Monday, May 28, 2012

கிவி பறவை

கிவி பறவை பற்றிய தகவல்கள் !!!


கிவி பறவை (Kiwi) இது ஒரு கோழி இனம் இது பல வித்தியாசமான பன்புகள் கொண்டது. இதன் இறக்கைகள் மென்மையான சாம்பல்-பழுப்பு நிறத்தில் சிறிய மற்றும் மறைக்கப்பட்டதாக இருக்கும். மற்றும் மூக்கு நீளமானது வளைந்து இருக்கும். கால்களில் நான்கு விரல்களில் ஒரு பெரிய தடித்த மற்றும் தசை உள்ளன. கிவி தனித்து இரவு நேரங்களில் நடமாடும், இவை பகல் முழுவதும் பொந்துகளில் தூங்கும் மற்றும் புழுக்கள், பூச்சிகள், மற்றும் பழங்களை உண்ணும் இவை நியூசிலாந்து அதை சுற்றி உள்ள சிறிய நாடுகளின் காடுகளில் வாழ்கின்றனர்.


கிவியின் முட்டைகள் தாயின் அளவை பொருத்து பெரிதாக உள்ளன, பெண் கிவி தனது உடல் நிறையில் 15-20 சதவிதத்திற்கு சமமான ஒரு முட்டையை இடும். தீக்கோழி முட்டைகள் பெண்தீக்கோழி தான் எடையில் வெறும் 2 சதவீதமாகவும், மனிதன் அதன் தாயின் எடையில் வெறும் 5 சதவீத எடையுடையது.




கிவி அனைத்தும் ஐந்து அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் உள்ளன, அனைத்து இனங்களும் மோசமான வரலாற்று காடு அழித்தலால் பாதிக்கப்பட்டது. ஆனால் அவைகள் காட்டுவசிப்பிடங்களை தற்போது பெரிய பகுதிகள் மற்றும் தேசிய பூங்காக்களில் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது அவைகளின் உயிர் பிழைத்தலுக்கு மிக பெரிய அச்சுருத்தல், பாலூட்டி கொன்றுண்ணுகள் வேட்டையாடிகளைல் உள்ளது.


கிவி நியூசிலாந்தின் தேசிய அடையாளமாக உள்ளது. ஒரு சின்னமாக கிவி முதல் நியூசிலாந்து பிரிவுகளின் முத்திரைகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்தது. இது பின்னர் 1886 இல் தென் சென்டர்பரி பட்டாலியன் மற்றும் 1887 இல் ஹேஸ்டிங்ஸ் துப்பாக்கி தன்னார்வலர்களின் முத்திரைகள் இடம்பெற்றது. பிறகு விரைவில், கிவி பல இராணுவ முத்திரைகளில் வெளிவந்தது, மற்றும் 1906 இல் கிவி, ஷூ பாலிஷ்க்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது.


முதல் உலக போரின் போது, நியூசிலாந்து வீரர்கள் பெயர் கிவி "kiwi" பொது பயன்பாட்டிற்கு வந்தது, மற்றும் ஒரு மாபெரும் கிவி (இப்போது Bulford Kiwi அறியப்படுகிறது),


கிவி Kiwi நியூசிலாந்தில் மிகவும் நன்கு அறியப்பட்ட தேசிய சின்னமாக மாறிவிட்டது, மற்றும் பறவை பல நியூசிலாந்து நகரங்களில், கிளப் மற்றும் அமைப்புக்களின் ஆயுத, மற்றும் முத்திரைகள் கோட் முக்கியமாக உள்ளது. நியூசிலாந்து டாலரில் பெரும்பாலும் கிவி "kiwi டாலர்" என குறிப்பிடப்படுகிறது

விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ்

யுரேக்கா யுரேக்கா என்று ஓடிய விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ் பற்றிய தகவல் !!! (must read and share )

நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டறியும்போது அவர்களிம் மனநிலை எந்தளவுக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கும் நாம் அவர்களது மனநிலையில் இருந்தாலொழிய. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம். 

ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் அந்த விஞ்ஞானி. சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில் யுரேக்கா யுரேக்கா என்று மகிழ்ச்சி கூச்சலிட்டு ஓடினார். யுரேக்கா என்றால் கிரேக்க மொழியில் கண்டுபிடித்துவிட்டேன் என்று பொருள்.

ஞானம் மானத்தைவிட பெரியது என்று நம்பி அவ்வாறு பிறந்த மேனியாக ஓடிய அவர்தான் பொருள்களின் டென்ஸிட்டி அதாவது அடர்த்திபற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 ஆம் ஆண்டு பிறந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரது தந்தை ஒர் ஆராய்ட்சியாளர் குடும்பம் செல்வ செழிப்பில் இருந்தது. தன் மகன் நன்கு கல்விகற்று தன்னைப்போலவே ஆராய்ட்சியாளனாக வேண்டும் என விரும்பிய தந்தை ஆர்க்கிமிடிஸை கல்வி பயில எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.

ஆர்க்கிமிடிஸும் நன்கு கல்வி பயின்று தான் பிறந்த சிரகூஸ் நகருக்கு திரும்பினார். இரண்டாம் ஹெயிரோ என்ற மன்னம் அப்போது சிரகூஸை ஆண்டு வந்தான். தனக்கு ஒரு தங்க கிரீடம் செய்து கொள்ள விரும்பிய அந்த மன்னன் நிறைய தங்கத்தை அளித்து நல்ல கீரீடம் செய்து தருமாறு தன் பொற்கொல்லரை பணித்தார். கிரீடம் வந்ததும் தான் கொடுத்த தங்கத்துக்கு நிகராக அது இருந்ததை கண்டு மகிழ்ந்தார் மன்னர். இருப்பினும் கிரீடத்தில் கலப்படம் ஏதேனும் செய்யபட்டிருக்குமா? என சந்தேகம் மன்னருக்கு எழுந்தது. இந்த பிரச்சினையை ஆர்க்கிமிடிஸிடம் சொன்னார் இதைப்பற்றி ஆர்க்கிமிடிஸ் பல நாள் சிந்தித்து கொண்டிருந்த போதுதான் அந்த குளியலறை சம்பவம் நிகழ்ந்தது.

தண்ணீர்த்தொட்டியில் குளிப்பதற்காக அவர் இறங்கியபோது தொட்டி நிறைய இருந்த தண்ணீரில் ஒரு பகுதி வெளியில் வழிந்தது. அது எப்போதுமே நிகழும் ஒன்றுதான் என்றாலும் மன்னரின் கலப்பட பிரச்சினைக்கான தீர்வை அந்த நொடியில் கண்டார் ஆர்க்கிமிடிஸ். அதனால்தான் ஆர்க்கிமிடிஸ் ஆடையின்றி யுரேக்கா என்று கத்திகொண்டு ஓடினார். உற்சாகம் தனிந்ததும் மன்னரிடம் இருந்து கிரீடத்தை வரவழைத்து அதன் எடையை அளந்து பார்த்தார். பின்னர் அதே எடை அளவுக்கு சுத்தமான தங்கத்தையும் வெள்ளியையும் வரவழைத்தார். சுத்தமான தங்கம் எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகிறது என்பதை அறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்கத்தை போட்டு வெளியேறும் நீரின் அளவை கணக்கெடுத்து கொண்டார்.

அதேபோல சுத்தமான வெள்ளி வெளியேற்றும் அளவையும் கணக்கெடுத்துக்கொண்டார். கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும். ஆனால் அது சுத்த தங்கமும் சுத்த வெள்ளியும் வெளியேற்றிய நீரின் அளவுகளுக்கு இடைபட்ட அளவு தண்ணீரை வெளியேற்றியது. அதன் மூலம் கிரீடத்தில் பொற்கொல்லர் கலப்படம் செய்திருக்கிறார் என்பதை மன்னருக்கு நிரூபித்தார் ஆர்க்கிமிடிஸ். அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட On Blotting Bodies என்ற புத்தகம் இன்றைய நவீன இயற்பியலுக்கு அடிப்படையாக விளங்குகிறது.

ஆர்க்கிமிடிஸ் கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கியதோடு வான சாஸ்திரத்திலும் இயந்திர நுட்பங்களிலும் பொறியியலிலும் தன்னிகரற்று விளங்கினார். அவரது மதிநுட்பத்தை கண்டு ரோமானிய சாம்ராஜ்யமே மலைத்த ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ரோமானிய கடற்படை சிரகூஸ் நகரை முற்றுகையிட்டது. சிரகூஸ் நகரை நோக்கி நெருங்கியபோது சுமார் 500 அடி உயர குன்றின் மீதிருந்து கண்களை கூச வைக்கும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ரோமானிய கடற்படை வீரர்களுகு என்னவென்று புரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஒளியின் தக தகப்பு அதிகரித்தது. அப்போதுதான் கிரேக்கர்களுக்கு பலமாக ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை இருப்பது ரோமானிய கடற்படைத் தளபதி மார்க்ஸ் கிளேடியஸ் மாஸில்லஸ்க்கு நினைவுக்கு வந்தது.

ஏதோ நிகழப்போகிறது என்று சுதாரிப்பதற்குள் பாய்மரக் கப்பல்களின் படுதாக்கள் தீப்பற்றி எறிந்தன. சில நிமிடங்களுக்குள் பெரும்பாலாம கப்பல்கள் தீக்கரையாகி நாசமாயின. அப்போதுதான் ரோமானியர்களுக்கு புரிந்தது ஆர்க்கிமிடிஸ் பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகளை குன்றின் மீது நிறுவி அதில் சூரிய ஒளியினை குவித்து அதனை போர்க்கப்பல்கள் மீது பாய்ச்சி சாகசம் புரிந்திருக்கிறார் என்பது. இப்படி பல போர்க்காப்பு சாதனங்களையும் உத்திகளையும் உருவாக்கி புகழ் பெற்றார் ஆர்க்கிமிடிஸ். அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்த ரோமானியத் தளபதி மாஸில்லஸ் எந்த சூழ்நிலையிலும் படையெடுப்பு வெற்றி அளித்தாலும் சிரகூஸில் எவரைக் கொன்றாலும் ஆர்க்கிமிடிஸிக்கு மட்டும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கட்டளையிட்டுயிருந்தார்.

ஆர்க்கிமிடிஸ் கடல் தாக்குதலிருந்து சிரகூஸை காப்பாற்றிய மூன்று ஆண்டுகளில் ரோமானியர்கள் மீண்டும் படையெடுத்தனர். அப்போது தனது 75 ஆவது வயதில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து வட்டங்களையும் கோனங்களையும் வரைந்து ஆராய்ட்சி செய்து கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரை யாரென்று அறியாத, அவரின் பெருமை தெரியாத ஒரு ரோமானிய வீரன் ஆர்க்கிமிடிஸின் நெஞ்சில் வாளை பாய்ச்சினான். அந்த கிரேக்க சகாப்தம் சரிந்தது.

கேட்டர்பில்ட் எனப்படும் கவன்கல் எறிந்து விரோதி படைகளை தாக்குவது போன்ற பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ். அவர் உருவாக்கிய பல சாதனங்கள் நவீன உத்திகளோடும் வடிவமைப்புகளோடும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லிவர் எனப்படும் நெம்புகோல் மூலம் எப்படிப்பட்ட பளுவையும் தூக்க முடியும் என்று அவர் செய்து காட்டினார். லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி ஒரு கப்பலில் ஏராளமான பொருட்களை ஏற்றி வேறு எவரது துணையும் மற்றும் இயந்திரத்தின் துணையும் இன்றி தான் ஒருவராகவே அந்த கப்பலையே நகரச் செய்து காட்டினார். 

ஒருமுறை சிரகூஸின் மன்னர் ஆர்க்கிமிடிஸிடம் உங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லையா என்று கேட்க அதற்கு அவர்:

நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...

என்று பதில் சொன்னாராம். எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார்.

சங்பரிவார் அமைப்பு

அன்றைய விடுதலைப்போரில் இன்றைய 'தேசப்பக்தர்கள் ஒரு பார்வை !!!

சங்பரிவார் அமைப்புகள்தான் இந்த நாட்டின் உண்மையான ' தேசபக்த' அமைப்புகள் என்ற பிரச்சாரத்தை பார்ப்பனீய சக்திகளும் , சங்கராச்சாரிகளும் தொடர்ந்து செய்து வருகிறார்கள் .தேசப்பக்தி என்பதற்கு சங்பரிவார்களும் தேசியவாதிகளும் வைத்துள்ள அளவுகோலை வைத்து பார்த்தால் இதே சங்பரிவார்கள் தேசபக்தர்களாக ஒரு போதும் இருந்ததில்லை .இதுவே வரலாற்று உண்மை .

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நடத்திய சுதந்திர போராட்டத்தில் பாலகங்கார திலகர் காலத்துக்கு பிறகுதான் , காந்தி தலைமை தாங்க வருகிறார் .பிரிவினையை எதிர்த்து திலகர் நடத்திய போராட்டம் மத அடிப்படையிலேயே நடந்தது என்பதுதான் வரலாறு .

விடுதலைப் பெறும் இந்தியா இந்துக்களின் தேசமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் திலகர் தனது போராட்டங்களை நடத்தினார் . அதே கொள்கையை ஏற்றுக்கொண்ட பார்பனர்கள் திலகரை தீவிரமாக ஆதரித்தனர் .

மராட்டிய பார்ப்பனர் திலகர்தான் ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்திற்கு முன்னோடி . டாக்டர் அம்பேத்கர் ,அவரது 'காந்தியும் , காங்கிரசும் தீண்டப்படாதொற்கு செய்தது என்ன ?. என்ற நூலில் திலகரின் வர்ணாசிரம ஆதரவை அம்பலப்படுத்தியுள்ளார் .

சோலாப்பூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் திலகர் இவ்வாறு பேசினார்"செக்கு ஆட்டுகிறவன்,வெற்றிலை பாக்கு கடை வைத்திருப்பவன் ,சலவைத்தொழில் செய்கிறவன் இவனெல்லாம் எதற்காக சட்டசபைக்கு போக வேண்டும் ? சட்டத்திற்கு கீழ்படிந்து நடக்க வேண்டியதுதான் இந்த சாதிக்காரனுக்கு வேலையே தவிர சட்டத்தை உண்டாக்கும் இடத்திற்கு போகக் கூடாது ".

பெண்களை பள்ளிகூடத்திற்கே அனுப்பக்கூடாது என்று சொன்ன திலகர் நடத்திய 'சுந்திரப்போராட்டம் எப்படிப்பட்டது என்பதற்கு ஓர் உதாரத்தை குறிப்பிடலாம் 1897 ஆம் ஆண்டு பண்பாய் , சூரத் ,பூனா உட்பட இந்தியாவின் மேற்கு பகுதி முழுவதும் பயங்கரமான பிளேக் நோய் பரவி , ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் .

அதனால் பிரிட்டிஷ் கப்பல்கள் இந்தியாவிற்கு வருவது நிறுத்தப்பட்டது .அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் W .C .ராஹ்ட் என்ற ஐ சி எஸ் அதிகாரி தலைமையில் பிளேக் த்டுப்புக்கமிட்டி ஒன்றை அமைத்தது .பிளேக் நோய்க்கு காரணம் எலிகள்தான் என்று கண்டறியப்பட்டு , எலிகளை ஒழிக்கும் வேலைகள் நடந்தன .

பார்ப்பனர் திலகர் 

ஆனால் மதவெறியில் மூழ்கிப்போனவர்கள் , எலி 'விநாயக'கடவுளின் வாகனம் என்பதால் ,அதை கொல்லக்கூடாது என்பதோடு ,வியாதிக்கு உட்பட்டவர்களும் சிகிச்சை பெறக்கூடாது என்று தடுத்தனர் .

நோயாளிகளின் வீட்டுக்குள்,சிகிச்சைக்காக மருத்துவர்கள் குழு சென்ற போது, பல பார்பனர்கள் , " பிராமர்களின் வீட்டுக்குள் மிலேச்சர்கள் நுழையக்கூடாது " என்று எதிர்த்தனர் .

நோய் தடுப்புக்கமிட்டி தலைவராக இருந்த ராஹ்ட் , மற்றொரு அதிகாரி அயர்ஸ்ட் ஆகிய இருவரும் 1879 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தேதி பூனாவில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் .

பூனாவைச்சார்ந்த பார்பனர்கள்தான் இதற்கு சதித்திட்டம் வகுத்தார்கள் என்று புலன் விசாரணையில் கண்டறியப்பட்டது . இந்த கொலையில் திலகருக்கும் தொடர்பிருந்தது உறுதி செய்யப்பட்டு , அவர் 18 மாதம் செர்ரைத்தண்டனை பெற்றார் .

1942 ஆம் ஆண்டு காங்கிரஸ் , 'வெள்ளையனே வெளியேறு ' இயக்கத்தை அறிவித்தபோது , கல்கத்தா மாகான அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி என்ற வங்காள பார்ப்பனர் .ஆர்.எஸ்.எஸ் .சின் அரசியளைப்பாக திகழ்ந்த ஜன சங்கம் கட்சி பெயர் மாற்றம் பெற்ற போது , அதன் மூத்த தலைவராக இருந்தவரும் இவர்தான் . இந்த முகர்ஜி காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்தவுடன் , ஒருஅமைச்சர் என்ற முறையில் பிரிட்டிஷ் அதிபராக இருந்த சர்.ஜான் ஹீர்பட்டுக்கு,அவர் கேட்காமலேயே கடிதம் எழுதினார் .

காங்கிரசின் சுதந்திரப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதவில்லை . " காங்கிரசின் பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கம் , பல பகுதிகளுக்கும் பரவும் பேராபத்து இருக்கிறது . யுத்தம் நடக்கும் காலத்தில் , இப்படி மக்கள் உணர்வுகளை தூண்டிவிடுவது உள்நாட்டு பாதுகாப்பை சீர் குலைத்துவிடும். எனவே காங்கிரசார் போராட்டத்தை அடக்கியாக வேண்டும்" என்று கடிதம் எழுதியவர்தான் இந்த முகர்ஜி .


ஆதாரம் : இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் (17.8.1992 )

அதே 1942 ஆம் ஆண்டு ம.பி.மாநிலத்தில் பட்டேசுவர் எனும் ஊரில் , முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரது சகோதரர் பிரேம் பிகார்லால் பாஜ்பாய் மற்றும் பலர் கலந்து கொண்டு , கைது செய்யப்பட்டனர் .

அப்போது வாஜ்பாயும் அவரது சகோதரரும் , கலவரத்தில் ஈடுப்பட்டு தலைமறைவாக இருக்கும் நபர்களை பற்றிய தகவல்களையெல்லாம் அதிகாரிகளிடம் காட்டி கொடுத்து , அவர்கள் மட்டும் விடுதலை வாங்கி கொண்டனர்.அப்போது வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினராக இருந்த கிரிஜா சங்கர் பாஜ்பாய் என்ற பார்ப்பனர் மூலம் இந்த பேரம் நடந்தது . இந்த உண்மையை வாஜ்பாய் சகோதரர் மத்திய பிரதேச அரசாங்கமே நடத்தும் சந்தேஷ் என்ற பத்திரிகையில் ஒப்புக்கொண்டு எழுதி இருக்கிறார் .(12.5.1973) (ஆதாரம் )

பிரண்ட்லைன் ஆங்கில பத்திரிகை, வாஜ்பாய் பிரதமர் ஆனவுடன் , இந்த கட்டுரையை வெளியிட , வாஜ்பாய் வழக்குத் தொடரபோவதாக கூற , பிறகு அந்த பத்திரிகை செய்தியாளர்களே வாஜ்பாயை சந்தித்து , ஆதாரங்களை காட்டியபோது , வாஜ்பாய் மௌனமாகிவிட்டார் .

பிளிட்ஸ் வார ஏடும் இத்தகவலை அம்பலப்படுத்தியது .(ஆதாரம் )

1942இல் காங்கிரசார் ' வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை நடத்தியபோது , ஆர் எஸ் எஸ் காரர்கள் பலர் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தார்கள் . சிலர் பிரிடிஷ் ராணுவத்திற்கு தேவையான இயந்திரங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை அரசுடன் செய்துக்கொண்டனர் .

பிரிட்டிஷார் உத்தரவை ஏற்று ஆர் எஸ் எஸ் சில் செயல்பட்டு வந்த ராணுவ பிரிவை ஆர் எஸ் எஸ் கலைத்தது . தங்களது சீருடைகளை மாற்றிக்கொண்டனர் . இந்த நடவடிக்கைகளுக்காக பம்பாய் ஆளுநரிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ்களை ஆர் எஸ் எஸ் காரர்கள் பெற்றனர் .

சுதந்திரம் வந்த நாளான 1947 ஆகஸ்டு பதினைந்தில் பூனாவில் ஆர் எஸ் எஸ் காரர்கள் கூடி தங்களின் காவிக்கொடியை ஏற்றி இந்துக்களின் நாடாக மாற்ற சபதமேற்றனர் .அந்த கூட்டத்தில் பிறகு காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவும் இருந்தான் .

" பிரிடிஷார் இந்த நாட்டை விட்டு வெளியேறமாட்டார்கள் காங்கிரசாரிடம் ஆட்சியை தந்தாள் இரண்டு மாதங்கள் கூட இவர்களால் சமாளிக்க முடியாது " என்றுதான் ஆர் எஸ் எஸ் தலைவர் கோல்வால்கர் தனது ஊழியர்களிடையே பேசி வந்தார் .

(ஆதாரம் ): டி.ஆர் . கோபால் எழுதிய ஆர் எஸ் எஸ் பற்றிய ஆய்வு நூல் 

தங்களுடைய விசுவாசத்தை பாராட்டி பிரிடிஷார் ஆர் எஸ் எஸ் இடம் தான் நாட்டை ஒப்படைத்துவிட்டு வெளிஎரப்போகிரார்கள் என்று ஆர் எஸ் எஸ் தலைவர்களே எதிர்பார்த்து பிரச்சாரம் செய்தனர் .

(ஆதாரம் ) : ஹெமேந்திரநாத் எழுதிய THE END OF DREAM, AN INSIDE VIEW OF THE RSS TODAY 

சாவர்க்கார்

காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட சாவர்க்கரை , மிகச்சிறந்த விடுதலைப்போராட்ட வீரர் என்று அத்வானி நாடாளுமன்றத்தில் புகழ்ந்தார் .

அவரது பெயரை வமான நிலையம் ஒன்றுக்கு வாஜ்பாய் ஆட்சியின் போது சூட்டப்பட்டது ,அவரை பற்றிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு அரசு ரூ 2 கோடி நிதி உதவி செய்திருப்பதாக ஆர் எஸ் எஸ் இன் அதிகாரப்பூர்வமான தமிழ் ஏடான விஜயபாரதம் செய்தி வெளியிட்டிருக்கிறது .

இவர் துவக்கிய ஒரு தீவிரவாத அமைப்பு லண்டனில் இந்திய அலுவலகத்தில் பண புரிந்த ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை கொலை செய்தது . அதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாவர்கர் இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டு அந்தமான் தீவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அடைக்கப்பட்டார் .

சிறைச்சாலையிலிருந்து செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்து , மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்ததொடு தன்னை விடுதலை செய்தால் , பிரிட்டிஷ் ஆட்சி அமால் படுத்த விரும்பும் மாண்டேகு சேம்ஸ்போர்ட் சீர் திருத்தத்திற்கு முழு ஆதரவு தருவதாக உறுதி தந்தார் .இந்த சீர் திருத்தத்தை அப்பொழுது காங்கிரஸ் எதிர்த்து கொண்டிருந்தது .மன்னிப்பு கடிதத்தை பிரிடிஷ ஆட்சி ஏற்றுக்கொண்டு இவரை விடுதலை செய்தது .
(ஆதாரம் ) : பிரண்ட்லைன் 1995 ஏப்ரல்

தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு , பார்பன மேலாண்மைக்கு ஆதரவு என்ற கொள்கையை ஏற்க மறுத்த காரணத்தால் ஆர் எஸ் எஸ் ஐ சார்ந்த கோட்சே எனும் பார்ப்பனரால் 1948 ஜனவரி 30 காந்தியை சுட்டுக்கொண்டார் .

இப்படி ஏராளமான சான்றுகளை அடுக்கிகொண்டே போகலாம் . இப்பொழுது இவர்கள்தான் தங்களை தேசப்பக்தர்களாக காட்டிகொண்டிருக்கிரார்கள் . வரலாறுகளை மறைப்பதும் திரிப்பதும் சங்கபரிவார்களின் கலாச்சாரமாகிவிட்டது .

நன்றி 
சமுதாய அரங்கம்

Sunday, May 27, 2012

பத்மநாபபுரம் அரண்மனை

                                                                                         பத்மநாபபுரம் அரண்மனை !!!

கன்னியாகுமரியில் உள்ள பிரபலமான பத்மநாபபுரம் அரண்மனையை மிக அருமையான ஒரு அரண்மனை . கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவிலில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பிரம்மாண்டமான அரண்மனை. 1798 ஆம் ஆண்டு வரை இந்த அரண்மணை டிரவண்கோர் ஆட்சியாளர்களின் தலை நகரமாக இருந்தது.

இந்த அரண்மனை 1601 ஆம் ஆண்டு இரவிப்பிள்ளை இரவிவர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. மந்திர சாலை, தை கொட்டாரம், நாடக சாலை, நான்கு மாடி கட்டிடம், தெற்கு கொட்டாரம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. அரசவையே மந்திர சாலை என்று அழைக்கப்பட்டது.மந்திர சாலையின் ஜன்னல்கள் அழகிய வண்ணமயமான மைகாவால் கட்டப்பட்டது. மைகா வெயிலின் அளவை குறைக்கிறது. தரை தேங்காய் மூடிகளாலும், முட்டைகளாலும் ஆனது. தமிழகத்தில் இருந்தாலும் அரண்மனை கேரள கட்டிடக் கலையின் பாணியிலே அமைக்கப்பட்டுள்ளது.

தை கொட்டாரம் பழமையான கட்டிடம் என்றே சொல்லப்படுகிறது. இந்த கொட்டாரத்தில் நாலுகட்டு, ஏகாந்த மண்டபம் போன்ற அமைப்புகளும் உள்ளன. சில தூண்கள் ஒரே பலா மரத்தால் மிகுந்த கலை வேலைப்பாட்டுடன பிரமாண்டமாய் நிமிர்ந்து நிற்கிறது. தெற்கு கொட்டாரம் 400 ஆண்டுகள் பழமையானது. இப்போது அருங்காட்சியமாக காணப்படுகிறது. நான்கு அடுக்கு கட்டிடத்தின் நான்காவது மாடி உப்பரிக்க மளிகா என்றழைக்கப்படுகிறது. நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு இடம்



திறந்திருக்கும் நேரம்: 9.00 am - 1.00 pm , 2.00 pm - 4.30 pm
திங்கட்கிழமைகளில் செயல்படாது.

திருமலை நாயக்கர் மஹால்

திருமலை நாயக்கர் மஹால் (மதுரை ) !!!

17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால். உள்ளே செல்லும்போது நீங்கள் 3700 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பை காண முடியும். அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலை தூக்கி நிறுத்துகின்றன. தற்போது அந்த இடம் பூங்காவாக மாறியுள்ளது.

இந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் மற்றொன்று ரங்க விலாசம். இதில் சொர்க்க விலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது. அனைத்து கட்டிடங்களும் இந்த இரண்டு பகுதிகளுக்குள் அடங்கிவிடும். மஹாலின் சிறப்பம்சமே அங்கு இருக்கும் பிரமாண்ட தூண்கள். பல தூண்களை நீங்கள் என்ன நினைத்தாலும் கட்டிப்பிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய தூண்கள்.

இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது. மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றொன்றும் 58 அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்டது. தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் இந்த மஹால் இயங்குகிறது. தினமும் கண்கவர் ஒளி மற்றும் ஒலிக் காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. முக்கியமாக சிலப்பதிகாரத்தை பற்றி இந்த காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த மஹாலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள மஹாலுக்கே
வாய்ப்பு சென்று பார்க்கலாம் கிடைத்தால் சென்று பார்க்கலாம்

விஞ்ஞானி சர்' ஜகதீஷ் சந்திர போஸ்


தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று கண்டுபிடித்த விஞ்ஞானி சர்' ஜகதீஷ் சந்திர போஸ் !!

நமது இந்திய தேசத்தின் விஞ்ஞானியுமான, அறிவியல் ஆராய்ச்சியாளருமான 'சர்'ஜகதீஷ் சந்திர போஸ் . அவர்கள் தான் முதல் முதலில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவைகளுக்கும் மகிழ்ச்சி, துன்பம் போன்ற உணர்ச்சிகள் உண்டு என்ற உண்மையை கண்டறிந்து சொன்ன அந்த அதிசய விஞ்ஞானி

உணவில் இரண்டு வகை உண்டு சைவம், அசைவம். சைவ உணவை விரும்பி உண்பவர்கள் அசைவத்தை வெறுப்பதற்கு கூறும் முக்கிய காரணம் உயிருள்ள விலங்குகளைக் கொன்று அவற்றை புசிப்பது பாவம் என்பதுதான். அந்தக்கூற்றுக்குப் பின்னனியில் இலைமறைக் காயாக இருக்கும் ஒரு நம்பிக்கை தாவரங்களுக்கு உயிர் இல்லை என்பதாகும் அப்படித்தான் உலகம் நம்பியிருந்தது பல்லாண்டுகளாக, 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு விஞ்ஞானி அந்த நம்பிக்கையை பொய்யாக்கி அனைத்துவகை தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டி உலகின் புருவங்களை உயர்த்தினார். தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்றால் அவற்றை உண்பதும் பாவமா? என்ற சர்ச்சைக்கெல்லாம் நாம் போக வேண்டாம். அப்படிப்பட்ட நுணுக்கமான உண்மையை ஆராய்ந்து சொன்ன அந்த விஞ்ஞானிக்கு வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம். அவர்தான் இந்தியாவின் உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான 'சர்' ஜகதீஷ் சந்திரபோஸ்.

1858 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய கிழக்கு வங்காளத்தின் (தற்போது பங்களாதேஷ் நாட்டின் பகுதி)ஃபரீத்பூர் மாவட்டத்தில் மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார் போஸ். அவரது தந்தை ஒரு மருத்துவர். தம் ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு கல்கத்தாவின் செயிண்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார் போஸ். 19 வயதில் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் காட்டினார். இங்கிலாந்தில் இருந்தபோது லார் ரிலே (Lore Rele) என்ற விஞ்ஞானியின் நட்பு போஸ்க்கு கிடைத்தது. அவருடைய வழிகாட்டுதல் மற்றும் தூண்டுதலின் பேரில் தாவரங்களைப் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் போஸ். கேம்பிரிட்ஜில் கல்வியை முடித்து இந்தியா திரும்பிய பிறகு கல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் விரிவுரையாளராக சேர்ந்தார்.

அப்போது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடப்பில் இருந்ததால் ஒரு விநோதமான பழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்திய மண்ணில் ஒரு வேலையைச் செய்வதற்காக ஒரு ஆங்கிலேயருக்கு கொடுக்கும் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்குதான் அதே வேலையைச் செய்யும் இந்தியருக்கு கொடுக்கப்பட்டது. அந்தப்பழக்கம் அந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்பட்டது. இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள் என்பதால் முழு ஊதியம் பெற தகுதியற்றவர்கள் என்பதுதான் அதற்குக்கூறப்பட்ட காரணம். ஜகதீஸ் சந்திரபோஸ் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை தனது அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி நன்கு கற்பித்ததோடு மட்டுமன்றி பல ஆராய்ச்சிகளையும் செய்தார். அவரது பணியில் முழு திருப்தியடைந்த கல்லூரி நிர்வாகம் போஸ்க்கு முழு ஊதியம் வழங்க ஆணையிட்டதோடு ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்கு தரப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க உத்தரவிட்டது. "பொறுத்தார் பூமி ஆள்வார்" என்பதற்கு அந்த சம்பவம் ஒரு நல்ல சான்று.

அவ்வாறு கிடைத்த தொகையைக் கொண்டு ஒரு அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார் போஸ். அந்த ஆய்வுக்கூடத்தில் தாவரவியல், இயற்பியல் துறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அடிப்படையில் அவர் ஒரு இயற்பியல் வல்லுநராக இருந்தாலும் ரேடியோ வேவ்ஸ் (Radio waves) எனப்படும் வானொலி அலைகள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார். உண்மையில் வானொலியின் தந்தை என போற்றப்படும் விஞ்ஞானி மார்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிப்பரப்பு அமைப்பு முறையை போஸ் உருவாக்கிவிட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் அந்தக்கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் அப்போது கண்டுகொள்ளவில்லை என்றும் அந்தக்குறிப்பு குறித்து வைத்திருக்கிறது.

தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்று நம்பிய போஸ் அசைவுகளையும், சலசலப்புகளையும் அளக்கும் பல்வேறு நுண்ணிய உணர் கருவிகளை சொந்தமாக உருவாக்கி அவற்றைக்கொண்டு தாவரங்களின்மீது பல்வேறு சோதனைகளைச் செய்தார். அந்த சோதனைகளின் மூலம் வெப்பம்,குளிர், ஒளி, ஒலி போன்ற stimuli அதாவது புறத்தூண்டுதல்கள் எப்படி மனிதர்களையும், விலங்குகளையும் பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார். போஸ் ஒரு புகழ்பெற்ற பரிசோதனையையும் செய்து காட்டினார் புரோமைட் (Bromide) என்ற நச்சுத் தனிமத்தை ஊசி மூலம் ஒரு எலிக்குள் செலுத்தினார். அதே நேரத்தில் அதே தனிமத்தை ஓர் தாவரத்திலும் செலுத்தினார். எலி, தாவரம் இரண்டுமே மரணத்தின் விளிம்பில் போராடியதைக் கண்டு வியந்த அறிவியல் உலகம் போஸின் ஆய்வுகளை கைதட்டி பாராட்டியது.

தனது பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளைக் கொண்டு இரண்டு புகழ்பெற்ற நூல்களை வெளியிட்டார் போஸ். (Response in the Living and Non-Living), (The Nervous Mechanism of Plants) என்ற அந்த இரண்டு நூல்களும் சொன்ன கருத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. தாவரங்களுக்கும் உயிர் உண்டு அவை மனிதர்களைப் போலவே உணவு உண்டு செரிப்பதுடன், இரவில் உறங்கி காலையில் விழிக்கின்றன. தாவரங்களுக்கும்கூட பிறப்பும், இறப்பும் உண்டு, நம்மைப்போலவே மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகளும் உண்டு. இவைதான் அந்த நூல்கள் சொன்ன கருத்துகளாகும். தாவரங்களை நேசிப்பவர்கள் ஒன்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம் அவற்றுடன் தினசரி அன்பாக பேசினால் அவை நன்றாக வளருமாம். ஜகதீஸ் சந்திரபோஸின் ஆய்வு முடிவுகளைப் பார்க்கும்போது அந்தக்கூற்றும் உண்மை என்றே தோன்றுகிறது.

அறிவியல் ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் ஜகதீஷ் சந்திர போஸ்க்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது அப்போது இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம். 1920 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் கழகத்தின் உறுப்பினராக அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலாரைத் தந்த நமது இந்திய தேசம்தான் அந்தப்பயிர்களுக்கு உயிர் உண்டு என்ற உண்மையைக் கண்டு சொன்னவரையும் தந்திருக்கிறது. அந்த அற்புத விஞ்ஞானி 1937 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் தமது 82 ஆவது வயதில் காலமானார்.

தோல்வியிலிருந்துதான் உண்மையான வெற்றி கிடைக்கிறது என்று ஒருமுறை கூறினார் 'சர்' ஜகதீஷ் சந்திர போஸ். “எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே; எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இதில் மனிதர்களின் பங்கு மகத்தானது. எல்லா நாட்டு மக்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டாமல், அவநம்பிக்கை கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதனை வாழ்ந்தும் காட்டியவர்
 

Monday, May 21, 2012

அரைஞாண் கயிறு

அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினார்.


"அரைஞாண்" நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி பட கூடாதுன்னு தான் பா கட்டிவிடுறோம் னு சொல்லுவாங்க ....

உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?? நிச்சயமாக இல்லை ....

அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது

முதலாவது பலன்
-------------------------------------
அரைஞாண் என்பது கிராமத்தில் வசிக்கும் அன்பர்களுக்கு அவசர கால் உதவி..கழனியிலும் காடுகளிலும் தற்பலம் மறந்து பிறர் நலம் பேணும் ஏழைகளுக்கு கரம் கொடுக்கும் ராஜ தந்திரி அது.. விடம் கொண்ட பூச்சிகள், பாம்பு தடம் பதித்து ஊடாடும் போது அவர்களுடன் வசிப்பவை அவை. எதிர்பாராமல் தீண்டப்பட்ட போது கதிர் முற்றிய கழனியில் கயிறு கிடைப்பது அரிது. விடத்தின் கடிவாய்க்கும்
இதயத்துக்கும் இடையே மருத்துவத்திற்குச் செல்லுமுன் தடைபோடும் உத்திக்கு அரைஞாண் கயிறு உற்ற தோழன்.

கையினால், விடம் உற்ற நேரம் அரைஞாண் கயிறு அறுத்தெடுக்கப்பட்டு அவசர உதவியாய் இறுக்கிக் கட்டப்படுவது வருமுன் காக்கும் உதவி. எப்போதும் எதிர்பார்த்து தப்பாமல் உதவும் அந்தக் கயிறு ஒரு பாட்டிவைத்திய முன்னோடி.

மருத்துவ பலன்
-----------------------------------
ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம்
ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி , தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விடயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத் தான் செய்கிறார்கள். நானும் கட்டி இருக்கிறேன் ....

இந்த அரைஞாண் கொடியின் மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட கண்ட தாயத்துகளை கட்டி தொங்க விடுவதும், அது திருஷ்டி காக என்று புறம்பு கூறுவதும் தவறு....

நம் முன்னோர்கள் செய்த தவறு, தாங்கள் பின்பற்றிய முறைகளுக்கு உண்மையான உள் அர்த்தம் என்ன வென்று சொல்ல்மலேயே விட்டது ... அது தான் இந்த ஆரிய பூசாரிகளுக்கு வசதி ஆகிவிட்டது ... அவன் வந்து இந்த அரைஞான் கொடி தீட்டு அதை கழட்டி போட்டு விடு என்று சொன்னால் நம் தமிழர்கள் அதை உடனே கழட்டி போட்டு விட்டு தான் மறுவேலை பார்பார்கள் .. ஏன் என்றால் நம் பாரம்பரிய பெருமை தெரியாமல் , கல் சிலைக்கு தீபஆராதனை காட்டும் அவன் வார்த்தையே உண்மை என்று நம்பும் மனப்பக்குவம் தான்.

நம் முன்னோர்கள் நம் பெருமைகளை நமக்கு சொல்ல மறந்ததை போல அல்லாமல் இனி நாமாவது நம் பிள்ளைகளுக்கு இது போன்ற நம் பாரம்பரியத்தை விட்டுகொடுகாமல் சிறு சிறு விடயங்கலளையும் அவர்களுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....

மச்சு பிக்ச்சு




நாம் அனைவரும் இந்த இடத்தை எந்திரன் படத்தில் பார்த்து இருப்போம் . அதனுடைய வரலாற்று சிறப்பை பற்றிய சில தகவல்கள் .

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும். இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.

இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.

1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் ஆரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.

மச்சு பிக்ச்சு இன்கா காலத்தைய கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பளபளபாக்கப்பட்ட சுவர்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள "இன்டிகுவாட்டானா" என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோயில் இதன் முக்கிய பகுதியாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதனைக் கண்டுபிடித்த ஹிராம் பிங்கம் தன்னுடன் எடுத்துச் சென்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இந்நகருக்கு மீளக் கொண்டு வர பெரு அரசுக்கும் யேல் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் 2007ம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் பெருமளவு உல்லாசப் பயணிகள் இங்கு முற்றுகை இடுவதும் இக்களத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 2003ம் ஆண்டில் மட்டும் 400,000 உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்திருந்தனர்.

மச்சி பிக்ச்சு நகரம் 1450 ஆம் ஆண்டளவில் இன்கா பேரரசின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது அமைக்கப்பட்டது. 100 ஆண்டுகளின் பின்னர் 1572 ஆம் ஆண்டில் எசுப்பானியர்களின் ஆக்கிரமப்பைத் தொடர்ந்து இந்நகரம் கைவிடப்பட்டது. எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரேயே இந்நகரத்தின் மக்கள் இங்கு பரவிய பெரியம்மை நோய் காரணமாக அழிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு. பிக்ச்சோ என்ற பெயருள்ள ஒரு நகரைப் பற்றி எசுப்பானியர்கள் அறிந்திருந்தார்கள் என்றாலும், அவர்கள் அந்நகருக்கு சென்றார்கள் என்பது குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் வேறு இடங்களில் உள்ள புராதன கற்பாறைகளை அழித்திருந்தனர் என்றாலும், மச்சு பிக்ச்சுவில் உள்ளவற்றை அவர்கள் தொடவில்லை.

கீரையில் உள்ள சத்து



கீரைகளைச் சாப்பிடுவதை தாழ்வாகக் கருதும் நிலை மாற வேண்டும். தினசரி உணவில் கீரைகள் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும். கீரைகள் விலை மலிவாக இருப்பதால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில்தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக நமக்கு எளிதில் கிடைக்கும் ஒரு கிலோ முளைக் கீரையில் உள்ள A வைட்டமின் சத்தைப் பெறுவதற்குச் சுமார் 70 கிலோ வாழைப்பழம் சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அகத்திக் கீரையில் உள்ள சுண்ணாம்புச் சத்தைப் பெற வேண்டுமானால் 113 கிலோ ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும். இந்த அளவுக்கு பழங்களை விட கீரையில் சத்துக்கள் நிறைவாய் உள்ளன. இதனால் நம் தினசரி உணவில் கீரையை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பாலஸ்தீனத்தின் சிங்கம்-யாசர் அரபாத்

யாசர் அரபாத்- பலஸ்தீனத்தின் சிங்கம் !!!

அரை நூற்றாண்டாக பாலஸ்தீனப் போராட்டத்தின் சின்னமாக
விளங்கி, காலமான யாசர் அரபாத்தின் நீண்ட அரசியல்
பயணத்திலிருந்து சில குறிப்புகள்.

யாசர் அரபாத்தின் இயற்பெயர், முகமது அப்துல் ரஹ்மான்
அப்துல் ரவுப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்பதாகும்.
ஆகஸ்ட் . 4, 1929:எகிப்தின் கெய்ரோவில் பிறந்தார்.

இவர் மாணவராக இருந்தபோதே அரபாத், அரசியல் மற்றும்
சமூக ஆர்வலராக விளங்கினர்.1948-ஆம் ஆண்டு இஸ்ரேல்
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததை அடுத்து அடக்கு முறைக்கு
எதிரான போராட்ட வீரராக தோற்றம் பெறுகிறார் .

உலக போரின் போது பாலை வனங்களில் கை விடப்பட்ட
ஆயுதங்களை தேடி எடுத்து அவற்றின் பயன்பாடுகள் பற்றியும்
பயிற்சியும் பெற்று வந்தார். பின்னர் எகிப்திய ராணுவத்தில்
இணைந்து பயிற்சி பெற்றார்.

பின்னர் அரபு இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்களில் களத்தில்
செயற்ப்பட்ட இவர் 1958 ம் ஆண்டு அல்-பத்தா என்ற அமைப்பை
நிறுவினார். 1967-ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரில் அரபு நாடுகள்
தோற்றன, ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இஸ்ரேலியப் படைகள்
ஜோர்தான்நாட்டில் கரமே நகரைத் தாக்கிய போது, அதை அரபாத்தின்
அல்-பத்தா இயக்கம் பாதுகாத்தது. இதை அடுத்து, அரபாத் பாலஸ்தீன
விடுதலைஇயக்கத்தின் தலைவராக ஆனார்.

1970-ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டிலிருந்து அரபாத்தும் பாலஸ்தீன
விடுதலை இயக்கமும் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால்,
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து அவர்கள்
போராட்டம் தொடர்ந்தது. இக்கால கட்டத்தில், பாலஸ்தீனப்
போராளிகள் பல்வேறு நடவடிக்கைககளில் ஈடுபட்டன.

1974, நவ. 13: ஐநா சபையில் உரையாற்றினார். அவர் தனது
உரையில தம் ஒரு கையில் ஒலியமரக் கிளையும், இன்னொ
ருகையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளன,
எது வேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்கவேண்டும் என்று
கூறியிருந்தார்.

1987-ஆம் ஆண்டு, இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த பாலஸ்தீனப்
பகுதிகளில் "இன்டிபாடா" என்ற பெரும் கலகம் வெடித்ததை அடுத்து,
பாலஸ்தீனப் பிரச்னை, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம்
பெற்றிருந்தது. எனினும் 1991-ஆம் ஆண்டு நடந்த வளைகுடாப்
போரின் போது, அரபாத், இராக் அதிபர் சதாம் ஹூசைனை
ஆதரித்ததால், சதாம் ஹூசைனின் தோல்விக்குப் பிறகு அரபாத்,
இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டி வந்தது.

இதன் காரணமாக 1993-ஆம் ஆண்டு, நோர்வே நாட்டின்
அனுசரணையின் பேரில் சமரச உடன்பாடு ஏற்பட்டது.சமரச
உடன்பாட்டின் படி, இஸ்ரேலிய யூத அரசு பாலஸ்தீன
விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. பாலஸ்தீனர்களுக்கான
சுயாட்சி நிர்வாகம் அமைவதை, இஸ்ரேல் ஏற்றது. ஆனால்,
இஸ்ரேல்ஆக்கிரமித்த பகுதிகள்,எருசலேம் நகரின் எதிர்காலநிலை,
பாலஸ்தீன அகதிகள் நாடுதிரும்புவது ஆகிய பிரச்னைகள்
பெரும் இழுபறியாக அமைந்தது.இதனால் பலஸ்தீனர்களின்
போராட்டம் தொடர்த்து .
இஸ்ரேலுடன் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கைக்காக
1994 ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார் .
2004 ஆண்டு அராபத்தின் உடல்நிலை சீர்குலைந்ததை
அடுத்து, அவர் விமானத்தில் பாரீஸ் நகர் வந்து அங்கு
சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி
மரணம் அடைந்தார்.

அணு உலை அபாயம்

அணுவின் கோர முகம் என்னவென்று தெரிவதற்கு முன்னரே நாம் அணு உலையை ஆதரிக்க தயாராகிவிட்டோம், ஒரு உதாரணம் சொல்கிறேன் அதை வைத்து அணுவின் கோர முகத்தினை தெரிந்துகொள்ளுங்கள், ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய போது அந்த இடத்தின் தரை வெப்பம் எவ்வளவு தெரியுமா 9000 டிகிரி பேரன்ஹீட், அந்த வெடிப்பிலிருந்து கிளம்பிய காற்றின் வேகம் மணிக்கு 1500 மைல் வேகம். சாதாரனமாக நம் நாட்டில் வெயில் காலங்களில் அதிகபட்சமாக 115 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் உயரும், அதையே நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாமல் கோடைவாசத்தலங்களுக்கு சென்று நம்மை குளிர்வித்து கொள்கிறோம், வெறும் 115 டிகிரிக்கே இந்த நிலைமை என்றால் 9000 டிகிரிக்கு சாம்பல் கூட கிடைக்காது. நான் சொல்லியது ஒரு குண்டின் ஆற்றல் மட்டுமே, அணுஉலையானது அது போல் பல மடங்கு ஆற்றல் கொண்டது. இப்படிபட்ட பேராபத்தை ஆமோதிப்பதற்கு முன் நம்மிடையே பாதுகாப்பான மாற்று சக்தி உள்ளதா என்று பார்க்கவேண்டும், சூரிய ஒளியிலிருந்து தயாரிக்ககூடிய மின்சாரமானது 100 சதவீத பாதுகாப்புடையது, அது இருக்கையில் நம்மை மட்டுமல்லாது நம் வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் அணுமின்சாரம் தேவைதானா?
ஜப்பானில் புகுஷூமா அணு உலை வெடித்ததினால் ஏற்பட்ட கதிர்வீச்சு ஒருவருடம் ஆகியும் அளவு அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை, மேலும் அந்த கதிர்வீச்சின் அளவை கட்டுப்படுத்த ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளிடமே இன்னும் வழிமுறை கண்டறியப்படவில்லை, அப்படியே வழிமுறை கண்டறியப்பட்டாளும் கதிர்வீச்சை கட்டுபடுத்த இன்னும் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமாம். மேலும் அங்கே தற்சமயம் ஏற்பட்டுள்ள கதிர்வீச்சின் அளவு மனிதனை கொல்லகூடிய அளவைவிட 6 மடங்கு அதிகமாக உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. எனவே மனிதன் அங்கு செல்ல வாய்ப்பில்லை என்பதால் ஜப்பான் நவீன ரோபோட்களை தயார் செய்து அதன் மூலம் செயழிழப்பு செய்ய முடிவு செய்துள்ளது. ஜப்பானுக்கே இந்த கதி என்றால் நம்ம நாட்டில் இன்னும் ரோபோட் தயாரிப்புகள் வெறும் மாதரி வடிவத்தில் தான் உள்ளது.

கூடுதல் தகவல்:- பிரான்ஸ் அரசு 2007ம் ஆண்டு அணு உலை ஒன்றினை செயழிழக்க முடிவு செய்தது அதன்படி செயழிழப்பு செய்யும்போது தான் ஒரு உண்மை புரிந்தது அதாவது அந்த அணு உலையை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கடலுக்கு அடியில் பத்திரமாக பாதுக்காக்கப்பட வேண்டும், அவ்வாறு அவை பாதுகாக்கபட்டாலும் அதிலிருந்து கதிர்வீச்சு வெளியேறாது என்பதற்கு எந்த உத்திரவாதமும்மில்லை. இதன் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பியாவிலுள்ள அனைத்து அணு உலைகளையும் 2014 உடன் மூடிவிட முடிவு செய்துவிட்டது.

இதற்கு மேலும் நாம் அணு உலையை ஆதரித்தால் கொள்ளிக்கட்டையை எடுத்து நாமே நம் தலையை சொரிந்து கொள்வதற்கு சமமாகும்

Sunday, May 20, 2012

மாவீரன் மருதநாயகம்


மாவீரன் மருதநாயகம் (கமாண்டோ கான் )

1724இல் இராமநாதபுரம் பனையூரில் மருதநாயகம் பிள்ளையாகப் பிறந்து முகமது யூசுப் கானாக வளர்ந்து கமாண்டோ கானாக உயர்ந்தவன். மதுரை மக்களால், “கமாந்தோ கான்’’ என அன்பாக அழைக்கப்பட்டவன். இந்துவாகப் பிறந்து, கிறிஸ்துவர்களிடம் கல்விப் பயின்று இஸ்லாமியனாக இறந்தவன். 40 வயதே வாழ்ந்தாலும் நாடறிந்தவனாக மட்டுமல்ல இந்திய வரலாற்றில் சிறந்தப் போர் வீரனாக, இராணுவ நிபுணனாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன் கமாந்தோ கான். இந்திய இராணுவ வரலாற்றில் ஹைதர் அலியும், முகமது யூசுப் கானும் குறிப்பிடத்தக்கவர்கள். ஹைதர் அலி வேகத்திற்கு புகழ்பெற்றவர் என்றால், முகமது யூசுப்கான் விவேகத்துடன் தாக்குதலில் சிறந்தவன். ஆற்காட்டு நவாபும், கிழக்கிந்திய கம்பெனியும் பாளையக்காரர்களை அடக்கிட யூசுப் கானை முழமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

பனையூரில் இருந்த இல்லத்துப் பிள்ளைமார்களின் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று. கட்டுக் கடங்காமல் சுற்றித்திறிந்த யூசுப்கான் பாண்டிச்சேரிக்கு வந்து அன்றைய பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்காரனாகச் சேர்ந்தான். சில காலம் கழித்து வேலையிலிருந்து விலகி அல்லது நீக்கப்பட்டு தஞ்சைக்கு சென்று படைவீரனாகச் சேர்ந்தான். தஞ்சையில் தளபதி பிரட்டன், யூசுப் கானுக்கு கல்வி கற்றுக் கொடுத்தான். தனது ஆர்வத்தால் தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தான். அங்கிருந்து நெல்லூருக்கு மாற்றப்பட்டான் அங்கு தண்டல் காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி உயர்வை உழைப்பால் அடைந்தான். ஆற்காட்டில் சந்தா சாஹிப்புடன் வந்து தங்கி இருந்தபோது யூசுப்கானிடம் இருந்த வீரம், விவேகத்துடன் காதலும் சேர்ந்து கொண்டது. இந்தோ ஐரோப்பிய கலப்பின வழித்தோன்றலான மார்சியா என்ற பெண்ணைக் காதலித்து மணம் முடித்தான்.

திறமைக்கு திறவுகோல்

1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடுபிடியுத்தம் நடந்த காலம். அதேநேரத்தில் 1751இல் ஆற்காட்டு நவாபு பதவிக்கு முகமது அலி வாலாஜாவிற்கும் சந்தா சாஹிப்பிற்கும் போட்டியும் யுத்தமும் மூண்டது. முகமது அலி வாலாஜா திருச்சிக்கு தப்பித்து ஆங்கிலேயர்களிடம் சரண்அடைந்தார். சந்தா சாஹிப்பின் தாக்குதலை இராபர்ட்கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். ஆற்காட்டை மீட்பதற்காக சந்தாசாஹிப் தனது மகன் இராசாசாஹிப் தலைமையில் 10,000 படைகளை அனுப்பினான். இவர்களுக்கு உறுதுணையாக நெல்லூர் சுபேதாராக இருந்த யூசுப்கான் இருந்தான். யுத்தத்தில் பிரெஞ்சு ஆதரவளித்த சந்தாசாஹிப் படைதோல்விகண்டது. ஆங்கிலேயர்கள் முகமது அலி வாலாஜாவை நவாபாக நியமித்தனர். இதற்கு கைமாறாக மதுரை மற்றும் நெல்லையில் வரிவசூலிக்கும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தான் நவாபு.

யுத்தக்களத்தில் முகமது யூசுப்கானின் திறமை கண்டு வியந்தான் இராபர்ட்கிளைவ் தனது படையுடன் அவனை இணைத்தான். மேஜர் ஸ்டிங்கர்லா, யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தான். 1755ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களை அடக்குவதற்காக தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் யூசுப்கான் அனுப்பிவைக்கப்பட்டான்.

எட்டயபுரம், பாஞ்சாலங்குறிஞ்சி படைகளின் தளபதியாக இருந்த “வீரன்’’ அழகு முத்துக்கோனை, பெருநாழிகாட்டில் முகமது யூசுப்கான் சாகடித்தான். மறவர் பாளையங்களை தாக்கி வெற்றி கொண்டான். பூலித்தேவனை தோற்கடித்தான். மதுரையில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் வெற்றிபெற்றான். தனது வெற்றிப் பயணத்தை தடைகளைத் தகர்த்து தொடர்ந்தான். இக்காலத்தில் சென்னையை பிரெஞ்சுப்படை, முற்றுகையிட்டதால் யூசுப்கான் சென்னைக்கு அழைக்கப்பட்டான். பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர்லாலி தலைமையில் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை 1758இல் யூசுப்கான் யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதல் நடத்தி அதிசயிக்கத் தக்கவகையில் தோற்கடித்தான். இந்த தாக்குதல்பற்றி லாலி கூறுகையில், யூசுப்கான் தலைமையிலான படைகள் ஈக்களைப் போல் பறந்தார்கள் ஒரு பக்கத்தில் தடுத்து தாக்கிட முயலும்போது, அடுத்த நிமிடம் மறுபக்கத்திலிருந்து தாக்கினார்கள் என்று கூறினார். இவ்வெற்றி முகமது யூசுப்கானுக்கு பெரும் புகழ்தேடித்தந்தது. கிழக்கிந்திய கம்பெனி முகமது யூசுப்கானுக்கு “கமாண்டன்ட்’’ பதவி உயர்வை அளித்தது.

மதுரையின் மகுடத்தில்

கமாண்டோ கான் என்ற பதவி உயர்வுடன் முகமது யூசுப்கானை மதுரைக்கு மீண்டும் அனுப்பிவைத்தது கிழக்கிந்திய கம்பெனி. மதுரை மற்றும் திருநெல்வேலியில் வரிவசூல் செய்து வருடத்திற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டுமென கூறினர். யூசுப்கான் தெற்குசீமையின் தளநாயகனாக ஆட்சிபுரிய ஆரம்பித்தான். யூசுப்கான் சென்னையில் இருந்த போது மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களை எல்லாம் சூறையாடி இருந்தனர். யூசுப்கான் சூறையாடிய கயவர்களை தோற்கடித்து நிலங்களை மீட்டு கோயிலிடம் ஒப்படைத்தான். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை நிலைநாட்டுவதற்கு அன்றைய தினம் கள்ளர்கள் சவாலாக இருந்தனர். அவர்களது கலவரங்களை அடக்கி சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தினான். நத்தம் பகுதியில் கலவரங்களை அடக்கியபோது 2000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

மதுரையின் குளங்களையும், ஏரிகளையும் பழுதுபார்த்து பாசன வசதிகளை மேம்படுத்தினான். இடிந்துகிடந்த கோட்டைகளை பழுதுபார்த்தான். நிதித்துறை மற்றும் வணிகர்கள் பாதுபாப்பை மேம்படுத்தினான். யூசுப்கான் காலத்தில் நிர்வாக செயல்பாடு மேம்பட்டது. இதனால் மதுரை மக்கள் இவனை “கமாந்தோகான்’’ என்று அன்பாக அழைத்தனர். அவர்களின் உள்ளங்களிலேயே குடியேறினான். இதனால் நவாபுக்கும், கம்பெனிக்கும் வருவாய் பெருகினாலும் யூசுப்கான் வலுவாவதை பெரும் ஆபத்தாகக் கருதினர்.

நவாப்பின் நயவஞ்சகம்

முகமது யூசுப்கானின் செல்வாக்கை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் முயற்சித்தான் திடீரென புதிய உத்தரவைப் பிறப்பித்தான். வணிகர்களும், மற்றவர்களும் என் மூலமாகத்தான் வரிகளை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான். யூசுப்கான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை கிழக்கிந்திய கம்பெனியும் தந்திரமாகக் காயை நகர்த்தினர். நவாப்பின் பணியாளர்தான் யூசுப்கான் என்று அறிவித்தனர். இதனால் நவாபுக்கும், யூசுப்கானுக்கும் மோதல் அதிகமானது. டெல்லியின் ஷாவும், ஹைதராபாத் நிஜாம் கிமாம் அலியும் யூசுப்கான்தான் மதுரையின் சட்டப்படியான கவர்னர் என்று அறிவித்தாலும், நவாப்பும், கம்பெனியும் இதை ஏற்கவில்லை. 1761ஆம் ஆண்டு 7லட்சம் வரிவசூல் செய்து செலுத்திட முன்வந்தான்.

நவாபும், கம்பெனியும் எற்கவில்லை. காரணம் தங்களைவிட வலுவான மக்கள் செல்வாக்கு உள்ளவனை வளர்க்க விரும்பவில்லை. தெற்கு சீமையில் இருந்த பல கம்பெனி வணிகர்கள், யூசுப்கான் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வை உருவாக்கியுள்ளான் என்று புகார் தெரிவித்திருந்தனர். எனவே, கம்பெனியும், நவாபும் யூசுப்கானை கைது செய்துவர கேப்டன் மேன்சனிடம் உத்திரவிட்டனர். இதனிடையே யூசுப்கான் “தன்னை சுதந்திர ஆட்சியாளன்’’ என்று முதன்முதலாக அறிவித்துக்கொண்டு, படைதிரட்டினான் மதுரையில் 27,000 படைவீரர்களைக் கொண்டு பலமாக இருந்தான். அவனுக்கு ஆதரவாக பிரெஞ்சுத் தூதர்கள் வந்து சேர்ந்தனர்.

துரோகத்தின் வெற்றி

துரோகம் பல நேரத்தில் வீரம் செறிந்த போரின் முடிவை விரைவுபடுத்திவிடும், வீரர்கள் யுத்தக்களத்திலே வீழ்வதை தடுத்திடும். இங்கே யூசுப்கானுக்கும் அதுதான் நேர்ந்தது. 1763 செப்டம்பர் மாதம் காலோனல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்கினர் தஞ்சை, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, பாளையங்கள் கும்பினியருடன் கைகோர்த்தனர். மழையின் காரணமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. மீண்டும் கம்பெனி படையும், நவாபுவின் படையும் இணைந்து 22 நாட்கள் தாக்குதலை தொடுத்தனர். 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். கும்பினியர் படை நிலைகுலைந்து பின்வாங்கியது.
மீண்டும் சென்னை, பம்பாய் பகுதிகளிலிருந்து அதிக படைகள் நவீன ஆயுதங்கள் தருவித்து மதுரை மேஜர் பிரஸ்டன் தலைமையில் தாக்குதல் தொடங்கினர்.

முதலில் நத்தம் கள்ளநாட்டில் பாதைக் காவல்கள் அனைத்தையும் கைப்பற்றினர். 1764 ஜூன் மாதம் கோட்டையை முற்றுகையிட்டனர். கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. கும்பினியர் படையில் 160 பேர்கள் பலியாகினர். தாக்குதல் மூலம் தோற்கடிக்கும் பாத்தியங்கள் குறைவு எனக் கருதினர். எனவே, கோட்டைக்குச் செல்லும் உணவை நிறுத்தினர். குதிரையும், குரங்கும் உணவாக வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு குடிநீரை நிறுத்தினர். இதனால் கோட்டைக்குள் இருந்த படைகள் மற்றும் மக்களிடம் சோர்வும், குழப்பமும் ஏற்பட்டது. யூசுப்கான் தப்பிக்கும் முயற்சி வெற்றிபெறவில்லை. சரணடைய பிரெஞ்சு தளபதி மார்சன்ட் முடிவெடுத்தான். இந்த சர்ச்சையால் யூசுப்கான் தளபதியை அறைந்தான். இந்த அவமானத்தை பழிதீர்க்க எண்ணினான் மார்சன்ட், யூசுப்கான் சரண் அடையாமல் சண்டையிட்டு வீரமரணம் எய்திட விரும்பினான். இதனிடையே ஆற்காடு நவாபு, சிவகங்கை தளபதி தாண்டவராய பிள்ளை மூலமாக மதுரை கோட்டையில் இருந்த திவான் சீனிவாசராவ், யூசுப்கான், பாக்டா பாபா சாஹிப், தளபதிமார்சன் பேசி வஞ்சக வலையில் வீழ்த்த திட்டமினர். சரணடைவோருக்கும், சண்டையிட்டு மடிய விரும்பியவர்களுக்கும் இடையே துரோகத்தை அரங்கேற்றினர்.
1764 அக் 13இல் முகமது யூசுப்கான் தொழுகையில் ஈடுபட்டபோது சீனிவாசராவ், பாபாசாஹிப், மார்சன், இன்னும் சிலர் யூசுப்கானை அவனது டர்பன் கொண்டு கட்டிப்போட்டுவிட்டனர். விவரம் அறிந்து யூசுப்கானின் மனைவி சிறுபடையுடன் வந்தாலும், துரோகிகளிடம் வெற்றிபெற முடியவில்லை. எனவே, யூசுப்கான் கும்பினிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டான். அக் 15ஆம் நாள் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டான். இருமுறை கயிறு அறுந்து கீழே வீழ்ந்தான். மூன்றாவது முறை தூக்குக்கயிறு அவனது உயிரைப் பறித்தது. அவனைக் கண்டு அஞ்சு நடுங்கிய கும்பினியர்களும், நவாபும் அவனது தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர்.

உடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். 1808இல் அந்த இடத்தில் மசூதி கட்டடப்பட்டு கான்சாஹிப் பள்ளி வாசல் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் ஏழாவது தலை முறையாக அதை பராமரித்து வருகின்றனர். கும்பினியர்களை எதிர்த்ததால் முதன்முதலாக தூக்கிலிப்பட்ட வீரன் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வீரத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றான். தன்னை “சுதந்திர ஆட்சியாளன்’’ என்று பறைசாற்றி கும்பினியர்களுடன் போரிட்டான் வீரமரணம் எய்தினான் 40 வயதே நிரம்பிய “கமாந்தோ கான்’’


நன்றி
கீற்று
 

பார்ப்பனர் என்னும் சூது


சுதந்திரப் போரா? சிப்பாய் கலவரமா ? (must read and share )

பார்ப்பனர்களால் விளைந்த கேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. பார்ப்பனர்கள் அனைத்து துறைகளிலும் சாம,தான, பேத, தண்ட முறையைப் பயன்படுத்தி ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதில் அவர்களுக்கு ஈடு இணையாக யாரையும் காட்டமுடியாது.

சமுதாயம், அரசியல், அரசுத் துறைகளில் இன்றும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாகத்தான் இருக்கிறது. அதுபோல் நீதித்துறையில் அவாளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. அந்த வகையில் வரலாற்றுத்துறையில் சிந்து சமவெளி பிரச்சனையிலிருந்து, தற்போது நடக்கும் சேதுசமுத்திர பிரச்சனை வரை அவர்கள் ஆதிக்கம் தான் . அந்த வகையில் வரலாற்றைத்திரித்து எழுதுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.

நம்முடைய வரலாற்றுப் பாடத்திட்டத்தில்

“முஸ்லீம்படையெடுப்பும், ஆரியர் வருகையும்” என்றுதான் எழுதுவார்கள். முஸ்லீம்களை எதிரிகளாகவும், ஆரியர்களை வேண்டியவர்களாகவும் மனரீதியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் “நயவஞ்சக” முயற்சிதான் வரலாற்றை இப்படி எழுதுவதற்கு காரணம்,
“அதுபோல் அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி” என்று அய்ந்து பேருடன் குடும்பம் நடத்திய பெண்ணைக்கூட பத்தினியாக்கும் வித்தை தெரிந்தவர்கள் இந்தப் பார்ப்பனர்கள்.இதுபோல் சொல்லிக் கொண்டே போகலாம் இந்த பார்ப்பனர்களின் பித்தலாட்டத்தை.
இந்த வகையில் பார்ப்பனர் செய்த பித்தலாட்டம் ஒன்றை இங்கு பார்ப்போம்.

1857 ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் என்று நம்முடைய வரலாற்றுப் பாடத்திட்டத்தில் உண்டு. அதைப் பற்றி நம்முடைய நண்பர்கள் இன்னும் முதல் இந்திய சுதந்திரப் போர் என்று நம்பிக் கோண்டிருக்கிறார்கள். அது சரியா? அங்கு நடந்தது என்ன? கலவரமா? போரா?

இதுகுறித்து பெரியார் தரும் தகவல் இதோ:

”அன்றைக்கு இராணுவத்தில் மிகுதியாகப் பார்ப்பனர்கள் இருந்தார்கள். பார்ப்பான் தன் நச்சுக் கருத்துகளை புகுத்துவதற்கு மிகவும் சல்லிசாக ஆகிவிட்டது. வெள்ளைக்காரன் கடல் கடந்து சென்று சண்டை போட இராணுவத்தைக் கப்பலில் ஏற்ற முற்பட்ட போது கடத்தல் இந்து மத சம்பிரதாயத்துக்கு விரோதம் என்று கூறி மறுத்து விட்டார்கள்.( மாலேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இராணுவத்தில் உள்ள பார்ப்பனர்களும் அடங்குவர் ----தமிழ் ஓவியா)

பார்ப்பனர்கள் சிப்பாய்களுக்குக் கொடுத்துள்ள துப்பாக்கியில் பசுவின் கொழுப்புத் தடவப்பட்டு உள்ளது. அது இந்து தருமத்துக்கு விரோதம் என்று இந்துக்களையும் பன்றிக் கொழுப்புத் தடவப்பட்டு இருக்கின்றது அது முஸ்லிம் தருமத்துக்கு விரோதம் என்று முஸ்லிம்களையும் தூண்டி விட்டுக் கலகம் செய்யச் செய்தார்கள்.

மக்கள் கலகம் பண்ணினால் வேண்டுமானால் பட்டாளத்துக்காரனைவிட்டு அடக்கலாம். பட்டாளத்துக்காரனே கலகம் பண்ணினால் யாரைக் கொண்டு அடக்க முடியும்? எனவே வெள்ளைக்காரனுக்கு மிகவும் சிரமமாகப் போய்விட்டது.

கலகத்தை அடக்க வெள்ளைக்காரன் பார்ப்பனர்களை அழைத்து யோசனை கேட்டான். பார்ப்பனர்கள் நீங்கள் மத விஷயத்திலும் பழக்க வழக்கத்திலும் தலையிடுவதால் தான் மக்களும், இராணுவத்தினரும் ஆத்திரப்பட்டு விட்டார்கள்.

இனி இப்படி மத விஷயத்திலும் பழக்க வழக்கங்களிலும் ஈடுபடுவதில்லை என்று உறுதிமொழி கொடுப்பீர்களானால் இப்படி எல்லாம் நடக்காது என்று கூறினார்கள். அதன்படியே விக்டோரியா மகாராணி எழுதிக் கொடுத்தார். அதன்பிறகுதான் கலகத்தை நிறுத்தினார்கள். சமூதாயச் சீர்த்திருத்தக் காரியங்களை எதிர்த்த இந்த முட்டாள்தனமான கிளர்ச்சியைத்தான் சில சரித்திர ஆசிரியர்களும், பார்ப்பனர்களும் உண்மைக்கு மாறாக சுதந்திரக் கிளர்ச்சி என்று திரித்துக் கூறுகின்றார்கள்

-----------------
பெரியார் கருத்திலிருந்து பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள செய்த கலவரமே இந்த சிப்பய் கலவரம். சிப்பாய் கலவரத்தையே முதல் இந்திய சுதந்திரப் போராக சித்தரித்து வரலாற்றில் பதிவு செய்தது பார்ப்பனர்களின் தந்திரமே.

எனவே 1857 –ல் நடந்தது சிப்பாய்கலவரம்தானே தவிர முதல் இந்திய சுதந்திரப் போர் அல்ல. பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் வராற்றை மாற்றி எழுதியுள்ளார்கள் என்பதே உண்மை..

நன்றி
"விடுதலை" 26-04-1963.