Thursday, July 25, 2013

அல்சர் – வயிற்றில் புண்


அல்சர் – வயிற்றில் புண்

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் “அல்சர்” ஒரு அன்றாட பிரச்சனையாக மாறிவிட்டது. ஜீரணமண்டலத்தில், அல்சர் எனும் புண்களை, அவை எந்த இடத்தில் உண்டாகின்றன என்பதை பொறுத்து, வாய்ப்புண், உணவுக்குழாய் புண், வயிற்றுப்புண், சிறுகுடலின் முன்பகுதி புண்  என்று பிரிக்கலாம்.
வாயிலும், உணவுக்குழாய்களிலும் ஏற்படும் அல்சருக்கு முக்கியகாரணம் வயிற்றிலிருந்து உணவுக்குழாயுக்கும், வாய்க்கும், அமிலம் ஏறிவிடுவது தான் இரப்பை (வயிறு) க்கும், உணவுக்குழாயுக்கும், நடுவே ஒரு ஒரு வழி வால்வு உள்ளது. இது வயிற்றிலிருந்து எதுவும் மேலேறா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. பலருக்கு இந்த வால்வு சரியாக செயல்படாது. இதனால் ஜீரணச்சாறு மேலேறிவிடுகிறது. இதைத்தான் ‘எதுக்கலிக்கிறது’ என்கிறோம். வாயில் பித்த நீர் கரிப்பது போன்ற புளிப்புணர்ச்சி தோன்றும். ஒரு வழி வால்வு தளர்ந்து போனால் இந்த மேலேறும் அமிலப்பிரச்சனை. வால்வு கெட்டியாகி விட்டால் மூடிக் கொண்டே இருக்கும். இதைதிறப்பது கடினமாகிவிட்டால், உணவுக் குழாயிலிருந்த உணவு, வயிற்றுக்குள் செல்லாது. உணவுக்குழாயின் சுவர்கள் வயிறு, குடல் போன்றவற்றின் சுவர்கள் போல, அமிலத்தை தாங்கும் சக்தியுடையவை அல்ல. எனவே அவை சிவந்து, கன்றிப்போய் புண்ணாகி விடுகின்றன. குறிப்பாக உணவுக் குழாயின் கீழ்பாகத்தில் இவ்வாறான பாதிப்பை அதிகம் ஏற்படும். அமிலம் இன்னும் மேலேறி வாய்ப்புண்களை உண்டாக்கி, குரல் வளையத்தையும் தாக்கலாம். குரல் இழப்பு, மாறுதல் ஏற்படலாம். ஏன், அமிலம் மூச்சுக்குழாயை கூட தாக்கி, நுரையீரலில் தொற்று நோயை உண்டாக்கலாம்.
உணவுக் குழாய் இந்த அமிலத்தாக்குதலை சமாளிக்க, வயிற்றின் சுவர்களின் திசுக்கள் போலவே, தனது செல்களை மாற்றிக்கொள்ள முயலும். இதை ‘மெட்டப்பிளாசியா’  என்பார்கள். இந்த திசுக்களை மாற்றும் முயற்சி, புற்றுநோயாக, அடினோ கார்சினோமா மாறுகிறது.
இதைத்தவிர்க்க:-
இப்போது வயிறு, குடல்களில் ஏற்படும் அல்சரைப்பற்றி தெரிந்து கொள்வோம் பொதுவாக, வயிற்றில், குடலில் ஏற்படும் புண்களை பெப்டிக் அல்சர்  என்பார்கள்.
மருத்துவமொழியில் பெப்டிக் அல்சர் என்றால், வயிறு, சிறுகுடல் சுவர்களின் ‘ம்யூகோஸா’ படலத்தை, ஜீரண சாற்றில் உள்ள அமிலம், பெப்சின் சிதைத்து அழிப்பது. பெப்டிக் அல்சர்கள் வயிற்றில் (இரப்பையில்) உண்டானால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும், சிறுகுடலின் முன் பகுதியில் ஏற்பட்டால் “டியோடினல்  என்றும் குறிப்பிடப்படும் பெப்டிக் அல்சர் என்ற வார்த்தை வயிற்றில் ஏற்படும் புண்களை குறிப்பதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
காரணங்கள்
1. குடலில் மேற்பரப்பின் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு  நாள்பட்ட, எரிச்சல் உண்டாக்கும் அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு, அங்கங்கே சிதைந்து விடும். அதிக அமில சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகளாலும் புண்கள் தோன்றும். வயிற்று “லைனிங்கில்” ஓட்டை ஏற்பட்டு புண்கள் உருவாகும்.
2. முக்கிய காரணம் ‘ஹர்ரி’  – அவசரம், டென்ஷன், பதற்றம், ‘வொர்ரி’  – கவலை, பொறாமை, ‘கர்ரி’. காரசாரமான உணவு, மசாலா அதிக அமிலத்தை சுரக்க வைத்து, புண்களை உண்டாக்கும்.
3. வயிற்று அல்சர்களை தோற்றுவிக்கும் இன்னொரு முக்கிய காரணம்  ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற ஒரு வகை பாக்டீரியா. இவற்றை கண்டறிந்த மார்ஷல் மற்றும் வாரன் என்ற டாக்டர்களுக்கு 2005 ல் “நோபல்” பரிசு வழங்கப்பட்டது. இந்த பாக்டீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர், உணவுப்பொருட்களால் பரவுகிறது. வயிற்றமிலத்தை நீர்க்கவைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்கி, றாளடைவில் இந்த கேஸ்ட்ரைடீஸ், அல்சராக மாற இந்த எச். பைலோரி கிருமிகள் உதவுகின்றன.
4. அதிக அளவு மது அருந்துதல், புகைபிடித்தல்
5. தவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகழுவாமல் உணவு உண்பது, நகத்தை கடிப்பது.
6. அதிக டீ, காப்பி குடிப்பது.
7. ஆஸ்பிரின் போன்ற மருந்துகள்
8. ஸ்ட்ரெஸ், டென்ஷன் மனபரபரப்பு அடிக்கடி உணர்ச்சி வசப்படுதல்.
அறிகுறிகள்
இரப்பை (வயிறு) அல்சர் 
1. வயிற்றெரிச்சல், (நெஞ்செரிச்சல்), வயிறு மந்தம், வாயுக்கோளாறு,
2. அஜீரணம், வயிறுஉப்புசம்
3. வயிற்றில் மேல்புறத்தில் வலி அல்லது சங்கடம். சாப்பிட்டால் வலி உண்டாகும்
4. வாந்தி ஏப்பம், குமட்டல்,
5. மேல்வயிற்று வலி அல்சரின் முக்கிய அறிகுறி, இது இல்லாமலும் அல்சர் உருவாகலாம்.
டியோடினல் அல்சர்
1. நெஞ்செரிச்சல், வாயுக்கோளாறு
2. வலி வயிறு காலியானால் ஏற்படும். சாப்பிட்டவுடன் வலி குறையும்
3. அஜீரணம்
4. வாந்தி அநேகமாய் இருக்காது.
5. மேல்வயிற்று வலி அல்சரின் முக்கிய அறிகுறி, இது இல்லாமலும் அல்சர் உருவாகலாம்.
இரப்பை அல்சர் இருபாலருக்கும் ஏற்படும். டியோடினல் அல்சர்
ஆண்களை அதிகம் தாக்கும். டியோடினல் (சிறுகுடலின் முன்பாகம்) அல்சர், வயிற்று அல்சரை விட, அதிகமாக காணப்படுகிறது.
அல்சர்களால் ஏற்படக்கூடிய சிக்கல்கள்
1. அல்சர்களை தொடர்ந்த சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்தலாம். சில சமயங்களில் அல்சர்கள் வயிறு / சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று அடுத்த அவயங்களை (கணையம், கல்லீரல்) பாதிக்கும். இதனால் தீவிரமான வலி ஏற்படும்.
2. அல்சர்கள் வலியில்லாவிட்டாலும், உதிரப்போக்கை உண்டாக்கும். இரத்த வாந்தி அல்லது கருநிறமலம் ஏற்படும்
3. அல்சரை சுற்றியுள்ள திசுக்கள் வீங்கி, வயிறு – சிறுகுடல் பாதையை அடைக்கும். சாப்பிட்டவுடன், வயிறு மிகவும் கனமாகவும், உப்புசமும் இருந்தால் இந்த மாதிரி அடைப்புக்கு அறிகுறிகள்
சிகிச்சை
1. குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும்.
2. உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும்.
3. இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.
4. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும்.
5. வில்வ இலைகள் / பழங்கள் – இவற்றை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.
6. 250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும்.
7. பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது.
8. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.
9. மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது.
10. திரிபாலா சூரணம் (ஒரு தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.
11. கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
12. உங்களுக்கு அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா கலந்த காரசாரமான உணவு இவற்றை தவிர்க்கவும்.
13. உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.
14. ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.
15. கீழ்க்கண்டவற்றை தவிர்க்கவும் மிளகு, உளுந்து, கொள்ளு, ஆல்கஹால், கத்திரிக்காய், புளிப்பான பண்டங்கள், எண்ணை, காரம் செறிந்த உணவுகள்.

ஆயுர்வேத மருந்துகள்
சுகுமார க்ருதம், மஹா சங்கவடீ, நாரிகேள லவணம், சூல குடாரம் அவிபட்டிக்காரசூரணம்
பலமான, வலுவான வயிறு – குடல் சுவர்களை அமிலம் எப்படி பாதிக்கும்?
வயிற்றின் சுவர் கவசம் போன்ற புறத்தோலால் மூடப்பட்டுள்ளது. டியோடினம் (சிறுகுடலின் முதல் பகுதி) காரத்தன்மை உள்ள சளி சுரப்புகளால் பாதுகாக்கப்படுகிறது. டியோடினத்தில் அமைந்துள்ள பிரன்னர்  சுரப்பிகள் இந்த சளிப்பொருளை சுரக்கின்றன. இருந்தும் இந்த கவசங்கள் சிதைக்கப்பட்டு புண்கள் உண்டாகும் காரணங்களை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. ஆல்கஹால், தெரிந்த ஒரு வயிற்று ம்யூகோஸாவை சிதைக்கும் பானம். கருமிளகும் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மிளகாய் தூள், லவங்கம் ஜாதிக்காய், கடுகு இவை வயிற்றை “சிவக்கவைக்கும்” பல சரக்குகள் என்று தெரியவந்துள்ளது. சாலிசைலேட்ஸ் மற்றும் இதர மருந்துகளும் வயிறு – குடல் சுவர்களை பாதிக்கின்றன. வயிற்று அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கும் பொருள், காஃபி, டீயில் உள்ள காஃபின் (சிணீயீயீமீவீஸீமீ) ஆகும். இந்த காஃபின் இல்லாத காப்பியும் அமிலப்பெருக்கை தூண்டும். பூண்டு, முள்ளங்கி கடுகு இவைகளை தனித்தனியாக, அதிக அளவில் பயன்படுத்தினால் தான் அதிக அமிலம் சுரக்கிறது. கோலா கலந்த குளிர்பானங்களும் அதிக அமிலத்தை சுரக்க வைக்கும்.
அல்சர், வயிற்றில் புண், ஜீரணமண்டலம், அல்சர், புண்களை, வாய்ப்புண், உணவுக்குழாய் புண், வயிற்றுப்புண், சிறுகுடலின், இரப்பைக்கும், உணவுக் குழாய்க்கும், குரல் இழப்பு, நுரையீரலில், மெட்டப்பிளாசியா, புற்றுநோயாக, அடினோ கார்சினோமா, வயிறு, பெப்டிக் அல்சர், ம்யூகோஸா, கேஸ்ட்ரிக் அல்சர், டியோடினல், அவசரம், டென்ஷன், பதற்றம், கவலை, பொறாமை, டாக்டர்கள், கேஸ்ட்ரைடீஸ், எச். பைலோரி, மது அருந்துதல், புகைபிடித்தல், ஸ்ட்ரெஸ், டென்ஷன், மனபரபரப்பு, வயிறு மந்தம், வாயுக்கோளாறு, அஜீரணம், கணையம், கல்லீரல், உதிரப்போக்கை, டியோடினம்,
அல்சர் – வயிற்றில் புண் இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் “அல்சர்” ஒரு அன்றாட பிரச்சனையாக மாறிவிட்டது. ஜீரணமண்டலத்தில், அல்சர் எனும் புண்களை, அவை எந்த இடத்தில் உண்டாகின்றன என்பதை பொறுத்து, வாய்ப்புண், உணவுக்குழாய் புண், வயிற்றுப்புண், சிறுகுடலின் முன்பகுதி புண்  என்று பிரிக்கலாம். வாயிலும், உணவுக்குழாய்களிலும் ஏற்படும் அல்சருக்கு முக்கியகாரணம் வயிற்றிலிருந்து உணவுக்குழாயுக்கும், வாய்க்கும், அமிலம் ஏறிவிடுவது தான் இரப்பை (வயிறு) க்கும், உணவுக்குழாயுக்கும், நடுவே ஒரு ஒரு வழி வால்வு உள்ளது. இது வயிற்றிலிருந்து எதுவும் மேலேறா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. பலருக்கு இந்த வால்வு சரியாக செயல்படாது. இதனால் ஜீரணச்சாறு மேலேறிவிடுகிறது. இதைத்தான் ‘எதுக்கலிக்கிறது’ என்கிறோம். வாயில் பித்த நீர் கரிப்பது போன்ற புளிப்புணர்ச்சி தோன்றும். ஒரு வழி வால்வு தளர்ந்து போனால் இந்த மேலேறும் அமிலப்பிரச்சனை. வால்வு கெட்டியாகி விட்டால் மூடிக் கொண்டே இருக்கும். இதைதிறப்பது கடினமாகிவிட்டால், உணவுக் குழாயிலிருந்த உணவு, வயிற்றுக்குள் செல்லாது. உணவுக்குழாயின் சுவர்கள் வயிறு, குடல் போன்றவற்றின் சுவர்கள் போல, அமிலத்தை தாங்கும் சக்தியுடையவை அல்ல. எனவே அவை சிவந்து, கன்றிப்போய் புண்ணாகி விடுகின்றன. குறிப்பாக உணவுக் குழாயின் கீழ்பாகத்தில் இவ்வாறான பாதிப்பை அதிகம் ஏற்படும். அமிலம் இன்னும் மேலேறி வாய்ப்புண்களை உண்டாக்கி, குரல் வளையத்தையும் தாக்கலாம். குரல் இழப்பு, மாறுதல் ஏற்படலாம். ஏன், அமிலம் மூச்சுக்குழாயை கூட தாக்கி, நுரையீரலில் தொற்று நோயை உண்டாக்கலாம். உணவுக் குழாய் இந்த அமிலத்தாக்குதலை சமாளிக்க, வயிற்றின் சுவர்களின் திசுக்கள் போலவே, தனது செல்களை மாற்றிக்கொள்ள முயலும். இதை ‘மெட்டப்பிளாசியா’  என்பார்கள். இந்த திசுக்களை மாற்றும் முயற்சி, புற்றுநோயாக, அடினோ கார்சினோமா  மாறுகிறது.இதைத்தவிர்க்க:-  இப்போது வயிறு, குடல்களில் ஏற்படும் அல்சரைப்பற்றி தெரிந்து கொள்வோம் பொதுவாக, வயிற்றில், குடலில் ஏற்படும் புண்களை பெப்டிக் அல்சர் (றிமீஜீtவீநீ ஹிறீநீமீக்ஷீ) என்பார்கள். மருத்துவமொழியில் பெப்டிக் அல்சர் என்றால், வயிறு, சிறுகுடல் சுவர்களின் ‘ம்யூகோஸா’ படலத்தை, ஜீரண சாற்றில் உள்ள அமிலம், பெப்சின் சிதைத்து அழிப்பது. பெப்டிக் அல்சர்கள் வயிற்றில் (இரப்பையில்) உண்டானால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும், சிறுகுடலின் முன் பகுதியில் ஏற்பட்டால் “டியோடினல்  என்றும் குறிப்பிடப்படும் பெப்டிக் அல்சர் என்ற வார்த்தை வயிற்றில் ஏற்படும் புண்களை குறிப்பதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

காரணங்கள்
1. குடலில் மேற்பரப்பின் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு நாள்பட்ட, எரிச்சல் உண்டாக்கும் அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு, அங்கங்கே சிதைந்து விடும். அதிக அமில சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகளாலும் புண்கள் தோன்றும். வயிற்று “லைனிங்கில்” ஓட்டை ஏற்பட்டு புண்கள் உருவாகும்
.2. முக்கிய காரணம் ‘ஹர்ரி’  – அவசரம், டென்ஷன், பதற்றம், ‘வொர்ரி’– கவலை, பொறாமை, ‘கர்ரி’. காரசாரமான உணவு, மசாலா அதிக அமிலத்தை சுரக்க வைத்து, புண்களை உண்டாக்கும்.
3. வயிற்று அல்சர்களை தோற்றுவிக்கும் இன்னொரு முக்கிய காரணம் ‘பிமீறீவீநீஷீதீணீநீtமீக்ஷீஜீஹ்றீஷீக்ஷீவீ’ (ஹெலிகோபேக்டர் பைலோரி) என்ற ஒரு வகை பாக்டீரியா. இவற்றை கண்டறிந்த மார்ஷல் மற்றும் வாரன் என்ற டாக்டர்களுக்கு 2005 ல் “நோபல்” பரிசு வழங்கப்பட்டது. இந்த பாக்டீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர், உணவுப்பொருட்களால் பரவுகிறது. வயிற்றமிலத்தை நீர்க்கவைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்கி, றாளடைவில் இந்த கேஸ்ட்ரைடீஸ், அல்சராக மாற இந்த எச். பைலோரி கிருமிகள் உதவுகின்றன.
4. அதிக அளவு மது அருந்துதல், புகைபிடித்தல்
5. தவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகழுவாமல் உணவு உண்பது, நகத்தை கடிப்பது.
6. அதிக டீ, காப்பி குடிப்பது.
7. ஆஸ்பிரின் போன்ற மருந்துகள்
8. ஸ்ட்ரெஸ், டென்ஷன் மனபரபரப்பு அடிக்கடி உணர்ச்சி வசப்படுதல்.
அறிகுறிகள்இரப்பை (வயிறு) அல்சர்
1. வயிற்றெரிச்சல், (நெஞ்செரிச்சல்), வயிறு மந்தம், வாயுக்கோளாறு,
2. அஜீரணம், வயிறுஉப்புசம்
3. வயிற்றில் மேல்புறத்தில் வலி அல்லது சங்கடம். சாப்பிட்டால் வலி உண்டாகும்
4. வாந்தி ஏப்பம், குமட்டல், 
5. மேல்வயிற்று வலி அல்சரின் முக்கிய அறிகுறி, 
இது இல்லாமலும் அல்சர் உருவாகலாம்.டியோடினல் அல்சர்
1. நெஞ்செரிச்சல், வாயுக்கோளாறு
2. வலி வயிறு காலியானால் ஏற்படும். சாப்பிட்டவுடன் வலி குறையும்
3. அஜீரணம்
4. வாந்தி அநேகமாய் இருக்காது.
5. மேல்வயிற்று வலி அல்சரின் முக்கிய அறிகுறி,
 இது இல்லாமலும் அல்சர் உருவாகலாம்.இரப்பை அல்சர் இருபாலருக்கும் ஏற்படும். டியோடினல் அல்சர் ஆண்களை அதிகம் தாக்கும். டியோடினல் (சிறுகுடலின் முன்பாகம்) அல்சர், வயிற்று அல்சரை விட, அதிகமாக காணப்படுகிறது.

அல்சர்களால் ஏற்படக்கூடிய சிக்கல்கள்
1. அல்சர்களை தொடர்ந்த சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்தலாம். சில சமயங்களில் அல்சர்கள் வயிறு / சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று அடுத்த அவயங்களை (கணையம், கல்லீரல்) பாதிக்கும். இதனால் தீவிரமான வலி ஏற்படும்.
2. அல்சர்கள் வலியில்லாவிட்டாலும், உதிரப்போக்கை உண்டாக்கும். இரத்த வாந்தி அல்லது கருநிறமலம் ஏற்படும்
3. அல்சரை சுற்றியுள்ள திசுக்கள் வீங்கி, வயிறு – சிறுகுடல் பாதையை அடைக்கும்.
 சாப்பிட்டவுடன், வயிறு மிகவும் கனமாகவும், உப்புசமும் இருந்தால் இந்த மாதிரி அடைப்புக்கு அறிகுறிகள்சிகிச்சை
1. குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும்.
2. உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும்.
3. இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.
4. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும்.
5. வில்வ இலைகள் / பழங்கள் – இவற்றை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.
6. 250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும்.
7. பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது.
8. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.
9. மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது.
10. திரிபாலா சூரணம் (ஒரு தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.
11. கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
12. உங்களுக்கு அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா கலந்த காரசாரமான உணவு இவற்றை தவிர்க்கவும்.
13. உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.
14. ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.
15. கீழ்க்கண்டவற்றை தவிர்க்கவும் மிளகு, உளுந்து, கொள்ளு, ஆல்கஹால், கத்திரிக்காய், புளிப்பான பண்டங்கள், எண்ணை, காரம் செறிந்த உணவுகள்.ஆயுர்வேத மருந்துகள் சுகுமார க்ருதம், மஹா சங்கவடீ, நாரிகேள லவணம், சூல குடாரம் அவிபட்டிக்காரசூரணம்
பலமான, வலுவான வயிறு – குடல் சுவர்களை அமிலம் எப்படி பாதிக்கும்? வயிற்றின் சுவர் கவசம் போன்ற புறத்தோலால் (ணிஜீவீtலீமீறீவீuனீ) மூடப்பட்டுள்ளது. டியோடினம் (சிறுகுடலின் முதல் பகுதி) காரத்தன்மை உள்ள சளி சுரப்புகளால் பாதுகாக்கப்படுகிறது. டியோடினத்தில் அமைந்துள்ள பிரன்னர் (ஙிக்ஷீuஸீஸீமீக்ஷீ) சுரப்பிகள் இந்த சளிப்பொருளை சுரக்கின்றன. இருந்தும் இந்த கவசங்கள் சிதைக்கப்பட்டு புண்கள் உண்டாகும் காரணங்களை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. ஆல்கஹால், தெரிந்த ஒரு வயிற்று ம்யூகோஸாவை சிதைக்கும் பானம். கருமிளகும் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மிளகாய் தூள், லவங்கம் ஜாதிக்காய், கடுகு இவை வயிற்றை “சிவக்கவைக்கும்” பல சரக்குகள் என்று தெரியவந்துள்ளது. சாலிசைலேட்ஸ் (  மற்றும் இதர மருந்துகளும் வயிறு – குடல் சுவர்களை பாதிக்கின்றன. வயிற்று அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கும் பொருள், காஃபி, டீயில் உள்ள காஃபின் (சிணீயீயீமீவீஸீமீ) ஆகும். இந்த காஃபின் இல்லாத காப்பியும் அமிலப்பெருக்கை தூண்டும். பூண்டு, முள்ளங்கி கடுகு இவைகளை தனித்தனியாக, அதிக அளவில் பயன்படுத்தினால் தான் அதிக அமிலம் சுரக்கிறது. கோலா கலந்த குளிர்பானங்களும் அதிக அமிலத்தை சுரக்க வைக்கும்.

No comments:

Post a Comment