகும்
.2. முக்கிய காரணம் ‘ஹர்ரி’  – அவசரம், டென்ஷன், பதற்றம், ‘வொர்ரி’– கவலை, பொறாமை, ‘கர்ரி’. காரசாரமான உணவு, மசாலா அதிக அமிலத்தை சுரக்க வைத்து, புண்களை உண்டாக்கும்.
3. வயிற்று அல்சர்களை தோற்றுவிக்கும் இன்னொரு முக்கிய காரணம் ‘பிமீறீவீநீஷீதீணீநீtமீக்ஷீஜீஹ்றீஷீக்ஷீவீ’ (ஹெலிகோபேக்டர் பைலோரி) என்ற ஒரு வகை பாக்டீரியா. இவற்றை கண்டறிந்த மார்ஷல் மற்றும் வாரன் என்ற டாக்டர்களுக்கு 2005 ல் “நோபல்” பரிசு வழங்கப்பட்டது. இந்த பாக்டீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர், உணவுப்பொருட்களால் பரவுகிறது. வயிற்றமிலத்தை நீர்க்கவைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்கி, றாளடைவில் இந்த கேஸ்ட்ரைடீஸ், அல்சராக மாற இந்த எச். பைலோரி கிருமிகள் உதவுகின்றன.
4. அதிக அளவு மது அருந்துதல், புகைபிடித்தல்
5. தவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகழுவாமல் உணவு உண்பது, நகத்தை கடிப்பது.
6. அதிக டீ, காப்பி குடிப்பது.
7. ஆஸ்பிரின் போன்ற மருந்துகள்
8. ஸ்ட்ரெஸ், டென்ஷன் மனபரபரப்பு அடிக்கடி உணர்ச்சி வசப்படுதல்.
அறிகுறிகள்இரப்பை (வயிறு) அல்சர்
1. வயிற்றெரிச்சல், (நெஞ்செரிச்சல்), வயிறு மந்தம், வாயுக்கோளாறு,
2. அஜீரணம், வயிறுஉப்புசம்
3. வயிற்றில் மேல்புறத்தில் வலி அல்லது சங்கடம். சாப்பிட்டால் வலி உண்டாகும்
4. வாந்தி ஏப்பம், குமட்டல், 
5. மேல்வயிற்று வலி அல்சரின் முக்கிய அறிகுறி, 
இது இல்லாமலும் அல்சர் உருவாகலாம்.டியோடினல் அல்சர்
1. நெஞ்செரிச்சல், வாயுக்கோளாறு
2. வலி வயிறு காலியானால் ஏற்படும். சாப்பிட்டவுடன் வலி குறையும்
3. அஜீரணம்
4. வாந்தி அநேகமாய் இருக்காது.
5. மேல்வயிற்று வலி அல்சரின் முக்கிய அறிகுறி,
 இது இல்லாமலும் அல்சர் உருவாகலாம்.இரப்பை அல்சர் இருபாலருக்கும் ஏற்படும். டியோடினல் அல்சர் ஆண்களை அதிகம் தாக்கும். டியோடினல் (சிறுகுடலின் முன்பாகம்) அல்சர், வயிற்று அல்சரை விட, அதிகமாக காணப்படுகிறது.

அல்சர்களால் ஏற்படக்கூடிய சிக்கல்கள்
1. அல்சர்களை தொடர்ந்த சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்தலாம். சில சமயங்களில் அல்சர்கள் வயிறு / சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று அடுத்த அவயங்களை (கணையம், கல்லீரல்) பாதிக்கும். இதனால் தீவிரமான வலி ஏற்படும்.
2. அல்சர்கள் வலியில்லாவிட்டாலும், உதிரப்போக்கை உண்டாக்கும். இரத்த வாந்தி அல்லது கருநிறமலம் ஏற்படும்
3. அல்சரை சுற்றியுள்ள திசுக்கள் வீங்கி, வயிறு – சிறுகுடல் பாதையை அடைக்கும்.
 சாப்பிட்டவுடன், வயிறு மிகவும் கனமாகவும், உப்புசமும் இருந்தால் இந்த மாதிரி அடைப்புக்கு அறிகுறிகள்சிகிச்சை
1. குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும்.
2. உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும்.
3. இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.
4. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும்.
5. வில்வ இலைகள் / பழங்கள் – இவற்றை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.
6. 250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும்.
7. பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது.
8. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.
9. மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது.
10. திரிபாலா சூரணம் (ஒரு தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.
11. கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
12. உங்களுக்கு அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா கலந்த காரசாரமான உணவு இவற்றை தவிர்க்கவும்.
13. உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.
14. ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.
15. கீழ்க்கண்டவற்றை தவிர்க்கவும் மிளகு, உளுந்து, கொள்ளு, ஆல்கஹால், கத்திரிக்காய், புளிப்பான பண்டங்கள், எண்ணை, காரம் செறிந்த உணவுகள்.ஆயுர்வேத மருந்துகள் சுகுமார க்ருதம், மஹா சங்கவடீ, நாரிகேள லவணம், சூல குடாரம் அவிபட்டிக்காரசூரணம்
பலமான, வலுவான வயிறு – குடல் சுவர்களை அமிலம் எப்படி பாதிக்கும்? வயிற்றின் சுவர் கவசம் போன்ற புறத்தோலால் (ணிஜீவீtலீமீறீவீuனீ) மூடப்பட்டுள்ளது. டியோடினம் (சிறுகுடலின் முதல் பகுதி) காரத்தன்மை உள்ள சளி சுரப்புகளால் பாதுகாக்கப்படுகிறது. டியோடினத்தில் அமைந்துள்ள பிரன்னர் (ஙிக்ஷீuஸீஸீமீக்ஷீ) சுரப்பிகள் இந்த சளிப்பொருளை சுரக்கின்றன. இருந்தும் இந்த கவசங்கள் சிதைக்கப்பட்டு புண்கள் உண்டாகும் காரணங்களை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. ஆல்கஹால், தெரிந்த ஒரு வயிற்று ம்யூகோஸாவை சிதைக்கும் பானம். கருமிளகும் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மிளகாய் தூள், லவங்கம் ஜாதிக்காய், கடுகு இவை வயிற்றை “சிவக்கவைக்கும்” பல சரக்குகள் என்று தெரியவந்துள்ளது. சாலிசைலேட்ஸ் (  மற்றும் இதர மருந்துகளும் வயிறு – குடல் சுவர்களை பாதிக்கின்றன. வயிற்று அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கும் பொருள், காஃபி, டீயில் உள்ள காஃபின் (சிணீயீயீமீவீஸீமீ) ஆகும். இந்த காஃபின் இல்லாத காப்பியும் அமிலப்பெருக்கை தூண்டும். பூண்டு, முள்ளங்கி கடுகு இவைகளை தனித்தனியாக, அதிக அளவில் பயன்படுத்தினால் தான் அதிக அமிலம் சுரக்கிறது. கோலா கலந்த குளிர்பானங்களும் அதிக அமிலத்தை சுரக்க வைக்கும்.