Sunday, October 23, 2011

செவ்வாய் தோஷம் என்றால் என்ன ?

செவ்வாய் தோஷம். இதைக் கேட்டவுடன் அலறுபவர்கள் பலர். காரணம், கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷம் இது.

ஆனால் செவ்வாய் தோஷம் என்றாலே சிக்கல்தானா, உண்மையில் செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்பது குறித்து முழுமையான ஜோதிட தகவல்களை அறிந்து கொள்ள சத்தியமங்கலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் சக்தி கிருஷ்ணகுமாரை சந்தித்து பேசினோம்.

அவர் கூறியதாவது:

லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும்.

இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம்.

ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது.

ஆனால் இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.

மேஷம், விருச்சிகம், மகரம், ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை.

சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.

சிம்மம், அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

2 - இடம் மிதுனம், அல்லது கன்னியாக இருந்தாலும் தோஷமில்லை.

4 - ம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷமில்லை.

7 - ம் இடம் கடகம், மகரமானால் தோஷமில்லை.

8 - ம் இடம் தனுசு, மீனம் இருந்தால் தோஷமில்லை

காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் அங்காரகன் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷமில்லை.
thnks : thats tamil

Thursday, September 1, 2011

சென்னைக்கு வயது 372



இந்தியாவின் நான்காவது பெரிய நகரான டெட்ராய்ட் சென்னை, வந்தாரை வாழவைக்கும் சென்னை, எத்தனை லட்சம் பேருக்கு வாழ்க்கை கொடுத்த, கொடுக்கப்போகும் சென்னை.

1639ஆம் ஆண்டு இதே நாளில் சென்னப்ப நாயக்கரிடமிருந்து இந்த இடத்தை கிழக்கிந்திய கம்பனியின் வணிகர்கள் பிரான்ஸிஸ் டே மற்றும் ஆன்ட்ரூ கோகன் வணிகம் செய்வதற்காக வாங்கியதாகவும், கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் 'சென்னப்பட்டினம்' என்று அழைக்கப்பட்டது என்பதும், சென்னப்பட்டினத்துக்கு தெற்கே அமைந்திருந்த ஊர் மதராஸ் என்று அழைக்கப்பட்டது என்பதும் வரலாறு.

பின்னர், இந்த இரண்டு பட்டினங்களையும் இணைத்து மதராஸ் என்ற பெயரிலும், தமிழர்கள் சென்னப்பட்டினம் என்றும் அழைத்தனர்.

பின்பு ஒரு வருடம் கழித்து இங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இங்கிருந்து ஆங்கிலேயர்கள் வணிகம் செய்து வந்தனர். கொஞ்சகாலம் பிரெஞ்சு கட்டுப்பாட்டிலும் மெட்ராஸ் இருந்திருக்கிறது.

ஆங்கிலேயர்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை மாகாணம் உருவாக்கினர். தற்போதைய தமிழ்நாட்டுடன் ஆந்த்ரா, கேரளா, கர்நாடகா மற்றும் ஒரிசாவில் இருந்து கொஞ்சம் பிச்சு பிச்சு சேர்த்தால் பழைய சென்னை மாகாணம் கிடைக்கும். சுதந்திரம் அடைந்த பிறகு, மெட்ராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது தற்போதைய தமிழ்நாடு. 1968இல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. 1996இல் மெட்ராஸ் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. எத்தனையோ மாற்றத்திற்கு பிறகும் இன்றும் கம்பீரமாக நிற்கிறது சென்னை.

சென்னைக்கு 372 வயதாகி விட்டதாக அரசு சொல்கிறது. கேசவநாயக்கர் கொடுத்த இடத்தில் உருவான சென்னைப்பட்டினம் என்று அரசு சொல்லி அதிலிருந்து சென்னை வரலாற்றை மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, எழும்பூர் என்று அடையாளப்படுத்தி ஒரு வார விழாவாக கொண்டாட இருக்கிறது.

இந்தியாவின் 4-வது பெரிய நகரமாகவும், தாய்த்தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் அமைந்திருப்பது சென்னை மாநகரம் ஆகும். பரந்து விரிந்த வங்காளவிரிகுடா கரையில் அமைந்துள்ள சென்னை துறைமுகம் கடல் வழி வாணிபத்துக்கு வழிகாட்டி என்று சொன்னால் அது மிகையாகாது.

உலகில் உள்ள 35 பெரிய நகரங்களில் ஒன்றாக சென்னை மாநகரம் விளங்குகிறது.

புனித ஜார்ஜ் கோட்டையை மையமாகக்கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டினத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, உள்ளிட்ட பகுதிகள் அன்றைய தினம் குக்கிராமமாக இருந்தன.

1688-ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகரசபை சென்னையில் அமைந்தது.

படிப்படியாக மதராஸ் பட்டினத்துடன் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டன. 1708-ம் ஆண்டு, மதராஸ் நகரத்துடன் நுங்கம்பாக்கம், திருவொற்றிஞ்ர், வியாசர்பாடி என ஒவ்வொரு பகுதியாக இணைக்கப்பட்டன. 1711-ம் ஆண்டு சென்னையில் முதலாவது பிரிண்டிங் பிரஸ் தொடங்கப்பட்டது. 1746-ம் ஆண்டு, மதராஸ் நகரத்தை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்தனர். அதன்பின் பிரெஞ்சுக்காரர்கள் சாந்தோம், மைலாப்பூர் பகுதிகளை மதராசுடன் இணைத்தனர். இப்படியாக காலப்போக்கில் மதராஸ்பட்டினம் வளர்ந்தது.

இன்று அண்ணாசாலை என அழைக்கப்படும் அன்றைய மவுண்ட் ரோட்டில் ஸ்பென்சர் நிறுவனத்தின் வணிக வளாகம் சென்னை நகரின் வரலாற்று சின்னமாக இன்றளவும் விளங்குகிறது. மெரினா கடற்கரையும், அதையொட்டியுள்ள விவேகானந்தர் இல்லமும் காலத்தால் அழிக்கமுடியாத பகுதி என்று சொல்லவேண்டும்.

இந்துக்களுக்கு மைலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்களைப் போல், கிறிஸ்தவர்களுக்கு சாந்தோம் பேராலயம், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள புனித மேரி ஆலயம், முஸ்லிம்களுக்கு திருவல்லிக்கேணி பெரிய மசூதி, ஆயிரம்விளக்கு மசூதி போன்றவை சரித்திர சான்றுகளாக இன்றளவும் விளங்குகின்றன.

வரலாற்றில் பல போர்களைக்கண்ட நகரம் சென்னையாகத்தான் இருக்கும். அடையாறில் நடந்தபோரில்தான், பிரஞ்சுக்காரர்கள், மதராஸ் நகரைவிட்டு முழுமையாக தப்பி ஓடினார்கள். இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த 857 வீரர்களுக்காக, தீவுத்திடல் அருகே அமைக்கப்பட்டிருப்பதுதான் போர் `நினைவுச்சின்னம்' ஆகும். இது 1952-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இன்றளவும், ஆண்டுதோறும் இங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மதராஸ் பட்டினத்தின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோவில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையங்களும், சென்னை ஜி.பி.ஓ., சென்னை ஐகோர்ட்டு, சென்னை பல்கலைக்கழக செனட் ஹால், எழும்பூர் அருங்காட்சியகம், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு அருகே அமைந்துள்ள விக்டோ ரியா ஹால், மெமோரியல் ஹால் என பல கட்டிடங்கள் இன்றளவும் மதராஸ் பட்டினத்தின் பெயர் சொல்லும் வகையிலும், சென்னை நகரின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் இன்றளவும் அமைந்துள்ளன.

இப்படி படிப்படியாக மதராஸ் பட்டினம் வளர்ச்சி அடைந்தது. 1947-ம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக சென்னை அமைந்தது. 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களைப்பிரித்தபோது, மதராஸ், தமிழ்நாட்டின் தலைநகராகியது. அதன்பின் மதராஸ் பட்டினம் என்ற பெயர் சென்னை நகராக மாறியது. அதைத்தொடர்ந்து, சென்னை மாகாணம் 'தமிழ்நாடு' என்று மாற்றப்பட்டது. 1996-ல் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. எத்தனையோ மாற்றத்திற்கு பிறகும் இன்றும் கம்பீரமாக நிற்கிறது சென்னை.

அன்று மட்டுமல்ல, இன்றளவும் அனைத்து தரப்பினரும் வாழும் நகரமாக சென்னை அமைந்துள்ளது. இந்தியாவின் அமைதி நகரம் என்று சென்னையை அழைக்கலாம் என்று வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து சென்னைக்கு சுற்றுலா வருபவர்கள் சொல்வார்கள்.


thanks chennai online

Thursday, August 18, 2011

ஃப்ரிஜ்ஜில் காய்கறி , பழங்களை எத்தனை நாள் வைத்திருக்கலாம்


காய்கறிகள்:
புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்
முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,
ஓம இலை 1-2 வாரங்கள்
வெள்ளரிக்காய் ஒரு வாரம்
தக்காளி 1-2 நாட்கள்
காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்
காளான் 1-2 நாட்கள்

Image
பழங்கள்:
திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்
ஆப்பிள்கள் ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்
அன்னாசி (முழுசாக) 1 வாரம்
(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்




Image
அசைவ உணவுகள்:

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்

சமைத்த மீன் 3-4 நாட்கள்

பிரஷ் மீன் 1-2 நாட்கள்

தேமல் மறைவதற்கான வழி

குப்பை மேனிக் கீரை, மஞ்சள், உப்பு இவை மூன்றையும் சேர்த்து மை போல அரைத்து தேமல் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர தேமல் குறையும்

தேமல் மேல் வேப்பிலையை அரைத்து தடவினால், தேமல் மறைந்துவிடும்.



தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலையை அடியும்.

மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர தேமல் மறைய தொடங்கும்.

Wednesday, August 10, 2011

இந்தியாவை மிரட்டும் மனஅழுத்தம்.......

C‹‡VÖÛY –Wy|• U]Aµ†R•...

- BÁ–L†‡¥ RÛXp\‹R SÖ|.

- Uf²opVÖ] h|•T E\°Lºeh G|†‰eLÖyPÖš «[jh• SÖ|.

- EP¨eh•, U]‰eh• SX• TVeh• ÚVÖLÖN]•, ‡VÖ]• ÚTÖÁ\ÛY E£YÖ] SÖ|.

- OÖÂLº•, ˜ÂYŸLº• YÖ²«V¥ R†‰YjLÛ[ Yh†R¸†R SÖ|.

C‹R Y¡ÛN›¥ CÁÄ• TX p\“L· YÖš‹R C‹‡VÖ«¥ Uf²op•, U]ŒÛ\°•, AÁ“•, B]‹R˜•RÖÁ ÙTÖjf Y³‹‰ ÙLցz£eL ÚY|•. B]Ö¥ "EXL†‡ÚX –L A‡L A[«¥ ‰VW˜•, Lƒ£•, ÚYRÛ]•, «We‡•RÖÁ ÙTÖjfY³‹‰ ÙLցz£e f\‰'' GÁf\‰, `EXL rLÖRÖW Œ¿Y]' Bš°.

18 SÖ|L¸¥ 89 B›W• ÚT¡P• G|†R Bš«¥ C‹‡VŸL· 36 NR®R TÖ‡“PÁ EXf¥ U]Aµ†R• ÙLցPYŸL¸¥ `S•TŸ- JÁ' CP†ÛR ‘z†‡£ef\ÖŸL·. ÙSRŸXÖ‹‰, ‘WÖÁÍ, AÙU¡eLÖ, q]ÖÛY G¥XÖ• C‹‡VÖ C‹R «cV†‡¥ ‘ÁÄeh R·¸›£ef\‰.

C‹‡VÖ°eh HÁ C‹R ŒÛX? CR¼h GÁ]RÖÁ ˆŸ°?

"C‹‡VŸLºeh U]Aµ†R• A‡L¡†‰«yP‰ GÁT‰ ®|L¸¥ ÙR¡f\‰. ®‡L¸¥ ÙR¡f\‰. A¨YXLjL¸¥ ÙR¡f\‰. BÍT†‡¡L¸¨• ÙR¡f\‰. UeLÛ[ EP]zVÖL A‡¥ C£‹‰ —yL SPYzeÛL ÚU¼ÙLÖ·[ ÚY|•..'' GÁf\ÖŸ, PÖePŸ sŸVÖ ~hUÖŸ.

"ÙNÁÛ] SLW NÖÛX›¥ SÖÁ ‡]˜• LÖŸ KyzoÙN¥fÚ\Á. pY“ «[eh «µ‹R‰• SÖÁ Œ¼fÚ\Á. ToÛN «[eh pe]¦¥ LPeh• YÖL]jLÛ[ ÙN¥X «PÖU¥ GÁ KW†‡¥ C£“\˜• ŒÁ¿ÙLցz£eh• YÖL]jL· «‡LÛ[ —½o ÙN¥fÁ\]. ToÛN pe]¦¥ Y‹‰ÙLցz£TYŸL· L‡LXjhf\ÖŸL·. CTz «‡LÛ[ —½ TÖšf\ÖŸLÚ[ GÁ¿ SÖÁ A‡Ÿ‹‰ÚTÖš EyLÖŸ‹‡£eh•ÚTÖ‰ GÁ ‘Á]Ö¥ ŒÁ¿ÙLցz£‹R ÚTÖehYW†‰e LZL TÍpÁ zÛWYŸ Œ¿†RÖU¥ `aÖŸÁ' Az†‰, GÁÛ]• «‡LÛ[ —\oÙNÖ¥¦ ÙNšÛLVÖ¥ –Wy|f\ÖŸ. A‹R ÙNV¥ AjÚL YÖL]jL¸¥ ŒÁ¿ÙLցz£eh• A†RÛ] ÚTÛW• U] Aµ†R†‡¼h· R·ºf\‰. LÖÛX›¥ ®yz¥ C£‹‰ f[•“• J£YŸ C‹R NÖÛX TVQ†‡¥ R‘†‰ G‹R ÚNR˜• CÁ½ CW° ®| ÚTÖšo ÚN£f\ÖŸ GÁ\Ö¥ A‰ ULÖÙT¡V A‡ŸÐP•RÖÁ.

27 YV‰ «RÛY ÙT‚P•, `EÁ LQYŸ GTz C\‹RÖŸ?' GÁ¿ ÚLyPÖ¥ AY·, NÖÛX «T†‡¥ C\‹RRÖLo ÙNÖ¥f\Ö·. 5, 6 YV‰ hZ‹ÛRL¸P•, `EjL· ATÖ GTz C\‹RÖŸ?' GÁ¿ ÚLyPÖ¥, `NÖÛX «T†‡¥ C\‹RRÖLei½' AÛYLº• AµfÁ\]. GÁ] LÖWQ•? G¥XÖ YÖL]jLÛ[• RÖÁ ˜‹‡oÙN¥X ÚY|• GÁ\ rVSX•. VÖÚWÖ pX£ÛPV rVSX• NÖÛX›¥ ÙN¥¨• U¼\YŸLÛ[• TÖ‡ef\‰. C‹R rVSX•RÖÁ J£YŸ U]Aµ†R†ÛR ÚSÖefo ÙN¥YR¼LÖ] ˜R¥Tz.

ÚWÖyÛP J£ ™RÖyz LP‹‰ ÚTÖ]Ö¥, AYºeLÖL YÖL]†ÛR Œ¿†R VÖ£eh• U]–¥ÛX. C‹‡VÖ L¥« A½«¥ EVŸ‹‰«yP‰. VÖÛW TÖŸ†RÖ¨• UÖR• 50 B›W• ¤TÖš N•T[• YÖjhYRÖLo ÙNÖ¥f\ÖŸL·. TQ“ZeL˜• A‡L¡†‰«yP‰. N‹‡WÄeh WÖeÙLy «y| «tOÖ]†‡¨• Y[ŸfÚ\Ö•. B]Ö¥ U]R[«¥ C‹‡VŸL¸Á ŒÛX RÖ²‹‰ÙLցÚP C£ef\‰. AR]Ö¥RÖÁ C‹‡VÖ U]Aµ†R†‡Á EoN†‡¼h ÚTÖš C£ef\‰.

LYÛX G¥ÚXÖÛW• ByÙLցz£ef\‰. AR¼h LÖWQ•, A[°eh —½V BÛN. A‹R BÛNÛV AÛPV˜zVÖU¥ «We‡VÛPf\ÖŸL·. ‡£‡ GÁT‰ VÖŸ YÖ²eÛL›¨• C¥ÛX. ˜ÁÙT¥XÖ• LPÁ YÖjhYÛR J£ L°WYe hÛ\oNXÖL ŒÛ]†RÖŸL·. CÁ¿ LPÄeh ÛLÚV‹‰Y‰ ÚTcÁ Bf«yP‰. LÖÛX›¥ Gµ‹R‰• ÚTÖÁ ÚTÖy|, LPÁ ÚY|UÖ GÁ¿ ÚLy|, LPÁ GÁ\ T|h³›¥ R·[ Œ¿Y]jL· ÚTÖyz ÚTÖ|fÁ\]. ÛL›¥ LÖÚN C¥XÖU¥ `LÖŸÛP' ÚRš†‰ J£ XyN• ¤TÖšeh JÚW ÚSW†‡¥ LPÁ YÖjf«|f\ÖŸL·. AÛR JµjLÖL ÙN¨†R ˜zVÖU¥ LYÛXTy|, LƒŸ«y| U]Aµ†R• ÙLÖ·f\ÖŸL·.

hZ‹ÛRLºeh YÖ²eÛLÛV L¼¿eÙLÖ|†‰, AYŸLºeh ˜ÁÄRÖWQUÖL C£eLÚYzVYŸL· ÙT¼Ú\ÖŸ. A|†‰ Bp¡VŸL·. CYŸL· C£Y£• N¡VÖ] T›¼p ÙLÖ|†RÖ¥ U]Aµ†R• CÁ½ hZ‹ÛRL· U]ŒÛ\ÚYÖ| YÖZ Y³ fÛPeh•. B]Ö¥ CÁ¿ ®|•, L¥« Œ¿Y]jLºÚU RÁÂÛX U\‹‰, p¿YV‡ÚX ‘·Û[L¸P• U]Aµ†R†ÛR H¼T|†‡eÙLցz£efÁ\].

ÙR¡‹ÚRÖ, ÙR¡VÖUÚXÖ R“LÛ[ ÙNš‰«y| h¼\ EQŸYÖ¥ R†R¸ef\YŸL· A‡L¡†‰eÙLցÚP C£ef\ÖŸL·. U‰ A£‹RÖÚR, zÍÚLÖ ÚTÖLÖÚR, CW«¥ FŸ r¼\ÖÚR GÁ¿ CÛ[OŸL¸P˜•, C[• ÙTL¸P˜• ÙT¼Ú\ÖŸ ÙNÖ¥¦†RÖÁ AĐ“f\ÖŸL·. B]Ö¥ AÛR G¥XÖ• ÙNš‰«y| N™L†‡¼h•, ÙT¼Ú\Ö£eh• TV‹‰ h¼\EQŸ°PÁ ŠeL–Á½ YÖ²f\ÖŸL·. ŠeL–ÁÛUVÖ¥ ÚYÛXÛV TÖŸeL ˜zVÖ‰. ÙNV¥TÖ| hÛ\•. BÚWÖefV• hÛ\•. A‰ ÙLÖtNUÖL C£eh• ŠeL†ÛR• ÙL|†‰ U] Aµ†R•, U]ÚSÖVÖ¸ GÁ\ ŒÛXeh ÙLց|ÙNÁ¿«|•.

CÚTÖÛRV Bš°L· G¥XÖ˜ÚU ÙTLÚ[ A‡L U]Aµ†R†RÖ¥ TÖ‡eLT|YRÖL i¿fÁ\]. EÛURÖÁ. ˜Á“ ÙTL· h|•T ŒŸYÖL†ÛR LY†‰e ÙLց| LQY£eh hZ‹ÛRLºeh G¥XÖ˜UÖL C£‹RÖŸL·. CÚTÖ‰ AÛR• ÙNš‰ÙLց| i|RXÖL TQ• T„• CV‹‡WUÖL°• AY· ÙNV¥TP ÚYzV‡£ef\‰. 8 U‚ÚSW• A¨YXL ÚYÛX. ÚTÖš, YW 2 U‚ÚSW•. 6 U‚ÚSW• ŠeL•. —R˜·[ 8 U‚ÚSW†‡¥ AY·, R]‰ TÖyz 24 U‚ÚSW†‡¥ ÙNšR ®y| ÚYÛXLÛ[ G¥XÖ• ÙNš‰ ˆŸeL ÚYzV‡£ef\‰. ‘Á“ GTz AYºeh U]ÙS£eLz H¼TPÖU¥ C£eh•? AYºeh U]ÙS£eLz Y‹‰«yPÖ¥ LQY¡P• LÖy|YÖ·. hZ‹ÛRL¸P• LÖy|YÖ·. AYŸL· T‡¨eh ÚLÖTT|YÖŸL·. CTz h|•T• h|•TUÖL ÙLÖ†‰ÙLÖ†RÖL U] Aµ†R†‡¼h E·[Öfe ÙLցz£ef\ÖŸL·'' GÁf\ÖŸ AYŸ.

***

UÚ]ÖR†‰Y Œ“QŸ ˜Û]YŸ «‰TÖXÖ A¸eh• T‡¥:

EXL rLÖRÖW Œ¿Y]• ÙY¸›y|·[ C‹R Bš° T¼½ EjL· L£†‰ GÁ]?

"A‹R Bš° ÚU¼ÙLÖ·[TyP 18 SÖ|L¸¥ C‹‡VÖ°• E·[‰. ŒïpXÖ‹‰• E·[‰. 120 ÚLÖz UeLÛ[eÙLցP C‹‡VÖ«¥ 2,992 ÚT¡P• Uy|• Bš°eLÖ] T‡ÛX ÙT¼½£ef\ÖŸL·. B]Ö¥ ÙY¿• 44 XyN• UeLÛ[e ÙLցP ŒïpXÖ‹‡¥ 12,790 ÚT¡P• Bš° ÙNš‡£ef\ÖŸL·. C‹‡VÖ«¥ AYŸL· ÙNÁÛ], ˜•ÛT, ÙP¥¦, ÙLÖ¥L†RÖ ÚTÖÁ\ SLWjL¸¥ G|eL«¥ÛX. “‰oÚN¡›¥ Uy|• G|†‡£ef\ÖŸL·. AYŸL· Bš° ÙNšR‰ 2003 ˜R¥ 2005-• B|YÛW. 2004-• B| SÖ• r]Ö–VÖ¥ TÖ‡eLTy|, A‹R ‰VW• jLÖU¥ C£‹R LÖXLyP• A‰. r]Ö–›Á ÚNÖL†‡¥ TÖ‡eLTyz£‹R J£ Th‡›¥, –Lo pX¡P• Uy|• NŸÚY G|†‰«y|, C‹‡VÖÛY U] Aµ†R• ŒÛ\‹RYŸL· SÖ| GÁ¿ ÙNÖ¥Y‰ H¼¿eÙLÖ·[†ReLR¥X.

ÚU¨• EXL rLÖRÖW Bš° Œ¿Y]•, `HRÖY‰ J£ R£Q†‡¥ U]Aµ†R†‡¼h E·[Öf·¹ŸL[Ö?' GÁ\ AzTÛP›ÚX C‹R Bš«Û] ÚU¼ÙLց|·[‰. C‡¥ E[«V¥ Y¥¨]ŸL· TjhÙT\«¥ÛX. U]Aµ†R†ÛR L|‘zeh• T¡ÚNÖRÛ] ˜Û\Lº• ÛLVÖ[TP«¥ÛX. NÖRÖWQ STŸLÛ[eÙLց|RÖÁ C‹R Bš° ÚU¼ÙLÖ·[Tyz£ef\‰. S• SÖy| UeLºeh U]Aµ†R• C£‹RÖ¨• SU‰ N™L LyPÛU“, h|•T LyPÛU“L· ™X• A‡¥ C£‹‰ «ÛWYÖL —| ÙY¸ÚV Y‹‰«PeizV YÖš“L· –L A‡L•. AR]Ö¥ C‹R BšÛY ÛY†‰ C‹‡VÖ«¥, `CªY[° ÚTŸ TÖ‡eLTyz£ef\ÖŸLÚ[!' GÁ¿ AoNTP† ÚRÛY›¥ÛX.''

ÙNÁÛ]›¥ C‰ÚTÖÁ\ Bš°L· HRÖY‰ ÙNšVTyz£ef\RÖ?

"2009-• B| ÙNÁÛ]›¥ 25,455 ÚT¡P• C‰ÚTÖÁ\ Bš° JÁ¿ SP†RTyP‰. A‡¥ 15 NR®R• ÚT£eh U] Aµ†R†‡Á A½h½L[Ö] U]C¿eL•, ÚNÖŸ°, R¼ÙLÖÛX GQ• C£‹RRÖL h½‘PTy|·[‰. U]Aµ†R• T¼½V ˜µÛUVÖ] Bš°LÛ[ U†‡V- UÖŒX AWrL· ÚU¼ÙLÖ·[ÚY|•.''

U]Aµ†R• GÁT‰ GÁ]?

"U]• NÖŸ‹R ÚSÖšL¸¥ –L°• TÖ‡“ hÛ\‹R‰, U]Aµ†R•. N¸, ^XÚRÖc• ÚTÖ¥ C‰°• Y‹‰«y| ÚTÖLeizV‰. pX£eh Aµ†R• SÖºehSÖ· A‡L¡eh•. AR]Ö¥ AYŸLºeh pX ‘WopÛ]L· ÚRÖÁ¿•.''

U] Aµ†R†ÛR GTz LP½Y‰, GÁ] A½h½?

"LYÛX, «We‡, BŸY–ÁÛU, Uf²op›ÁÛU, G¡oN¥, ÚLÖT•, Tp›ÁÛU, ŠeL–ÁÛU, R[Ÿop, ÚNÖŸ°, RÖÁ GR¼h• ETÚVÖLU¼\YŸ GÁ\ GQ•, h¼\ EQŸ°, UWQTV•, R¼ÙLÖÛX GQ• ÚTÖÁ\ÛYL¸¥ HRÖY‰ I‹‰, 12 SÖyLºeh ÚUXÖL ÙRÖPŸ‹‰ C£‹‰, A‰ AY£ÛPV AÁ\ÖP YÖ²eÛLÛV TÖ‡TRÖL C£‹RÖ¥ AÛR U] Aµ†R ÚSÖš G]XÖ•. CÛRe LP½‹‰ L°ÁN¦j, U£‹‰ U¼¿• h|•T†‡]¡Á BRWÚYÖ| N¡ ÙNš‡PXÖ•.''

***

‘WTX ÙP¦«cÁ ÙNš‡ YÖpTÖ[Ÿ N°RÖU‚, `‡£UQUÖ] C‹‡V ÙTLºeh U] Aµ†R• A‡L¡T‰ HÁ?' GÁ¿ «[ehf\ÖŸ.

"SU‰ N™L˜•, h|•T LyPÛU“Lº• ‡£UQUÖ] ÙT 24 U‚ÚSW˜• LÖ¦¥ NeLW• LyzeÙLց| KPÚY|• GÁ¿ G‡ŸTÖŸefÁ \]. AY· A‡LÖÛX›¥ Gµ‹‰, LQY£eh {, UÖ–VÖ£eh LÖ‘, ‘·Û[Lºeh HRÖY‰ CÁÙ]Ö£ TÖ]†ÛR rPorP RVÖ¡†‰ ÙLÖ|†‰ «y|, –Á]¥ ÚYL†‡¥ A|†R ÚYÛXeh ÙN¥XÚY|•. LÖÛX EQ° Cy¦ÚVÖ, ÚRÖÛNÚVÖ GÁ\Ö¥ “£cÁ LÖWo Ny ÚLyTÖŸ. ‘·Û[L· NÖ•TÖŸ ÚLyTÖŸL·. UÖ–VÖŸ CWÛP• £p†‰ «y| `A‡¥ LÖW–¥ÛX.. C‡¥ E“ C¥ÛX..' GÁ¿ i¿YÖŸ. A|†‰ LQY£• hÛ\ ÙNÖ¥X YÖš ‡\eL, AYºeh LÖÛX›ÚX U] Aµ†R• BW•‘†‰«|•. A‹R Aµ†R†ÛR rU‹‰ÙLց| AY· A¨YXL• ÙNÁ\Ö¥, ÚUX‡LÖ¡ AYŸ ÚYÛXÛV• ÚNŸ†‰ AY· RÛX›¥ Ly|YÖŸ. AÛR• ÙNšV ÚY|•.

CÚTÖÙR¥XÖ• N•TÖ‡eh• ÙT ÚY|• GÁ¿i½ ‡£UQ• ÙNš‰ÙLÖ·º• LQYŸL·, ÙWÖ•T “†‡NÖ¦†R]UÖL G¥XÖ LPÁLÛ[• UÛ]« ÙTV¡ÚX YÖjf «|f\ÖŸL·. AR]Ö¥ AY· N•T[†‡Á ÙT£•Th‡ LPÄeÚL LÛW‹‰ «|f\‰. C‰ AYºeh G‡Ÿ LÖX†ÛRT¼½V LYÛXÛV E£YÖef U] Aµ†R†ÛR A‡L¡eLÛYef\‰.

A•UÖeL¸Á EP¥ŒÛX, U]ŒÛX, ÙTÖ£[ÖRÖWŒÛX ÚTÖÁ\ GÛR T¼½• ÙR¡‹‰ÙLÖ·[ «£•TÖR ‘·Û[L·, T·¸eiP†‡¥ NL UÖQYŸL· GTz G¥XÖ• TQ†ÛR YÖ¡ ÙNX° ÙNšf\ÖŸLÚ[Ö A‰ÚTÖ¥ ÙNšV RjLºeh• TQ• ÚY|• GÁ¿ ÚLy| AP•‘zTÖŸL·. `‘·Û[L·iP RÁÛ] “¡‹‰ÙLÖ·[«¥ÛXÚV' GÁ¿ RÖš U]•«•˜f\Ö·.

CÁÛ\V hZ‹ÛRL· hPÖL Y[Ÿf\ÖŸL·. AR]Ö¥ RÖ›P•, R‹ÛR `HÁ CTz h| hPÖš hZ‹ÛRLÛ[ ÙT¼¿ ÛY†‡£ef\Öš?' GÁ¿, ÙTÖ¿T¼\ «RUÖš ÚTrYÖŸ. hZ‹ÛRL¸Á EP¥ GÛP A‡L¡eLÖU¥ C£eL AÛYL¸P• `CW«¥ NTÖ†‡ N֐‘|jL·' GÁ¿ RÖš ÙNÖÁ]Ö¥, ‘·Û[L· LLÛ[ LNeh•. EPÚ] UÖ–VÖŸ RÛX›|YÖŸ. `C‹R pÁ] YVpÚX EQ°eLy|TÖ| AYpVUÖ?' GÁ¿ U£ULÛ[ Lz‹‰ÙLÖ·º• AYŸ, hZ‹ÛRLÛ[ RÁ A£f¥ AÛZ†‰ ÙSšÛV ŒÛ\V F¼½ ÙUÖ¿ ÙUÖ¿ÙYÁ¿ ÚRÖÛN YÖŸ†‰ÙLÖ|TÖŸ. hZ‹ÛRL· ÚU¨• hPÖf«|ÚU GÁ\ LYÛX RÖšeh Y£•. iPÚY AYºeh U] Aµ†R˜• Y£•. HÁGÁ\Ö¥ AY· NŸeLÛW ÚSÖš, ÙLÖXÖÍyWÖÚXÖ| EP¼T›¼p ÙNšVeiP ÚSW–Á½ YÖ²eÛLÚVÖ| ÚTÖWÖzeÙLցz£TÖ·.

ÙTL¸Á YÖ²eÛLÚV CTz U] Aµ†Re L[UÖL†RÖÁ C£‹‰ÙLցz£ef\‰. ÙTL· h|•T†‡¼LÖL LÛW• ÙUµhYŸ†‡VÖL C¥XÖU¥ RÁ EP¥, U] BÚWÖefV†‡¥ LY]• ÙN¨†RÚY|•. `SPTÙR¥XÖ• SÁÛUeÚL' GÁ¿ ŒÛ]†‰eÙLց| GR¼h• Y£‹RÖU¥ ÚVÖLÖN]•, ‡VÖ]• ÚTÖÁ\ÛYLÛ[ ‡]˜• ÙNš‰YWÚY|•. S¥X ÙTÖµ‰ÚTÖehL¸¨• D|TPÚY|•. 24 U‚ÚSW†‡¥ ‡]˜• 2 U‚ÚSW†ÛRVÖY‰ ÙTL· RjLºeLÖL ÙNX«PÚY|•. ATzo ÙNšRÖ¥ U]Aµ†R• H¼TPÖ‰. H¼TyPÖ¨• «ÛWYÖL A‡¥ C£‹‰ —| «PXÖ•'' - GÁf\ÖŸ.

***

நன்றி - தினத்தந்தி

Wednesday, June 8, 2011

பழங்களும் - குணங்களும்

பழங்களும் - குணங்களும்

அப்பிள்:

உலகம் முழுவதிலும் அப்பிள் மதிப்பு வாய்ந்த பழமாக மதிக்கப்படுகிறது. ஸ்கண்டினேவிய நாட்டவர்கள் அப்பிளை “கடவுளின் உணவு” என்கின்றனர். நாள்தோறும் ஒரு அப்பிள் உண்பது வைத்தியரை விரட்டும் என்பது ஆங்கில மொழி.


அப்பிள் பழத்தில் என்ன சத்துக்கள் இல்லை. உடலை வளர்க்கும் விற்றமின்களும், உடலியல் செயல்களை ஊக்குவிக்கும் தாதுப் பொருட்களும் உடல் உள் உறுப்புக்களும், சுரப்பிகளும் செயற்பட உதவும் நுண்ணூட்டச் சத்துக்களும் பல்வேறு அமிலங்களை சரியாகச் சுரக்கவைத்து, சீர்படுத்த உதவும் அமிலங்களும் அப்பிளில் தங்கியுள்ளன.

அப்பிள் உடல் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் பெருகுவதற்குரிய பயன்களைத் தருகிறது. விற்றமின் குறைவினால் ஏற்படுகின்ற நோய்களைக் குணப்படுத்தும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அப்பிள் பழம் மட்டுமல்ல அதனுடைய இலைகளும், விதைகளும், வேர்ப்பகுதியும், வேர்ப்பட்டடையும் மருத்துவத் தன்மைகளைக் கொண்டதாகும்.

அழகிய சிவப்பு நிறத்தில், பளபளப்பாக, கண்ணைப் பறிக்கும் விதத்தில் காணப்படும் அழகான பழம் அப்பிள் பழமாகும். அழகு இனிமை, மென்மை என்பவற்றிற்கும் அப்பிளுக்கும் நிறைய தொடர்பு இருக்கின்றது. தங்கப் பழம் என்று புகழப்படும் அப்பிள் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் மிகவும் விரும்பும் பழமாகும்.

அப்பிள் பழத்தின் பிறப்பிடம் மத்திய ஐரோப்பா மற்றம் மேற்கு ஆசிய நாடுகளாகும். உலகம் முழுவதிலும் 6500க்கும் மேற்பட்ட வகைகளில் அப்பிள்கள் காணப்படுகின்றன.

அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.

பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளில் நீர்ச்ச
த்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.

மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர விஸ்கி அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது. வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.

ஆப்பிளிலுள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்கி குடற்பாதையிலுள்ள நுண்கிருமகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட வாய் மற்றும் தொண்டைப் பகுதியிலுள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன. வயதானவர்களுக்கு ஆப்பிள் மேற்தோலானது செரிக்கக் கடினமாக இருக்குமென்பதால் மேற்தோலை நீக்கி உட்கொள்வது நல்லது. ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டாம் என்பது ஆங்கில பழமொழி. நீர்ச்சத்து ஏராளமாக உள்ள ஆப்பிள் பழத்தை கோடைக்காலத்தில் நன்கு உட்கொள்ளலாம். இதில் ஏராளமான மாவுச்சத்து நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித சம உணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகள் ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.

தக்காளி:

லைக்கோபெர்சின் எஸ்குலன்டம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சோலனேசியே குடும்பத்தைச் சார்ந்த நன்கு பழுத்த சீமைத் தக்காளிப்பழத்தில் லைக்கோபீன் வகை கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை வயிறு மற்றும் சிறுநீர்ப் பாதையில் தோன்றும் புற்றுநோய் செல்களை தடுக்கின்றன. தக்காளிப்பழச் சாற்றிலுள்ள அஸ்கார்பிக் அமிலம் செல் அழிவை தடுப்பதுடன் சுண்ணாம்பு சத்தை நிலைநிறுத்துகின்றன. தக்காளிப்பழச்சாற்றிலுள்ள வலி நிவாரணத் தன்மை உடல் வலியையும் குறைக்கிறது. குறைந்தளவில் நன்கு நீரில் கலக்கப்பட்ட, இனிப்பூட்டப் பட்ட தக்காளிச்சாற்றை தொடர்ந்து குடித்துவர கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பாதையில் தோன்றும் கிருமித்தொற்று மற்றும் நச்சுக்கிருமிகள் நீங்கும்.

தக்காளியைப் பிழிந்து, விதை மற்றும் தோலை நீக்கி, வடிகட்டி, வெறும் சாற்றுடன் கற்கண்டு அல்லது சீனி கலந்து சாப்பிடுவதாலும், நன்கு பழுத்த தக்காளிப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சீனி கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதாலும் உடல் உஷ்ணம் தணியும். தக்காளியை சூடு செய்யாமல் வடிகட்டி அப்படியே சாப்பிடுவதால் சிறுநீர் கிருமித்தொற்று நீங்குகிறது. ஆனால் தக்காளியை தோல் மற்றும் விதையுடன் சேர்த்து உட்கொள்வதால் சிறுநீர்ப் பாதையில் சுண்ணாம்பு, யூரிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் சத்து சேகரிக்கப்பட்டு, கற்கள் உண்டாகிவிடுகின்றன. ஆகவே பச்சை தக்காளிச்சாறு உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது. சர்க்கரை நோயாளிகளுக்கு தொடர்ந்து வெப்பத்தாக்குதலை நீக்க தக்காளியை அடிக்கடி உட்கொள்ளலாம். தக்காளியை தொடர்ந்து உட்கொள்வதால் உணவுப்பாதை, சிறுநீர்ப்பாதை மற்றும் புராஸ்டேட் கிளான்டில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைய தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி வருவதால் தோல் மென்மையடைவதுடன் குளிர்ச்சியும் உண்டாகும்.

ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தாக்காளி

புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை அதிக அளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இவ்வகை புற்றுநோய் வருவதாக புள்ளி விவரங்கள் தொpவிக்கின்றன.

புரோஸ்டேட் புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. விளைவு.. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றுவது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருப்பது, சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

இந்நிலையில் புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக டாக்டர் மைக்லே; டபிள்யு. ஸ்மித் தெரிவித்துள்ளார். தக்காளியில் அதுவும் சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தக்காளியில் காணப்படும் லைக்கோபீன் என்றொரு பொருள்தான் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் தர்ப்பூசணி பழம், ரோஸ் நிற திராட்சை பழங்கள் ஆகியவற்றிலும் லைக்கோ பீன் இருப்பது குறிப்பிடத்தக்கது

பலா- Jackfruit(Atrocarpus heterophyllus)

பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் மர இனமாகும். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. விந்தையாக, உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது.

ஆசியாவில் பலாப்பழங்கள் பலவாறாக உண்ணப்படுகின்றன. பெரும்பாலும், நன்கு பழுத்த பழத்தின் சுளைகள் அப்படியே உண்ணப்படுகின்றன. சிறு காய்,மற்றும் முற்றிய காய்களின் சுளைகள் கூட கறியாக சமைத்தோ அல்லது மெல்லிய வறுவல்களாகவோ உண்ணப்படுகின்றன.

ஆனால், மேலை நாடுகளில் பலாப்பழத்தின் மணம் விரும்பத்தகாததாக கருதப்படுகிறது. எனவே, அவர்கள் பெரும்பாலும் முற்றிய காய் சுளைகளையே உண்கின்றனர். மற்ற பழங்களைப் போலவே பலாப்பழத்திலிருந்தும் சாறு, ஐஸ் கிரீம், பழக்கூழ் மற்றும் பல விதமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

பலாப்பழத்தின் விதைகள் கூட ஆசியாவில் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை வறுத்தும், வேக வைத்தும், சர்க்கரைப்பாகில் ஊற வைத்தும் உண்ணப்படுகின்றன. இவற்றை அரைத்து மாவும் தயாரிக்கப்படுகிறது. பலாப்பூக்கள் கூட சிலரால் சமைத்து உண்ணப்படுகின்றன.

உணவாக மட்டுமின்றி, பலாப்பழத்தின் கடினமான தோல், பெக்டின் வகை கூழ்கள் தயாரிக்க உதவுகிறது. மேலும், இது புகையிலையை பதனிட பயன்படுகிறது.

உடல் நல பலன்கள்
பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.

அதிக அளவில் பலாப்பழம் உண்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.

துரியன் பழம்:

உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நேரடியாக தரக்கூடியவை பழங்கள் மட்டுமே. தினம் ஒரு பழம் சாப்பிடுவோர்களை நோய்கள் எளிதில் அணுகாது.

பழங்காலத்தில் காடுகளில் தவம் செய்த முனிவர்களும், ரிஷிகளும், சித்தர்களும் பழங்களையும் நீரையுமே அருந்தி வந்துள்ளதாக பல ஏடுகளின் மூலம் அறிகிறோம். பழங்கள் உடலின் சீரண உறுப்புக்களை பலப்படுத்தி, எலும்புகளுக்கு வலுவூட்டி, இரத்தத்தை சுத்தப்படுத்தி என்றும் இளமையைத் தரக்கூடியவை.

சிலர் பழங்களை அப்படியே சாப்பிடுவதில்லை. ஜூஸ் செய்து அருந்துகின்றனர். அப்படியே சாப்பிட முடியாத பழங்களை வேண்டுமானால் ஜூஸ் செய்து சாப்பிடலாம். உதாரணமாக எலுமிச்சை பழம். எலுமிச்சம் பழத்தை அப்படியே சாப்பிட முடியாது. எனவே அதனை சாறு எடுத்து நீர், சர்க்கரை கலந்து சாப்பிடுகின்றனர். அதற்காக எல்லா பழங்களையும் ஜூஸ் செய்து சாப்பிடுவது நல்லதல்ல. அப்படி ஜூஸ் செய்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்காமல் போகிறது. பழங்களை பொதுவாக மென்று சாப்பிடுவதே நல்லது. நன்கு கனிந்த பழங்களே சாப்பிட உகந்தவை.

நாம் ஒவ்வொரு இதழிலும் பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முக்கனியான பலாவுக்கு ஈடு இணையாக கூறப்படுகின்ற துரியன் பழத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

துரியன் பழம் பலாப்பழத்தைப் போல் இருக்கும். பலாப் பழத்தை விட சற்று சிறியதாக இருக்கும். வெளிப்புறத்தில் கூர்மையான முட்கள் இருக்கும். இது பலாப் பழத்தைப் போலவே சுளைகளைக் கொண்டது.

துரியன் பழம் இந்தியாவில் கேரள மலைப்பகுதியில்
விளைகிறது. ஆசியாவில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை போன்ற இடங்களில் விளைகிறது. மலேசியாவிலும், தாய்லாந்திலும் அதிகம் விளைகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் இவை அதிகம் வளர்கின்றன.

துரியன் பழம் அதிக மருத்துவத் தன்மை கொண்ட பழங்களுள் ஒன்று. இதன் மணம் ஒருவித வெறுக்கத்தக்க நாற்றத்தைக் கொண்டதுபோல் இருக்கும். ஆனால் சாப்பிட ஆரம்பித்தால் ஒருவர் முழுப் பழத்தையும் சாப்பிடும் அளவுக்கு சுவை கொண்டது.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இப்பழத்திற்கு ஏற்ற சீசனாகும். மலேசியா போன்ற நாடுகளில் எப்போதும் சீசன் உண்டு

சீனர்கள் சாப்பிடும் முக்கிய பழங்களில் துரியன் பழமும் ஒன்று.

உடல் வலுவடைய
சிலருடைய உடல் சத்து குறைவினாலும், மது, புகை போதை போன்ற தீய பழக்கங்களினாலும் உடல் வலுவிழந்து இருக்கும். இதனால் இவர்களின் உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடுகின்றது.

இவர்கள் வாரம் இருமுறை துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இரத்தம் சுத்தமடைய
இரத்தத்தில் அதிக கொழுப்பு பொருட்கள் படிவதால் இரத்த அடைப்பு ஏற்பட்டு இரத்தம் அசுத்தமாகிறது. இந்த கொழுப்பு சத்தை கரைத்து கலோரிகளாக மாற்றி இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.

ரம்பு புத்துணர்வடைய
தற்காலத்தில் பெரும்பாலானோர் நரம்பு தளர்வு நோயால் பாதிக்கப்படுகின்றனர். எரிச்சல், கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், போதிய உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் நரம்புகள் எளிதில் பலவீனமடைகின்றன. இந்தக் குறையை போக்க துரியன் பழம் மிகவும் பயன்படும்.

கிடைக்கும் காலங்களில் துரியன் பழத்தை வாங்கி சாப்பிட்டுவந்தால் நரம்புகள் புத்துணர்வடையும்.

கருப்பை பலப்பட
கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும். இத்தகைய பிரச்சனை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும்.

மேலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.

மலச்சிக்கல் நீங்க
மலச்சிக்கலை நோயின் தலைவாசல் எனக் கூறலாம். மலச்சிக்கலை நீக்கினாலே நோயின்றி நூறாண்டு வாழலாம். மலச்சிக்கலை நீக்கும் குணம் துரியன் பழத்திற்கு உண்டு. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியைக் ஏற்படுத்தும்.

கண்களின் பார்வை நரம்புகள் பலப்படும்.

தோலை பாதுகாத்து சருமத்தை மிளிரச் செய்யும்

எனவே கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு பயனடையலாமே.

மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

மருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்
பொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்அருந்துவார்கள். எல்லா வகைப் பழங்களுமே உடலுக்கு உகந்தவைதான் என்றாலும் மாதுளம் பழத்திற்கு என்று எப்போதுமே தனி மவுசு உள்ளது.

அதிலும் சமீப காலமாக மாம்பழ ஜூஸ், திராட்சைப் பழ ஜூஸ் போன்ற மற்ற ப்ழங்களின் ஜூஸ்களைக் காட்டிலும் மாதுளம் பழச் சாற்றில் அதிகளவிலான பலன்கள் உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் மாதுளம் பழ்ச் சாறுகளின் விற்பனையும் மேலோங்கியுள்ளது.

உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை பல்வேறு நாளிதழ்களும், மருத்துவ இதழ்களும் வெளியிட்டு மாதுளம் பழத்தின் புகழை மேலும் பிரபலப்படுத்தி விட்டன.

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் பல இடங்களில் மாதுளம் பழம் பற்றிய தகவல் இடம்பெறுகிறது. ஆதாம், ஏவாள் தோன்றிய காலந்தொட்டே, ஈடன் தோட்டத்திலேயே மாதுள மரங்கள் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால், மாதுளம் பழத்தின் மீதான புனிதமும், எதிர்ப்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது எனலாம்.

கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் மாதுளம் பழத்தின் அளவிடற்கரிய சத்துகளையும், மருத்துவ பலன்களையும் சொல்லி மாளாது. தற்போது ஹோட்டல்கள், ஜூஸ் கடைகள், விருந்து-விழா நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் மாதுளம் பழ ஜூஸ்-க்கு தனியிடம் கிடைத்துள்ளது.

உணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை `சூப்பர் புரூட்' என அழைக்கிறார்கள். ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது.

முன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது. உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் இதன் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது.

அன்றாடம் மாதுளம் பழ ஜூஸ் அருந்தி வர, ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்றத்தை அது சீராக்கும் என்றும், பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது.

தவிர, குழந்தைப்பருவத்தில் நாம் நண்பர்களுடன் விளையாடிய நாட்களை நினைவுகூரும் தன்மையும் இந்த பழத்திற்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

மாம்பழம்:

புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. இவற்றுள் இந்திய சிற்றினமே (Mangiferra indica) உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மாம்பழம் உலகெங்கும், குறிப்பாக ஆசியாவில், கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும், பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன.

இந்தியாவின் வேதங்களில் மா பற்றிய குறிப்புகள் அதை கடவுள்களின் உணவாகக் குறிக்கின்றன. மேங்கோ(Mango) என்ற ஆங்கிலப் பெயர் 'மாங்காய்' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்து உருவானதே ஆகும். மேலும் மாம்பழம் பண்டைய தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாகும்.

இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் கி.மு 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரென்சு மற்றும் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தனர்.

மாம்பழம் நீன்ட காம்புகளுடன் மரக்கிளைகளில் கொத்தாய் தொங்கும். பழங்கள் 10 - 25 செ.மீ நீளமும், 7 - 12 செ.மீ விட்டமும், 2.5 கிலோகிராம் வரை எடையும் உடையவை. காய்கள் பச்சையாகவும், பழங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பெருபாலும் இரகத்தைப் பொருத்து நிறம் மாறினாலும், சூரியன் படும் பாகங்கள் சிவப்பாகவும், மற்ற இடங்கள் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கிறது. பழத்தின் நடுவில் கடின ஓடுடைய ஒற்றை விதை காணப்படும். இரகத்தைப் பொருத்து இந்த ஓடு நார்களுடனோ வழுவழுப்பாகவோ இருக்கும். விதை 4 - 7 செ.மீ நீளமும், 3 - 4 செ.மீ அகலமும், 1 செ.மீ தடிமனும் கொண்டு, ஒரு மெல்லிய விதை உறையுடன் இருக்கும்.

மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. இந்தியாவில், இது மிக அதிக அளவில் காணப்படும் பழக்கம். பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில், மாம்பழக்கூழில் சர்க்கரை சேர்த்து உலர்த்தப்பட்டு சிறு துண்டுகளாக மிட்டாய் போலவும் உண்ணப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், மற்றொரு பிரபலமான பானம், மாம்பழத்தையும் தயிரையும் கலந்து செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி ஆகும்.

மாங்காயும், பலவிதமாக உலகெங்கும் உண்ணப்படுகிறது. இந்தியாவில், மாங்காய் துண்டுகள் மிளகாய்த் தூள் அல்லது உப்பு சேர்த்து உண்ணப்படுகின்றன. மேலும் மாங்காயைக் கொண்டு குழம்புகள், ஊறுகாய்கள், பச்சடிகள் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், மாங்காய்கள் ருஜக் அல்லது ரொஜக் எனப்படும் புளிப்பு பச்சடி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில், மாங்காய்கள் 'பகூங்க்' எனப்படும் மீன் அல்லது இறால் கொண்டு தயாரிக்கபடும் கூழுடன் உண்ணப்படுகின்றன. மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் சட்னி இனிப்பாகவோ, புளிப்பாகவோ, காரமாகவோ பல நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில், மாங்காயைக் காயவைத்து அரைத்து 'அம்ச்சூர்' என்ற சமையல் பொடியாக பயன்படுத்தப்படுகிறது.

உடல் நல பலன்கள்
மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொருத்து பழச்சதை மிருதுவாகவோ, கூழாகவோ, உறுதியாகவோ இருக்கும்.

மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும், கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்கு காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும், இரத்த இழப்பு நிற்கும், இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர்.

இந்திய துணி வகைகளில் மாம்பழ வடிவம் அழகுக்காகப் பயன் படுத்தப்படுகிறது.

வகைகள் அல்லது இரகங்கள்
கறுத்த கொழும்பான்
வெள்ளைக் கொழும்பான்
பங்கனப்பள்ளி
மல்கோவா
ருமானி
திருகுணி
விலாட்டு
அம்பலவி [கிளி சொண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு]
செம்பாட்டான்
சேலம்
பாண்டி
களைகட்டி
பச்சதின்னி
கொடி மா
மத்தள காய்ச்சி



வாழைப்பழம்:

மருத்துவப் பயன்மிக்க மூலிகைகளுள் வாழையும் ஒன்று. இதில் மலைவாழை, மொந்தன், பூவன், பேயன், ரஸ்தாலி ஆகியவை முக்கியமானவை.

மலச்சிக்கல், மூலநோயால் அவதியுறுவோருக்கு பூவன் பழமும், வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்படுவோருக்கு பேயன் பழமும் தேவை. சுலபத்தில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குவது மலைவாழை.

ரஸ்தாலியில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம்.

சோரியாசிஸ், தோல் தொற்றுக்கள்,ரத்தத்தில் உண்டாகும் தொற்றுக்கள், ரத்தக் குறைபாடுகள் ஆகியவற்றை வாழைத் தண்டு போக்குகிறது. பல மருத்துவப் பண்புகளை இது உள்ளடக்கியிருக்கிறது.

வாழைச்சாறு வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது.

மூலத்தால் கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது. ரத்த சிவப்புச் செல்களை உருவாக்குவதில் வாழைக் காய்க்கு நிகரில்லை. அதிகமாக இதை சாப்பிட்டால் வயிற்றில் வாயுத் தொல்லை உண்டாகும்.

வாழைப்பழத்திற்கு இளக்கும் தன்மை உண்டு. இதில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, வைட்டமின் ஆகியவை உள்ளன. சில நோய்களுக்கு வாழையை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்களேன்.

தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம்- குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சரியாகும்.

காயங்கள்- தோல் புண்களுக்கு- தேங்காய் எண்ணெயை மஸ்லின் துணி யில் நனைத்து புண்கள்மேல் போட்டு இவற்றின் மீது மெல்லிய வாழையிலையை கட்டுமாதிரி போடவேண்டும்.

சின்ன அம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்கவைக்கவேண்டும். இதை தொடர்ந்து செய்தால் குணமாகும்.

சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள்- பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி சாம்பலை எடுத்து கால் தேக்கரண்டி சாம்பலை தேனில் குழைத்து சாப்பிட்டுவர மேற்சொன்னவை சரியாகும்.

அஜீரணம், மூலநோய்- பாலுடன் ஒரு வாழைப்பழம்சாப்பிட்டுவர அஜீ ரணம் சரியாகும். தொடர்ந்து 2-3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.

காசநோய்- அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்து தினமும் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வர சரியாகும்.

சின்ன அம்மை, டைபாய்டு, மஞ்சட் காமாலை- தேனில் வாழைப் பழத்தைப் பிசைந்து தினம் இரு வேளை வீதம் சாப்பிடவேண்டும்.

இருமல்- கருமிளகு கால் தேக் கரண்டி எடுத்து பொடி செய்து அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.

சிறுநீரக நோய்கள் மற்றும் இரத்தக் குறைபாடுகள்-நெல்லிச்சாறு அரைக் கரண்டியும் பழுத்த வாழையை கலந்து 2-3 வேளை சாப்பிட்டு வர மேற் சொன்ன குறைபாடு நீங்கும்.

1.செவ்வாழைப்பழம் - கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்.
2.பச்சை வாழைப்பழம் - குளிர்ச்சியை கொடுக்கும்
3.ரஸ்தாளி வாழைப்பழம் - கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4.பேயன் வாழைப்பழம் - வெப்பத்தைக் குறைக்கும்.
5.கற்பூர வாழைப்பழம் - கண்ணிற்குக் குளிர்ச்சி
6.நேந்திர வாழைப்பழம் - இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்.

நட்சத்திர பழம்

பழங்களின் மருத்துவப் பயன்கள் எண்ணற்றவை. உடலுக்கு நேரடியாக பலனை கொடுப்பவையும் இவையே. நட்சத்திரப் பழத்தின் மருத்துவக் குணங்களை தெரிந்துகொள்வோம்.

நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப் படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது.

இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர்.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது.

குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா , ஹவாய், பிளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.

இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். மேலும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று.

குளிர்காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும்.

மலச்கிக்கலைப் போக்க
ஸ்டார் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும் வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலின்றி வாழலாம்.

மூல நோயின் பாதிப்பு குறைய
அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட ஸ்டார் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.

சரும பாதுகாப்பு

மழைக் காலத்தில் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். ஸ்டார் பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு உண்டு. ஸ்டார் பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நரம்புகள் பலப்பட
ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும்.

10 கிராம் ஸ்டார் பழத்தில்

கார்போஹைட்ரேட்ஸ் – 6.73 கிராம்

சர்க்கரை – 3.98 கிராம்

கொழுப்பு – 0.33 கிராம்

புரோட்டீன் – 1.04 கிராம்

பான்தோதினிக் அமிலம் – .39 கிராம் %

போலேட் – 12 கிராம்

வைட்டமின் சி – 34.4 கிராம்

பாஸ்பரஸ் – 12 மிலி கிராம்

பொட்டாசியம் – 133 மிலி கிராம்

துத்தநாகம் – 12 மிலிகிராம்

ஸ்டார் பழம் தற்போது பழக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஸ்டார் பழத்தை அனைவரும் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

பேரீச்சை:

இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.

வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை. இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதன் காய் கர்ச்சூரக்காய் என்று வழங்கப் படுகின்றது.

பேரீந்தெனுங்கனிக்குப் பித்தமத மூர்ச்சை சுரம்
நீரார்ந்த ஐயம் நெடுந்தாகம் - பேரா
இரத்தபித்த நீரழிவி லைப்பறும் அரோசி
உரத்த மலக் கட்டுமறும் ஓது.
- அகத்தியர் குணபாடம்

கண்பார்வை தெளிவடைய

பொதுவாக நம் இந்திய குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மெலிந்த குழந்தைகளுக்கு
சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள். பள்ளிக்குச் சென்று வந்தவுடன் கால் முட்டிகளில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் தேறாமல் இருப்பார்கள். இதை ஆங்கில மருத்துவரிடம் காண்பித்தால் சாதாரண வலி என்று கூறுவார்கள். ஆனால் சித்த மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்பு ஒரு காரணம் என்கின்றனர்.

வர்ம பரிகார நூல்கள் கூட கால்சியம் சத்து குறைவால் ஈரல் பாதிப்பு ஏற்படும் என்கிறது. இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.
மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள். சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது. இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.

பப்பாளி

திரு.அ.சுகுமாரன்

ஆப்பிளும் ஆரஞ்சும் பெறும் மதிப்பை பழ வகைகளில் அதிக சத்து வாய்ந்த பப்பாளி. ஏனோ பெறவில்லை .விலையும் ஏனோ மிக மலிவே ஆனால் வாங்குவோர் தான் மிகக் குறைவு அதிலும் அதைக் குறித்து பலவேறு வேறு தவறான கருத்துக்கள் வேறு .உலவுகின்றன.

பப்பாளி உலகின் வெப்ப மற்றும் மிதவெப்ப நாடுகளில் ஏராளமாக வளர்கிறது. இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. பப்பாளி பழம் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து 16 ஆம் நுற்றண்டில் டச்சு வணிகர்களால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பின்பு இந்தியாவில் இருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பரவியது .நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வீட்டுக்கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அற்ப்புத மரம் இது.

பச்சையும், மஞ்சளும் கலந்த பப்பாளிப் பழங்களில் “என்ஸைம்” எனப்படும் நொதிகள் அடங்கியுள்ளன. இவை தோலிலுள்ள செல்களை மிருதுவாக்கி, அழுக்குகளையும் இறந்த செல்களையும் போக்கக் கூடியவை.

பழத்தின் மஞ்சள் நிற சதைப்பகுதியை எல்லாவிதமான சருமம்கொண்டவரும் முகத்திற்கு மாஸ்க்காகப் போடலாம். மற்றைய பழங்களை விட பப்பாளியில் கரோட்டின், வைட்டமின் ‘ஏ’, ‘சி’ சத்துகள் நிறைந்துள்ளன. குறைந்த கலோரியில் நிறைந்த சத்துகளைக் கொடுக்கக்கூடிய எளிய மிகவும் மலிவான பப்பாளி எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் இனிய பழம் ஆகும்.

பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்னும் நொதிப் பொருள் ஜுரண சக்திக்கு ஏற்றது. “ஆல்ஃபா ஹைடிராக்ஸி ஆஸிட்” எனப்படும் பழ ஆசிட் பப்பாளியில் இருப்பதால் இது சருமத்தை மிருதுவாக்கும். சருமத்தில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும்.

அஸ்கார்பிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, தயாமின், ரிபோபிளேவின் மற்றும் நயாசின் சத்துகள் அடங்கியுள்ளன. சோடியம் பொட்டாசியம் சத்துகளும், குறைந்த சர்க்கரை அளவும் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பிற்கும், தலை சுத்தம் செய்யும் திரவம் செய்யவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

பப்பாளி மரத்தின் இலை, காய், பழம், பால் எல்லாமே மருத்துவ பயன்கள் உடையது. உடல் பருமனைக் குறைக்கவும் தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது பப்பாளிக்காய்.

பப்பாளிப் பழத்திற்கு உடல்வலிமை, ஆண்மை தரும் சக்தி உண்டு. சொறி, சிரங்கு, காயம் ஆகியவற்றைப் போக்கிவிடும். கண்பார்வை கூர்மையடையவும், நீரடைப்பு குணமாகவும், இரத்தம் ஊறவும், பல் சம்பந்தமான கோளாறுகள் நீக்கவும் இது பயன்படுகிறது. பப்பாளி இலையை கசக்கிச் சாறுபிழிந்து அதை தினமும் படர் தாமரையின் மேல் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வர படர்தாமரை குணமாகும்.

சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.

பெண்கள் சிவப்பழகை பெற செய்ய வேண்டியது மிக சுலமமான சிகிச்சை .அழகு
கலை நிலையங்கள் கோபம் கொள்ளக்கூடாது .

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள் இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.
20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

பப்பாபப்பாளிக் காயால் உடலில் ஏற்படும் வாதவலி நீங்கும். இதை பாலூட்டும் தாய்மார்கள் சமைத்து உண்டுவர தாய்ப்பால் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு சிக்கல் தீரும். மேலும் வயிற்றிலுள்ள கிருமிகள் அழியும். பப்பாளிக்காயின் பாலை தேள்கொட்டிய இடத்தில் தேய்க்க விஷம் இறங்கும். இந்த பாலை நமைச்சல் உண்டாக்கும் படைகளுக்கு தடவிவர நமைச்சல் அடங்கி விரைவில் மறைந்து விடும்.

வாரம் இருமுறை பப்பாளிக் காயை சமைத்து உண்டு வர உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது. இதை அதிகமாக வேக வைத்தால் வைட்டமின் ‘இ’ சத்து குறைந்து விடும்.

வைட்டமின் ‘ஏ’ என்ற உயிரிச்சத்து நிறைந்தது. உடலில் அதிக இரத்தத்தை உண்டு பண்ணும். மனித உடல் வளர்ச்சியடையவும், உடல் பலம் பெறவும், இரத்தத்தை விருத்தி செய்யும் நரம்புகளுக்கு உறுதியைக் கொடுக்கவும், கண்பார்வையைக் கூர்மைப்படுத்தவும், பற்களைப் கெட்டிப்படுத்தி ஈறுகளுக்கு பலத்தைக் கொடுக்கவும், பல் சம்பந்தமான நோய் வராமல் தடுக்கவும், அறிவை வளரச் செய்யவும், நல்ல ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் கூடிய அபார சக்தி வைட்டமின் ‘ஏ’ உயிரிச்சத்துக்குத்தான் உண்டு.

35 கிராம் இறைச்சியைச் செரிப்பதற்கு ஒரு கிராம் பப்பாயின் போதும் என்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள். அதனாலதான் மாமிச உணவுத் தயாரிப்புக்களை மென்மைப்படுத்த பப்பாயின் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த பப்பாயின் நொதிமம் பழுக்காத பப்பாளிக் காயில் நிறைய இருக்குது. பப்பாளி இலை, தண்டு போன்றவற்றில் கொஞ்சம் இருக்குது. குடல் புண், அஜீரணம் போன்ற வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் பப்பாளிக்காய் சாப்பிடலாம். மேலும் உணவுச் சத்துக்களை உறிஞ்சக் கூடிய ஒரு வகையான ஒட்டுயிரிகள் நமது குடலில் சிலசமயம் வளர்கின்றன. அவற்றை இந்தப் பப்பாயின் நொதிமம் கட்டுப்படுத்துகின்றது.

பப்பாளிப் பழம் உடம்புக்கு சூட்டை தரும் என்பார்கள். அதனால கருவுற்ற பெண்கள் இதைத் தின்றால் கருக்கலைப்பு ஏற்பட்டுவிடும் என்று சொல்வார்கள். இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. எனினும் சாதாரண காலத்தில் இதைத் சாப்பிடலாமே . புற்றுநோய் செல்களில் பைஃய்ரின் என்ற ஒரு நார்ப் பொருள் இருக்கின்றது. இது தான் புற்று நோயை நமது உடம்பின் மற்ற பகுதிகளுக்கு பரப்புகின்றது. இந்த பைஃப்ரினை கட்டுப்படுத்தும் ஆற்றல் பப்பாயினுக்கு உண்டு. அதனால புற்றுநோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சை எடுப்பவர்கள், பப்பாயினை சேர்த்துக் கொண்டால் சீக்கிரம் குணமடையலாம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

பப்பாளி மரத்தின் தண்டில் இருந்து எடுக்கப்படும் பாலினால் காயம் கட்டி, பரு போன்ற புண்களைக் குணப்படுத்தலாம். காயத்தின் மீது பப்பாளி துண்டுகளை வைத்து அகலமான பப்பாளி இலைகளால் கட்டுப் போட்டுவிடுகிறார்கள். அப்புறம் பப்பாளி மரத்தின் பட்டை இருக்கே அது பல்வலியைப் போக்கும். அதனாலதான் சூயிங்கம் தயாரிப்பில் பப்பாளிப் பால் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது.

பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

பப்பாளியில் பீட்டா கரோட்டின் என்ற சத்தும் ஏராளமாக காணப்படுகின்றது. இது சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. பப்பாளியில் பல்வேறுவிதமான என்சைம்கள் காணப்படுகின்றன. இதிலுள்ள “பப்பாயின்” என்ற என்சைம் ஆனது மிகச்சிறந்த செரிமான ஊக்கியாக செயலாற்றுகிறது. இது உணவிலுள்ள புரதச்சத்தானது எளிதில் செரிக்க உதவுகிறது. எனவேதான் இறைச்சியை மென்மையாக வேகவைப்பதற்கு பப்பாளிக்காய் துண்டுகளையும் உடன் சேர்த்து சமைக்கும் பழக்கம் நமது நாட்டில் உள்ளது.

இந்த பப்பாயினின் வலி நீக்கும் தன்மையானது அமெரிக்க உணவு மற்றும் வேளாண்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதுகெலும்புதட்டு புறந்தள்ளல் போன்ற நோய்நிலைகளில் இதிலிருந்து தயாரிக்கப்படும் ஊசிமருந்தானது நரம்பு அழுத்தத்தால் ஏற்படும் வலியைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. கோதுமை புரதத்தை எளிதில் செரிக்கச் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. குடல்புண்ணால் அவதிப்படுவோருக்கும் பப்பாயின் பயன்படுகிறது.

பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உள்நாக்கு வளர்ச்சியை (டான்சில்) குறைக்கிறது. பப்பாளி பழரசமானது கழலைகள், கட்டிகள், புற்றுநோய் மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. இதன் வேரானது, கருப்பைக் கட்டியை அகற்றப் பயன்படுகிறது. ஆப்பிரிக்காவில் பப்பாளி வேரானது கிரந்தி எனும் பால்வினை நோயை (சிபிலிஸ்) குணப்படுத்தவும், இலையானது இழுப்பு (ஆஸ்துமா) நோயின்போது புகைபிடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஜாவா தீவைச்சோந்த மக்கள் பப்பாளி (வாத) நோயிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகின்றனர். கியூபாவில் பப்பாளிப் பாலானது (சோரியாஸிஸ்) காளாஞ்சகப்படை மற்றும் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பப்பாயின் குடலில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்கவும், பூச்சிகளை அழிக்கவும் நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள ஆய்வுகள் பப்பாளியின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது காயங்களை ஆற்றவும் அறுவைசிகிச்சையின் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், புற்றுநோய் சிகிச்சையின்போது ஏற்படும் தீய பக்கவிளைவுகளிலிருந்து விடுபடவும், மூட்டுவாத நோய்களுக்கும் கூட உதவலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

மரை போன்ற பாதம் இல்லை என ஏங்குபவரா நீங்கள் ? மென்மையான பாதங்களுக்கு எளியவழி இதோ !

பப்பாளி கூழ்-2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், விளக்கெண்ணை-கால் டீஸ்பூன், மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பாதங்களில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.உங்கள் பாதங்கள் சுருக்கம் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும்.

பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் கூட சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகச் சிறந்த கறை நீக்கியாக செயல்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.

பப்பாளி விதையிலுள்ள "கார்பைன்" என்ற நச்சானது, நாடித்துடிப்பை குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் யாரும் பப்பாளி விதையைச் சாப்பிடுவதில்லையாகையால் இதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. கன்னடத்தில் பறங்கி என்று அழைக்கப்படும் பப்பாளிக்கு இந்தியில் என்ன பெயர் தெரியுமா? பபிதா.!

பப்பாளியை ஒரு பணப்பயிராக வளர்த்து தினமும் அதன் காயில் இருந்து
பாலை மட்டும் வடித்து எடுத்து ,பின் பழத்தை விற்றுவிடலாம் .அதன் பாலுக்கு நல்ல வில்லை கிடைக்கிறது .அதில் இருந்து பாப்பயின் .பெக்டின் முதலியவை தயாரிக்கப்படுகிறது .இன்னும் மேல்விபரம் வேண்டுவோர் தனி மடலில் தொடர்பு கொள்க !
எதோ இந்தப்பழம் கொஞ்சம் விலை குறைவாக இதுவரை கிடைக்குது .விலை ஏறாமல் இருக்கணும்.


நீ‌ரி‌ழி‌வி‌ற்கு ஏ‌ற்ற நாவ‌ற்பழ‌ம்
நாவல் பழத்தின் தாயகம் இந்தியா. இப்போது வெப்பமண்டலப் பகுதிகள் அனைத்திலும் மழைக்காலத்தில் நாவல் பழம் நன்கு கிடைக்கிறது.

நாவல் பழத்தில் இரு வகைகள் உள்ளன. ஒன்று உருண்டை ரகம். இன்னொன்று நீள ரகம். இவற்றுள் நீள வடிவில் பெரியதாய் இருக்கும் பழவகையில்தான் இனிப்புச் சுவை அதிகம்.

பெரும்பாலான பழங்களை அப்படியேதான் உட்கொள்ள வேண்டும். நாவற்பழங்களை மட்டும் சிறிதளவ உப்புச் சேர்த்து சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும்.

கல்லீரலும் செரிமான உறுப்புகளும் நன்றாய் இயங்க பண்டைய மருத்துவரான சரகர் என்பவர் நாவல் பழத்தை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்.

ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும் நாவல் பழத்தில் நீரிழவு குணமாகிறது.

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி ஆகிய தாது உப்புகளும் வைட்டமின்களும் உள்ளன. புரதச்சத்து 0.7%ம், மாவுச்சத்து 14%ம் இப்பழத்தில் உள்ளன.

சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைய
நாவல் பழத்தின் விதைகளைக் காய வைத்து இடித்துப் பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தடவைக்கு 3 கிராம் வீதம் நான்கு வேளைகள் தண்ணீரில் கலந்து இந்தத் தூளை உட்கொண்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறையும்.

ஆயுற்வேத மருத்துவத்தில் நீரிழிவு நோயாளிகள் குணம் பெற பின்வருமாறு செய்ய வேண்டும். அதாவது, நாவற்பழ மரத்தின் பட்டைகளை எரித்துச் சாம்பல் ஆக்கி அதனை பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

அப்பொடியில் அரை தேக்கரண்டி எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் அருந்த வேண்டும். பிறகு இரவு உணவிற்குப் பிறகு இந்தத் தூளை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்த வேண்டும். இப்படி அருந்தினால் நீரிழிவு குறையும். பிறகு தூளின் அளவை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும்.

சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர்ப்போக்குக் குறையும்.

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.

மூல நோய்க்கு
மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது.

பழம் அதிகம் விளையும் காலத்தில் தினசரி இரண்டு அல்லது மூன்று பழங்களை உப்புச் சேர்த்து அல்லது தேன் சேர்த்து காலையில் சாப்பிட வேண்டும்.

இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.

தொழு நோய்க்கு நல்ல மருந்து
நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், இரத்தம் சுத்தமாகி தொழுநோய் முற்றிலும் குணமாகவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணிய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.

அளவோடு சாப்பிட வேண்டும்
நாவல் பழத்தை குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் அளவுடன்தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கட்டுதல் ஏற்படும்.

பழத்தையோ, பழச்சாற்றையோ வெறும் வயிற்றில் சாப்பிடவேக் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் 3 மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாது